Wednesday, September 29, 2021

இயல்பு நிலை - யூ ஜி கிருஷ்ணமூர்த்தி

இயல்பு நிலை  - யூ ஜி கிருஷ்ணமூர்த்தி 

பொதுவாக நாம் ஆன்மீக ஆசிரியர்களை வாசிக்கையில் எவ்வளவு தான் என்னை தொடராதே என அவர்கள் அடித்து விரட்டினாலும் "குரு ஸ்தானம்" இயல்பாக அமைந்து விடுகிறது, அவர்கள் அளிக்கும் விளக்கங்கள் அல்லது விளக்கங்கள் மாதிரியானவை, விஷயங்கள் குறித்து explanatory தொனியில் இல்லாமல் விடை அறிய வந்தவனை நேர் பாதையில் செலுத்த ஒரு leading into தொனியில் இருப்பதைக் காணலாம். இந்த நூல் அப்படி ஒன்றாக இருக்குமோ என்ற சந்தேகம், ஏனெனில் யூஜி அனைத்து ஆன்மீக தேடல் கட்டமைப்புகளை நிராகரித்து கூறுவது போல் இருப்பினும் பல இடங்களில் காலம்காலமாக தொடர்ந்து வரும் ஆன்மீக தேடலின் கூறுகள் யூஜி யின் அனுபவங்களிலும் விளக்கங்களிலும் இருப்பதை காண முடிகிறது. 


புலனடக்கம் என்பதை ஒருங்கிணைப்பாளர் இல்லாத புலன் செயல்பாடு என்றும், ஆன்மீக சக்கரங்களை உடல் ரீதியான சுரப்பிகளின் செயல்பாடாகவும், சாம்பல் என்னும் உருவகம் மூலம் எண்ணங்கள் பொசுங்கி உடலெங்கும் சூடு பரவும் விதமாகவும், மாயை என்பதை எண்ணங்கள் உருவாக்க நினைக்கும் தொடர்ச்சியான "நீ" என்றும்,  நான் அழிவதை கேள்வி மறைந்து duality மறையும் இயற்கை நிலை இடமாகவும்  இறுதி பேரின்ப நிலையை மிகுந்த உடல் வலி மிகுந்த  இயல்பு நிலை என மரபான விஷயங்களுடன் தொடர்புப்படுத்தி பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

யூஜி ரமணர் சந்திப்பில், ரமணர் "என்னால் அளிக்க முடியும் உன்னால் வாங்கிக்கொள்ள முடியுமா ?என்று யூஜி யை பார்த்து கேட்கிறார். "படிநிலைகள் இல்லை என்றும் ஒன்று விடுபட்டவர் அல்லது விடுபட வில்லை" எனவும் ரமணர் கூறுகிறார், இது கிட்டத்தட்ட மீள முடியாத உடல் அணுக்களின் மாற்றம் என்று யூஜி கூறுவதற்கு ஒப்பானதாக இருக்கிறது, ஜெகே உடனான சந்திப்பில் ஜெகே வின் போதனைகள் "செயலின்மை"க்கு இட்டு செல்வதாக சுட்டிக் காட்டுகிறார் யூஜி, இது ஜேகே மீது மரபான ஆன்மீக தேடல் உள்ளவர்கள் வைக்கும் விமர்சனத்தை ஒத்து இருக்கிறது.

விடுபட்ட நிலை என்ற ஒன்றை இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளும் யூஜி அந்நிலை அடைய சாதங்கங்களும், படி நிலைகளும், சிந்தனையும் பயன் தராது என்றும் கூறுகிறார்,  சிறுவயதிலேயே மரபான நூல்கள் பயிற்சியும், யோக பயிற்சியும் பெற்றவர் யூஜி, இயல்பு நிலை அமைகையில் பாறங்கல் தாக்குவது போல் ஒரேடியாக நிகழும் என்றும் அவரது சொந்த அனுபவத்தை பகுத்து சொல்கையில் Will அ விருப்பம் உதிர்தல், incubation(ஒரு வித மௌனம்) , Calamity (உடல் மாற்றங்கள்) என்று விளக்குகிறார். மரபின் தொடர்ச்சியாக தன்னை ஒரு போதும் அறிவித்துக் கொள்ளாத யூஜி ஆயிரக்கணக்கான ஆண்டுகளின்  எண்ணங்களின் ஓட்டத்தின் முன்பான நம் ஆதரவற்ற நிலையை சுட்டி காண்பிக்கிறார். 

