Friday, November 24, 2023

சகீனாவின் முத்தம் - விவேக் ஷான்பாக்

நாயகன் வெங்கடரமணனின் சொற்களில், கடந்து வந்த வாழ்வின் நிகழ்வுகளை துல்லியமாய் நினைவுபடுத்தியபடி  நிகழ்காலத்துடன் முடிச்சிட்டு விரிகிறது இந்த நாவல். 


வெங்கடரமணனின் மௌடிகத்தின் பன்முகம், -சுயத்தை வெளிப்படுத்த ஒரு வித பயம் - விழுமிய சரிவுகளை அறிந்தும்  சுயநலம் உடையாது தன் ஆளுமையை மாற்றாத பிடிவாதம்- பழைய விஷயங்கள் மீதான பிடிப்பை அறிவின் கர்வமாக புனைந்து கொள்ளுதல் - புரிந்து கொள்வது போல அக்கறையை நீடிப்பது போல உறவுகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இடையறாது முனைதல் - புதிய விஷயங்கள் மீதான பயத்தை எல்லை மீறலாக புரிந்து கொள்ளுதல், சொற்களின் வழி நீதிகளையும் நிகழ்வுகளின் வழி அநீதிகளையும் கண்டும் காணாதிருத்தல் என்பதான  தோரணைகளில் உறைந்துள்ளது.


ரமணனின் கடிதத்தில் குறுக்கு பாதையில் மொழியின் வளமை பரிணாமத்தை நாம் உணர்வது போல், 

விரித்து வைத்த லாக்கர் பொருட்கள் அனைத்தையும் காண்கையில் வெங்கட்டின் நினைவுக்கு வரும் ரமணனின் ஒற்றைப்பை, குறுக்கு பாதையில் மானுட பண்பாட்டின் வளமை பரிணாமத்தை நமக்கு உணர்த்தும்.


அழைப்பு மணிகள் - வெளியிலிருந்து வரும்  தொடர் அழைப்புகள் நமக்கு சொல்லும் செய்திகள் என்ன ?

வீட்டில் இருப்பது போன்றும் இல்லாதது போன்றும் தோன்றும் அந்தப் பொருள் தான் காணாமல் போனதோ ? நாம் தேடுவது கிடைத்தவுடன் அள்ளி பதுக்குவோமா இல்லை பகிர்ந்தளிப்போமா ? 


புத்துயிர்ப்பு நாவலின் நாயகனையும் வெங்கட்ரமணனையும் இணைத்து வாசிக்க வாய்ப்புள்ளது.



Tuesday, November 14, 2023

Resurrection - Leo Tolstoy


 





Nekhlyudov undertook an ambitious tumultous  journey between reading and real life experiences to arrive at possible method of what to do with one's convictions. He took a Gentle Righteous approach, travelling from one institution to the other, constantly challenging himself to maintain grace and decorum and shed selfishness. Holding on to the fervour of "Doing good to others and changing things" always pointing the action finger on himself he goes on a pursuading spree to appeal to the goodness of everyone he met to make them do good about things within their power.


Novel can be viewed as a stunning series of interviews and Character Arcs across various sections of people. These interviews are triggerred in the beginning by a sense of guilt but what carried them through out is the fervour to do what is right and what exactly needs to be done as per His Masters' Will. Nekhlyudov clearly understood this only at the end, but far earlier he had acted so guided by his personal conviction.

Thursday, October 05, 2023

நல்ல பாம்பு - நீல அணங்கின் கதை - ரமேஷ் பிரேதன்

இந்த நாவலை வாசிக்கையில் ஏற்பட்ட மனப்பதிவுகளை உறுதிப்படுத்தவே இந்தப்பதிவு.