யூஜி மனித சிந்தனையே ஒரு நரம்பு சார்ந்த குறைப்பாட்டால் உருவானது என்றும், எண்ணம் உடற்செயற் பாட்டிற்கு  விரோதமானது என்று கூறும் இடங்கள் அதிர்ச்சி அளிப்பவை, ஆனால் நாம் குரு கட்டத்தின் உள்ளே தான் leading into zone ல் தான் இருக்கிறோம் என்பதுவும் உண்மை. யூஜி ஒப்பு க்கொள்ள மாட்டார் என்றாலும் நூலை வாசித்து முடிக்கையில் ஒரு வித அமைதி வந்தது உண்மை, அது வெறும் சாராம்ச புரிதல் comprehension கொடுத்த இன்பம் அல்லது கற்பிதம் என்று அழைக்கப்படுமோ? சாதகம் இல்லை என்றால் இவ்வித பரிச்சயங்கள் வெறும் சொற்குவியல்களோ ? 


Sunday, September 26, 2021

குண சித்தர்கள் - க சீ சிவகுமார்

நிஜ வாழ்வில் நாம் அதிகம் கவனித்திராத , மறக்கப்பட்ட, அதிகம்  விஷயங்களுக்கு ஒளியூட்ட இலக்கியங்கள் முயல்கின்றன. நல்ல இலக்கியம் விதிவிலக்குகளை கொண்டே பொதுவான நியாயமான விஷயங்கள் குறித்த கேள்விகளை வாசகனிடத்தே வைக்கின்றன, நல்ல இலக்கியம் வாழ்வின் அத்தனை இறுக்கங்களையும் பரிச்சயப்படுத்துகின்றன. இதன் காரணமாகவே பெரும்பாலானோர் இலக்கியத்தை ஒரு சோக பாவனை யாக கருத முயல்கின்றனர். இத்தனை இறுக்கங்களையும் மற்றொரு வாசல் வழி நாம் காணத் தொடங்குகையில் நாம் சிரிக்கத் தொடங்குகிறோம். முதல் வகை நேரடி "போஸ்" என்றால் பின்னது "சைடு போஸ்". பகடி என்னும் சைடு போஸ்.



32 கட்டுரைகள் கொண்ட தொகுதி. ஒவ்வொரு கட்டுரையும் அதிக பட்சம் நான்கு அல்லது ஐந்து பக்கங்கள், இப்படைப்புகளை கட்டுரைகள் என்று வகைமை படுத்துவது கூட ஒரு வசதிக்காக தான், கட்டுரை என்றுமே ஆய்வாளர்களின் விமர்சகர்களின் அறிவுஜீவிகளின் தளம், வாழ்வின் யதார்த்தம் நிறுவனமயப்படும் இடம் கட்டுரைகள்,ஒரு மிகைக்காக இதை கூறுகிறேன். குண சித்தர்கள் படைப்புகளில் சித்தாந்த சாயலோ நிறுவன சாயலோ அறவே இல்லை நாம் தினப்படி காணும் மனிதர்களின் வாழ்விலிருந்து எடுக்கப்பட்டவை, ஒவ்வொரு கதையிலும் ஒரு மனிதனின் குறிப்பிட்ட குணாதிசய உலகில் நாம் அமிழ்கிறோம். சிறுகதைக்கான உயிர்ப்புடன் நிகழும் அதே நேரத்தில் கவித்துவம் மிளிரும் பல வரிகளை கொண்ட படைப்புகள் குண சித்தர்கள். 

அந்த மனிதனின் ஒட்டுமொத்த சாராம்சமே அந்த குணாதிசயம் தான் என்று ஆசிரியர் நம்மை நம்ப வைத்து அந்த மனிதனை வைத்தே ஊர் சுற்றி, அவன் சுற்றம் படும் பாடுகளை அல்லது அவன் அல்லல்களை காண்பித்து, நடக்கும் விஷயங்களை கண்டு நாம் சிரித்து சிரித்து ஓய்கிறோம். மீள யோசிக்கையில் அனைத்து நிகழ்வுகளின் உள்ளடக்கம் கொண்டு நேர் போஸில் இறுக்கமான கதைகளை அமைக்க இருக்கும் சாத்தியங்களைக் கண்டுகொள்கிறோம். 