இந்த நாவல் என்னை கடுமையாக  பாதித்தது. பொதுவாக எந்த ஒரு நாவலையும் வாசிக்கையில் கதையின் வீச்சோ, நாவலின் கட்டமைப்போ, சம்பவங்களின் தாக்கமோ, நடையின் சுவாரஸ்யமோ தான் பெரும்பாலும் நம்மை பாதிக்கும். மேலும் நாவலின் முதன்மை கதாபாத்திரங்களுடன ஒன்றுவதன் மூலம் நாவல் நமக்கு நெருக்கமானதாகி விடும். நான் இந்த நாவலை வாசிக்கையில் இவ்வழிகளில் அல்லாது முற்றிலும் நேரடியாக மிகுந்த சஞ்சலமும் அதிர்ச்சியும் அடைந்தேன். பிரதியின் நேரடி தாக்கம் குறித்து மேலும் அறியவே இதை எழுதுகிறேன்.


ஒரு வகையில் இந்த நாவலின் முதன்மை கதாப்பாத்திரங்கள் என்னுடைய பகல் கனவுகளின் தப்பிக்கும் ஆசைகளின் ஸ்தூல வடிவங்களாக இருக்கின்றன. செம்புலி காலங்காலமாய் செறிந்து வரும் காலத்தின் விடுதலையின் மௌனத்தை நமக்கு உணர்த்துகிறார். நேரெதிராக இருபதாம் நூற்றாண்டில் விடுதலையான அம்பிகா நாம் பேச மீதி உள்ள விஷயங்களை உணர்த்துகிறார்.

இவ்விருவரும் இணையும் இடமாக 'தன்னந்தனிமை' இருக்கிறது.


பிரதியை வாசிக்கையில் நான்  கண்ட இந்த 'தனிமையின் பாலை' எனக்கு மிகுந்த தொந்தரவை அளித்தது. என் பகல் கனவுகளில் உள்ள தனிமை இனிமையானதாக  இருந்தது. ஆனால் நாவல் உணர்த்திய 'தன்னந்தனிமை' மிகுந்த நேரடியாக, தாங்க முடியாத அளவில் இருந்தது. எனது மனவலிமையின் போதாமையை, என் தனிமை கனவுகள் வெறும் தப்பிக்கும் உத்திகளே என்று நாவலை வாசித்து முடிக்கையில் தோன்றியது. தனிமையின் பக்கத்தை அடைய வெவ்வெறு வழிகளில் நாவலின் ஆப்த வாக்கியங்கள் நம்மை சுழற்றி அடித்து அழைத்து செல்கின்றன.  


இந்நாவல் வழி ,ஆப்த வாக்கியங்களை வாசிக்கையில் கிடைத்த மனநிறைவும், கதாபாத்திரங்களின் தனிமை ஸ்திதி உணர்த்திய உண்மைகளும் எனக்கு அமைந்தவை.


Wednesday, September 27, 2023

இன்னொரு கனவு - சுப்ரமண்ய ராஜு

குடும்பத்திலிருந்து பிய்த்து கொண்டு போகும் முனைப்பு, அந்த முனைப்பின் எல்லையில் துறவற ஆசை. அவ்வாசை என்பது பொறுப்பில் இருந்தும் பிடுங்கல்கள் இருந்தும் விடுபட நாம் ஏங்கும் வெறும் 'தப்பித்தல்' என்றும், நம் சுயநலத்தின் தைரியமின்மையின் இன்னொரு முகம் என்று புரிய தொடங்குகையில், தினசரி செக்கு வாழ்க்கை அளிக்கும் சலிப்பு தெளிந்து தெரிய வரும். வெறும் பார்வையாளனாகி, அந்த சலிப்பு  நம்மை கொண்டு செல்லும் இடம் எது என்று அறிய முயன்றால் ..


சலிப்பின் சாரத்தை விவேகமாய் உணர்ந்து, சலிப்பை வெல்ல, மீண்டும் மீண்டும்  உணர்ந்த முழுவதையும் சொற்கள் வழி சாராம்ச படுத்த முனைந்து, கச்சிதமாக சொல்வழி சாராம்சபடுத்துவதில் தேர்ச்சிப் பெற்று, அந்த சொற்களின் வழியில் "செட்டில்" ஆவதை வெறுத்து,  புலப்படாத பெரிய நிகழ்வுகளை எதிர் கொள்ளும் விதமாய் நடக்கும் சிறிய செயல்களை மலர்ச்சியுடன் தினம் நாடும் ஒருவனாய் திகழ வாய்க்குமோ ?




Sunday, July 16, 2023

King Lear - William Shakespeare

 


GLOUCESTER   O you mighty gods!⟨He kneels.⟩
This world I do renounce, and in your sights
Shake patiently my great affliction off.
If I could bear it longer, and not fall
To quarrel with your great opposeless wills,
My snuff and loathèd part of nature should
Burn itself out. If Edgar live, O, bless him!—
Now, fellow, fare thee well.⟨He falls)

ஸ்திதி

முதல் இருபதில் ஏக்கத்தின் குழப்பம், அடுத்த இருபதில் கடமையின் அலைச்சல்,
நாய் குணம் பிறந்த நாற்பதில்
முலை மறக்க தொடங்கியதை தனிமையில் உணர்கையில்,
கை நீட்டி இறைஞ்சுவது எவ்விடம் ?
கலங்குவதன் பொருள் சூன்யம்,
மகிழ்வதன் பொருள் வியர்த்தம். 
தினம் கொல்லும் பசியின் விகாரம்,
பசி வெல்லும் தந்திரங்கள் அற்பம்.
தானாய் முடியப்போகும் 
அர்த்தமற்ற பயணம் 
முடிவிலாது நீள்வது போல
சட்டென முடிய...
சாந்தி சாந்தி சாந்தி.


Thursday, May 25, 2023

பத்து இரவுகளின் கனவுகள் - நாட்சுமே சொசெகி

 


**















***
பத்து இரவுகளின் கனவுகள் -  நாட்சுமே சொசெகி 

தமிழில் கே. கணேஷ்ராம் 

Monday, May 22, 2023

When Breath becomes Air - Paul Kalanithi

Moving account of Life of a Neurosurgeon battling Lung Cancer


*

Episode on a Mountain top, sun had risen on one side and its dark on the other ..serra camp 

* *

cadaver episode what all doctors has to transgress , sending back patients to zones of normality , Moral Adjudication as a habit , Heroic fights before eventual death

***

Precisive Genius back to OR with Cancer shadow taking a step back 

****

Paul during Cady s Birth in Delivery Room

*****

Paul s Final day at the hospital 

*

A Moving Account of a bright gifted mind - Superlative Self, permeating through out the life - No Self Doubts

^^

His graceful words to his daughter - Sated Joy  💐

^^^




Thursday, May 04, 2023

If on a Winter's Night a Traveller

This novel by Italo Calvino is a complex woven fabric. 

Ambitious in its vision to ruminate on entire arc of book reading and writing. This novel embarks on a journey to every possible place related to books. A Reader is never satiated , he is always in search of a book , he is ever immersed in his mission to read books ever distracted by the search for meaning. Novel begins and ends with overwhelming view points -It begins as  "you expect nothing from life" and ends with story of a complete wipe out of things you do not need. 

Reader is a man who strings a narrative on his own in addition to what the author has already spun. Towards end of the novel through a revelatory episode we see through this multiplicities of narrative with  clarity. That single paragraph strung impromptu by a new character using already existing details reveals the beauty of narrative building and search for a meaning in general. Our Inclination to search for the meaning in that defining paragraph is Highly revelatory, We also risk missing to see the futility, the fun and misunderstanding about a thing called Life. 

Novel is so grounded in a sense it always strives to gives us a picture of what is. Even thoughts are seen as objects appearing from somewhere and disappear on arrival of another thought. Novel keeps us grounded, allows us to enjoy the episodic fun before futility arrives. Each episode is written based on different genre and flavour, allowing us to immerse into vagaries of story telling.Novel comes out as a Slyly woven complex fabric of the plot, the reader, reading process, academia, publishing, government control and search for a narrative and meaning in the ocean of words.