கேள்வியின் நாயகன் - "கோழி ஏன் உலகத்தில் வந்தது ? அந்த இனத்தின் நோக்கமென்ன ? " என்று வினவுகையில் நம் அத்தனை நிறுவன ஆசைகளும் குப்புற கவிழ்கின்றன. மேகவண்ணன் - கண்டக்டர் ஒருவர் பேருந்தில் ஏற வரும் ஒருவர் குறித்த சித்திரம் "சரியான பாதையில் வருகிற அவர் சரியான போதையில் வருகிறவராகவும் இருந்தார் " என்ற வரியை விரித்து புரிந்து கொள்ள எவ்வளவு சாத்தியங்கள். எளிமையான வார்த்தைகளின் வரிசை பகடியாகும் மாயம். வரிசை சிறிது மாறினாலும் பகடி காணாமல் போகிறது . பிறவிகவிராயன் - "வேலு , நிஜமாகவே மலர்ந்து விட்ட பொழுது அது, சருகெடுத்து நுகர முடியாது என அறிகிற பொழுது " 

எந்தக் கதையிலும் வசையோ சாடலோ கேலிசித்திரமாகவோ இக் குணாதிசயங்கள் பதிவாகவில்லை. அத்தனை அக்கறையுடன் ஒவ்வொரு குணாதிசயங்களுடன் உரையாடி இருக்கிறார். மீண்டும் மீண்டும் வாசித்து சிரிக்கிறேன். 


Monday, September 20, 2021

உண்மை ஒளிர்கவென்று பாடவோ ? - பா விசாலம்

 


நூற்றாண்டுகளாக நாஞ்சில் நாட்டில்  நாடார் X வெள்ளாள சமூகங்கள் இடையே கிறிஸ்துவம் வளர்ந்த வரலாற்றை பின்புலமாக கொண்டு 1940 முதல் 1970 வரை வடக்கன்குளத்தை சார்ந்த ஒரு வெள்ளாள கிறிஸ்துவ குடும்பத்தின் கதையை முன்னிறுத்தி அமைந்திருக்கும் நாவல், நாவல் என்பதை விட கதைக் களஞ்சியம் என்ற சொல்லே பொருத்தமானதாக இருக்கும். நாவலை வாசித்தப் பிறகு விக்கி யில் கதை நிகழ்வில் வரும் வரலாற்றுப் பாத்திரங்கள் குறித்து ஆர்வமுடன் தேட அமைந்த வரிசை இது, Vascoda Gama, Francis Xavier, Galileo, John Britto aka Arulanandar, Roberto De Nobili, Veerama Munivar என்கிற முதல் வரிசை 16,17 மற்றும் 18ஆம் நூற்றாண்டு jesuit மற்றும் வணிக விஷயங்கள். தொடர்ந்து.. ராஜா மார்த்தாண்ட வர்மா dutch படையினரை வென்ற குளச்சல் போர் திருவிதாங்கூர் உருவாக்கம், அதன் பின்னரான dutch lanoi ,நீலகண்ட பிள்ளை, தளவாய் ராமையா, எட்டு வீட்டு பிள்ளைமார் ராஜாங்க ஆட்டங்கள், நீலகண்ட பிள்ளை தேவசகாயம் பிள்ளையாக மாறும் நிகழ்வுகள், தேவசகாயம் பிள்ளையை கொல்ல ராஜா மார்த்தாண்ட வர்மாவின் ஆணை, தேவசகாயம் பிள்ளை கோட்டாறு சேவியர் ஆலயத்தில் நல்லடக்கம் வரையிலான காலகட்டம், தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் அய்யா வைகுண்டர் குறித்த குறிப்புகள்... தொடர்ந்து பிரஞ்சு பாதிரி கொணச்சலின் புதிய வழி முறைகள் , சர்ச் பிரிவு சுவர் இடிப்பு,1895ல் நடந்த கழுகுமலை கலவரம், மருமக்கள் வழி முறையை  மாற்ற நடைபெறும் முயற்சிகள் , கவிமணியின் மருமக்கள் வழி மான்மியம், ராணி சேது பாய் கால பள்ளிக்கூடங்கள் என தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம் வரையிலான நிகழ்ந்த வரலாற்று பின்புலம், முன்னும் பின்னுமாக கதைகளாக, சம்பவங்களாக நினைவு கூறல்களாக பெரும் பகுதி நாவல் அமைந்துள்ளது. 


பெண் உரிமை அல்லது பெண்களின் நிலை,  மதத்தில் சாதியின் தாக்கம்  இவ்விரு விஷயங்களும் மேற்கூறிய வரலாற்றின் பக்கங்களின் முக்கிய இடங்களை பிடித்ததோர் கதையாடல் நம்மிடையே உள்ளது. இத்தகைய பெரியதொரு பின்புலம் அல்லது வரலாற்று பீடிகை அமைந்த பிறகு   இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்  ஒரு தனி வெள்ளாள கிறிஸ்துவ குடும்பத்தில் மேற்கூறிய இரு சரடுகளைப் பொருத்திப் பார்க்கும் வாய்ப்பாக இந்த நாவல் அமைந்துள்ளது. எவ்வளவு தூரம் விஷயங்கள் மாறியுள்ளன அல்லது மாறவில்லை என்று அறிய இந்தக் குடும்பம் என்னும் சிறிய அலகை  ஆராய்கையில் எப்போதும் போல் நிறைய மாறியிருப்பதாக இருப்பினும் எதுவும் மாறாதது போலுமான சித்திரம் கிடைக்கிறது. 