-----

அசோகமித்திரன் in "விடுதலை" - "புரிந்து கொள்வதால் என்ன பயன், புரிந்து கொள்வது தான் பயன் " 

போகன் சங்கர் in Facebook -  "பிரபஞ்சம், அதன்  விதிகளை அறிந்து கொள்ள முயல்பவர்களை கடுமையாக தண்டிக்கும்"

Anecdote from a Veda class -"Do not bother much about meaning of Vedas, you will land no where, just repeat the verses,  Yes it's good to know the meaning, but even if you do not understand the meaning it is fine, God knows the meaning and it is sufficient.

----

Sunday, April 23, 2023

விடுதலை - அசோகமித்திரன்

அசோகமித்திரன் கதைகளில் ஆன்மீகம்

ஒரு வேட்கையின் குறிப்புகள் போல , லௌகீக சகவாசம் விடுத்து, சேவை மனப்பான்மை வளர்த்து, பந்த பாசம் அறுத்து, எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி , முன் திட்டங்கள் இன்றி பிரபஞ்சத்துடன் ஒன்றிணையும் பரசுராமைய்யர் அவர்களின் கதை 'விடுதலை'. சூழ்நிலை, காலமாற்றம், தாங்க முடியாத இழப்புகள் எல்லோரையும் பரசுராமைய்யர் போல மாற்றுமா ? பிரபஞ்சத்திடம் சேர்க்குமா ? "எது அவசியம் , தனக்கு எல்லா அவசியங்களும் போய் விட்டன , ஜலத்திவலைகள் கவனத்திற்கு வருகின்றன, அதனால் அவை மட்டும் தான் அவசியம், எவ்வளவு ஆனந்தமான விடுதலை !". கதையின் முடிவில் முற்றும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் ஆத்மானந்தர் வாக்கின் சாயலை ஒத்த, கடற்கரையோரம், அற்புதமான முடிவு கொண்ட குறு நாவல்.JK வில் தொடங்கி ஆத்மானந்தரில் முடியும் கதை.


ஆன்மீக உறுதி வாய்த்த சுவாமிநாதன் கடைசி வரை விஷயங்களை நம்பக்கூடிய வல்லமையை பெற்றானா ? 

எது பெரிய தவறு ? வேலையின்றி சோம்பலாக இருப்பதா ? அல்லது லஞ்சம் கொழுத்து  பணம் சேர்ப்பதா ?தகப்பன் தவறுகள் உறுத்த, தட்டிக்கேட்கும் சங்கரன், சொகுசு  போய் விடும் பயத்தில் வீடு திரும்புதல்,சொகுசை விட்டுக்கொடுக்கும் மனோதிடம் எல்லோருக்கும் வாய்க்குமா ? 'உயர உயர,குளிர் குளிர் என்னும் வாழ்க்கையை சமாளிக்க கோட்டு என்னும் லௌகீகம் தேவைப்படுகையில் மலை இறங்க இறங்க போர்த்திய ஆடைகள் துறக்க துறக்க விடுதலை'.

தொடர்ந்து, அமைதியாகவும், தன்னலமின்றியும், கோபப்படாமல்  விடாமுயற்சியுடனும், முன்திட்டங்கள் இன்றி, கண்ணியத்துடனும் வாழ்வது, எவ்வளவு கடினம் என்று இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.  இப்படி இருப்பதை ஆன்மீகம் என்று கூறலாம். அவ்வான்மீக  வேட்கையின் பொருட்டு, சூழலையும், செல்வத்தையும், சொகுசையும் உதறுதல் அத்தனை எளிதா என்ன ? 

விடுதலை என்றும் எளிதான பொறுப்பு துறப்பு ஆகாது. அப்படி இருப்பது போல் தோன்றக்கூடியது. விடுதலை கடினமானது, முன்பின் ஒருவர் அறியாதது.அதுவாய் தகைவது , தினக்கடமைகளை கோருவது, திடீரென புலப்பட்டு மறைவது. நாம் அதுவே ஆகும் வரை இழுத்து செல்வது.அத்தனை அலைக்கழிப்பின் சுடரென அமைவது.

---

நான்கு கதைகள்  கொண்ட தொகுப்பு கதைகள் குறித்த குறிப்புகள்

விடுதலை - குமாஸ்தா பரசுராமைய்யர் , பம்பீனா , JK,சேரி, மகள் ஜயம் காணாமல் போதல், கண்ணுசிங் , முருகையன், , சிவஸ்வாமி ஐயர், டெபுடி , எம் டி, சரோஜா,பாபு,அப்துல் காதர்.

விடுதலை கதையின் அரசியல் குறியீடுகள் - ஜயத்தை தொலைக்கும் பிராமண சமூகம், எங்கிருந்தோ வந்த கண்ணுசிங் எழுதும் அர்ஜுனன் தபசு பாடல், இங்கேயே இருக்கும் முருகையன், கீழ்தட்டு மக்களாக பம்பீனா அந்தோணி. கடற்கரை,தமிழக மக்களின் குறுக்கு வெட்டு தோற்றம்.

இன்னும் சில நாட்கள்

வைத்திலிங்கம் - சீடன் சுவாமிநாதன்,  மாரிமுத்து, உலோக தகடு , தங்கம் வைத்திலிங்கம் குடும்பத்தார் ஊர் காலி செய்தல், சுவாமிநாதன் நாடி ஜோசியம், ஜோசியரின் நாட்கணக்கு தவறாகுதல், இன்னும் முடியப்பெற்றால்....

விழா - டல்பதடோ கம்போலியா திரைப்பட விழா profடப்லி சில்வியா ராணுவ ஒப்பந்தம் திரைப்படத்திற்கு முதல் பரிசு, திரைப்படம் விற்க டல்பதடோ முயற்சிகள்

தலைமுறைகள் - சங்கரன் , சங்கரன் அப்பா  சண்டை , சங்கரன் வெளியேறுதல் , பழனிசாமி ஊட்டி , சங்கரன் வீடு திரும்புதல். இந்திரா எமெர்ஜென்சி காலகட்டதில் நடக்கும் கதை.

Friday, April 21, 2023

கதீட்ரல் - தூயன்

கதீட்ரல் சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தை வழங்கியது, வெகு நாளைக்கு பிறகு என்னால் ஒரே நாளில் வாசித்து முடிக்க முடிந்த நாவல், கதையின் இழைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இயல்பாக மலர்ந்துள்ளன. 


மனம் அறிதலின் பத்து வாயில்களில் ஒன்று (ஹெச் எஸ் சிவபிரகாஷ் )  அந்த மனதின் எல்லைகளை அறிய விழையும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் கண்டடையும் விஷயங்கள் ஏற்கனவே இங்குள்ள ஒன்றை துலக்கி தெளிபவை, புதிய ஒன்று என்று தோன்றுவது வார்த்தை சுவர்களின் ஜாலத்திலனாலோ ? எத்தனை வார்த்தைகள் எத்தனை சுவர்கள், எத்தனை யத்தனம் எத்தனை ஆறுதல். 


மனதை நேரத்தாலும் புவியமைப்பாலும் கட்டமைக்க முடியும் என்பதையே கதீட்ரல் காட்டுகிறது , ஒரே நேரத்தில் மிகுந்த இயல்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இரு முனைகளில் இருந்து தோன்றிய எமிலியும் அவந்திகையும் தேடுவதை எளிதாக லேசாக நஞ்சுண்டன் எதிர் கொள்கிறார், தொலைத்து விட்டார். கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் சொல்வார் " மூத்தோர் ஏதோ ஒரு விவேகத்தால் பெரிதாக எதையும் வரலாறாக பதிவு செய்ய முனையவில்லை என்று " ( நினைவில் இருந்து எழுதுகிறேன் ) , நஞ்சுண்டன் தொலைத்தது குறித்து பெரிதாக வருத்தப்பட மாட்டார் என்று நினைக்கிறேன், அவர் வருத்தப்பட்டது போல ஆப்ரஹாம்  கதைத்திருந்தாலும். ஆப்ரஹாம் கையில் தான் கதையின் மொத்த சுழற்சியும் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விடுபடல்கள் அவனது தேர்வே. அவந்திகையுடனானஅவனதுகண்ணாடி உரையாடல்கள் வெகு சுவாரஸ்யம். 