Sunday, September 12, 2021

திகம்பர நினைவுகள் - தேவகாந்தன்

 எழுத்தாளர் தேவகாந்தன் அவர்களின் பால்ய காலங்களின் நினைவோடை. 1947 ல்  இலங்கையின் வட மாகாணத்தில்பிறந்தவர். பல முதல் அனுபவங்களில் "அன்று எவ்வாறு உணர்ந்தோம் என்று இன்று நினைவுகளை" மீட்டி சிறு நிகழ்வுகளின் கோர்ப்பாக எழுதப்பட்டுள்ள நினைவோடை.


வாசிக்கையில் முதலில் உணர்ந்தது அதன் நிதானமான நடை , மிகை தவிர்த்து சுவையான பால்யத்தை காலத்தின் முதிர்ச்சியின் துணை கொண்டு நினைவுகளை மீட்டுகையில் எழும் நிதானம் எழுத்தில் நன்கு வெளிப்படுகிறது , நாற்பது ஆண்டுகளாக இயங்கி வரும் படைப்பாளியின் மொழி ஆளுமையும் ஒரு காரணம்.

பெரும்பாலும் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு "முதல்" அறிதலாக பதிவாகி இருக்கிறது, நினைவோடையின் ஒருமைக்கு கலைத்தன்மைக்கு இந்த "முதல்" சரடு வலு சேர்க்கிறது. முதற் கனவு, முதல் பிரார்த்தனை, முதல் மரணம், முதல் இழப்பு, முதல் தனிமை, முதல் காதல், முதல் பயம், முதல் காதல், முதல் கடல், முதல் பீடி, முதல் அக்கா, முதல் வெற்றி, முதல் கலவி, முதல் வாசிப்பு..முதல் தவறு என வாசகனை மகிழ்விக்க பிரயத்தன படாது  எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாது, முன்பே கூறியது போல், ஒரு கனிந்த நிதானத்துடன் பால்யத்தை மீட்டுகிற திகம்பர நினைவுகள். 

நிதான நடையில் இருந்தாலும் நினைவோடையின் நிகழ்த்திக் காட்டும் தன்மையில் குறைவில்லை, ஆசிரியரோடு நாமும் சேர்ந்து நினைவுகளில் உயிர்ப்புடன் பங்கு கொள்ள  முடிகிறது.பிறிதொரு நாளில்  நினைவோடையில் அமைந்துள்ள புதிய சொற்களை கண்டடைய, மென் உணர்வுகளை உணர இன்னும் ஒரு முறை வாசிக்க வேண்டும்.

Tuesday, September 07, 2021

The Last Brahmin - Rani Siva Sankara Sarma

In August, Tamil writer Bogan Sankar wrote one Facebook post on choices available for Individual wrt Religion, as per him there are only three options 1)  Orthodoxy 2) Iconoclasm 3) Reform. 



Providentially stumbled on a book called " The Last Brahmin" by Rani Siva Sankara Sarma through twitter recommendations, Originally written in Telugu (2002) translated by D Venkat Rao (2007). This book s theme providentially matched the Traingular Views of the above suggestive actions, Author s Father representing Orthodoxy , Author s Brother a Reformer while the Author himself can be called a iconoclastic.

Book is a semi autobiography and a religious commentary at same breath with Author s self confessed hallucinatory inferences and matter of Facts from Our Country s Long Social History. All Three abovementioned View Points occupy equal space in this book, Perhaps  this book can be exaggerated as moving accounts of three people  - Orthodoxy trying to maintain ancient order, Reformers trying to negate Colonial Views and Author as a Iconoclast seeing the futility of it all, This book is a work of Non Fiction but due to author s Poetic inclinations he takes us through a dizzying ride with usual pitstops with Audacious conclusions and inferences making it a worthy read.

Sampling amongst quiet a dizzying view points in the book ,If I can choose, "Temples came very late into the scene and it has no reference in ancient vedic order", "Adi Sankara is Buddha in disguise", "Hinduism is Proxy Christianity". Perhaps all were not original thoughts but told earlier by different people in different times.

For a Lame reader what remained is the awareness about the possibility of  all three personalities present in a single individual, a  schizophrenic , the elusive enigmatic attractive discipline of the Orthodoxy charm refuses to die but cleverly negating with changing times is a Reformer for the worldly proceedings reserving iconoclasm for our self projecting image. Superb Read.