நீட்ஷன் கட்டமைக்க விரும்பும் பிரக்ஞை இன்றைய சூழலுக்கு எத்தனை பயங்கரமாக பொருந்துகிறது, வார இறுதி குறித்த இரு வரிகள் மீள மீள யோசிக்க வைத்தது, 

இக்கதையில் தொலைந்த பிரதியை தான்  தாண்டவராயன் கதையில் தேடுகிறோமோ ? நஞ்சுண்டன் சிரிக்கிறார் , அறிவு சிரிஞ்சுகள் பரவலாகாத காலங்களை நினைவூட்டுபவர். பிரதியை தொலைத்தவர், அறிவை அறிவாய் அறியாதவர்.

அறிவுலகின் கதவுகள் அடைக்கப்பட்ட பின் குறுகுறுப்புடன் எட்டிப் பார்க்கும் ஆப்ரஹாம் கையில் கிடைக்காத பிரதி , அதில் ஆர்வமில்லா நஞ்சுண்டனை வந்தடையும் விசித்திரமான கோலங்களை கொண்டது காலம். 

நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கிய கதீட்ரல.

Saturday, April 15, 2023

திருமுகம்

அறிவு தேட்டம் மிகுந்த விஞ்ஞானி ஒருவர்,அறிவியல் சமன்பாடுகள் மூலம் மனித இருப்பை புரிந்து கொள்ள முனைகிறார். காதல் அவரை என்ன செய்யும் ?

அந்த விஞ்ஞானியின் தடம் பற்றி வரும் சமூகவியல் அறிஞர் கடவுளின் இருப்பை பற்றிய தீராத சந்தேகம் கொண்டவர், தனது ஆய்வின் மூலம் விஞ்ஞானியின் காதலை எப்படி புரிந்து கொண்டார் ? கடவுளை கண்டடைந்தாரா ?



கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கும்  நம்பிக்கை  இல்லாதவனுக்குமான உறவு எத்தகையது ?கடவுள் நம்பிக்கைக்கும் காதலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா ? 

நோயை குணப்படுத்தும் வல்லமை கடவுளுக்கு இருக்கிறதா ? கடவுளை முழுமையாக புரிந்து கொள்ளும் சாத்தியம் மனிதனுக்கு இருக்கிறதா ? 

இவ்விஷயங்களில் மனிதன் தேர்ந்தெடுக்க  கூடிய எளிதான பண்பு "சீர்மை", கடைபிடிக்க கடினமான பண்பு "சீர்மை".

திருமுகம் உணர சீர்மை

சீர்மை நிறைய 

உணர்வோம் திருமுகம் 

இருப்பிலா வாசனையில் திருமுகம்

இருப்பிலா பேரொளியில் திருமுகம்

எண்ணிலா பல்லுயிர்

இறைந்தழைக்கும் திருமுகம் 

பொருளிலா சொற்களில் திருமுகம்

பொருளிலா அழுகையில் திருமுகம்

வன்னிலா மென் ஸ்பரிசத்தில் திருமுகம் 

தானிலா தூய அன்பில் திருமுகம்

வானேகும் பட்டதில் திருமுகம் 

---------


திருமுகம் - ஈரானிய நாவல்

முஸ்தஃபா மஸ்தூர் (ஆசிரியர்), முனைவர் பி.எம்.எம்.இர்ஃபான் (தமிழில்)

Sunday, April 09, 2023

The Paradise of Food - Khalid Jawed

A Promise was made in the form of cities, we never knew the details, trusting the city we continue to leave our centuries old schema , continue to leaves our villages, dared to cut off many threads of the schema, chose to remain polite enough being anonymous. 



But the place we left is in complete ruin today, a no chance place, Few dare to return back to ruins, some modify ruins as zones of comfort stay to balance the brazenness of the urban. In first place villages did not entice us much, they have nothing to offer against the never ending universal cities,we can say we have been pushed out but we never wanted to stay , we could have stayed alright. 

Cities are ever new and villages are ever old , selfish modern man thinks like this, never ending city till 40 and some stable unchanging village from 40, but not many can afford this double luxury.

Lot has changed as we moved from villages to cities, especially our food. Food tastes bad every following day in the city, may be its the age you say but it's a symbolic reminder to us that we have embraced the fresh decay of cities , from old ruinous to ephemeral decay ,a slow mover stands no chance in city today.from a crowd we have become a set of numb individuals esp on food front, food has been an occasional wonder in the cities.

Novel deals with Self absorbed individual and brilliantly establishes that fight is between the intestines at fundamental level and the way novel delineates how individual scourges up everyday food to sustain himself, sustain his passions makes it a unique read.

Novel s subtext is more heavier, a story of an individual moving from a bustling village home to a solitudinal clerical home at surface level,a story of changing times following the footsteps of Politics of Independent India,it is also a story about how fundamentalism has replaced faith in a pompous manner. It is also a story about the guilt trip of an individual severing from the past.Story of a recurring premonition which announces itself uninviting.

Situation has ripened, we have liberal states all over the world securing economics of comfort,conformed, busy, incomplete living thereby sowing seeds for the grand return of religion promising pure, peaceful, heroic sense of completeness. 

In a village we jointly suffer but in cities we suffer individually. We have to make our choice between returning to ruins against embracing fresh decay.Novel's final image poignantly tells us a tale. 

Good Novel , Extraordinary in parts.

Sunday, March 26, 2023

ஹிட்ச்காக் தொகுத்த ஏழு சவால்கள்



1. பொருட்களின் உலகம் - " நேரடி சாட்சி" 

ஒரு சிறு அரை உண்மையை நீங்கள் கூறி, மீதி அரை உண்மையை நீங்கள் மறைத்தீர்கள் என்றால் சின்ன வயதிலிருந்து நீங்கள் ஆசைப்பட பல்வேறு பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும் - உங்கள் முடிவு என்ன ? 

2. மனோராஜ்யம்  - "பதினான்காவது அறை " 

ஆழ்மனத்தின் சாகசங்கள் உங்கள் கண்களுக்கு மட்டுமே புலப்படுவன. உங்களுக்கு உள்ளேயே நிகழும் இந்த சாகசங்கள் குறித்து மற்றவர்களுக்கு எந்தக்  கவலையும் இல்லை - தொடர்ந்து உங்கள் வழியில் சாகசங்களை தொடர்வீர்களா இல்லை இப்படியான சாகசங்களை கைவிடுவீர்களா ? 

3. பழியின் பாதை  - " கருப்பு தொப்பி" 

நல்லவர்களின் சிலுவையை சுமப்பவர்களின் பெயர் என்ன? கெட்டவர்களா ? உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் நீங்கள் எதை தெரிவு செய்வீர்கள் - எல்லாரும் போற்றும் நல்லவர்களின் சிலுவையையா இல்லை நல்லவரின் சிலுவையை காப்பாற்ற யாருமறியாத பழியின் பாதையையா ? 

4. அறிவின் ஒப்பனை - " வங்கிக் கொள்ளை"

அறிவை ஒப்பனை என்று என்றாவது கருதி இருக்கிறீர்களா ? நம் அத்தனை திட்டங்களின் பின்னாலும் அறிவின் ஒப்பனை அடியாழமாக இருக்கிறது - தன்னைத் தானே மெச்சிக் கொள்ளும் அறிவின் ஒப்பனை அறிவாலேயே களையப்படும் தருணங்களை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? 

5. எதிர்காலத்தின் நிழல் - " கால எந்திரம் "

நம் தற்கால முனைப்புகள் எல்லாமே எதிர்காலத்தின் நிழல்கள் குறித்த அச்சத்தில் விளைபவையா ? எதிர்காலம் குறித்த நிச்சயம் நம் முனைப்புகளை கூர்மழுங்க செய்திடுமோ ? கால எந்திரம் கையில் கிடைத்தப் பிறகும் ஏன் நாம் அதிகம் கடந்த காலங்களுக்கு செல்வதில்லை ? எதிர் காலத்தில் அப்படி என்ன விசேஷம் ? என்றும் வராத எதிர்காலம் . உங்கள் கைகளில் கால எந்திரம் கிடைத்தால் நீங்கள் செல்ல விரும்பும் இடம் எது ? எதிர்காலமா ? கடந்த காலமா ? - இல்லை நீங்கள் அந்த எந்திரத்தின் நாற்காலியிலிருந்து இறங்கி விடவே விரும்புகிறீர்களா ? ஞானிகள் செய்ததை போலவா ? 

6.ஒழுக்கமான விலங்கு எந்திரம்   - " விலங்கு பயிற்சியாளர்" 

நீங்கள் செய்யும் அத்தனை வேலைகளிலும் ஒழுங்கு மிளிர்கிறது - நீங்கள் அத்தகைய ஒழுங்கையே உங்களை சுற்றி உள்ளவர்களிடமும் எதிர்பார்க்கிறீர்கள் - விலங்கிலிருந்து ஒழுங்கை தருவிக்கும் அத்தனை யுத்திகளையும் நீங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். உபயோகம் கருதி பழக்கப்பட்ட அத்தனை விலங்குகள் சார்பில் ஒரு கேள்வி ?   மனிதனை எந்த உபயோகம் கருதி பழக்கப்படுத்தி வைத்துள்ளோம் ? உணவின் தேவை பூர்த்தியான பிறகும் ஒழுங்கின் வட்டத்திற்குள் வர மனிதர்களும் துடிப்பதன் காரணம் என்ன ? 

7. உடைமையும் ஒழி முனைப்பும்  - " மரண மணி " 

 உங்களுக்கு பிடித்த ஒருவர் பிடிக்காத செயலை செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் - பிடித்த நபர் உங்கள் உடைமையா ? - உங்கள் வட்டத்தில் தொடர அவர் உங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டுமா ? உங்களை பிடித்தவர் விரும்பியவற்றை மட்டும் தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்களா ? பிடிக்காததை ஒரு போதும் நீங்கள் செய்ததில்லை என்று கூற முடியுமா ? வட்டத்திற்கு புறம்பானவையை ஒழிக்க கோரும் மனதின் கேள்விகளை என்ன செய்தீர்கள் ? 

-------

பதினான்காவது அறை

ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்  தொகுத்த மர்மக் கதைகள் , யூமா வாசுகி (தமிழில்)

Wednesday, March 01, 2023

பவதுக்கம் - இவான் கார்த்திக்

 




இப்பிறவி,

இத்தனை வலிகளை அறிய வேண்டியா

இத்தனை அவலங்களை  காண வேண்டியா

இத்தனை உடைமைகளை பதுக்க வேண்டியா

இத்தனை கீழ்மைகளை உணர வேண்டியா

இத்தனை இத்தனையையும் விலகி ஓட வேண்டியா

ஆம் ஆம் ஆம் 

பவதுக்கம் பவதுக்கம் பவதுக்கம்

இத்தனை கோரம் இங்கேயா நடக்கிறது

இத்தனை அழகு இங்கேயா நிலவுகிறது 

ஒருவரை ஒருவர் பிண்ணி பிணைந்து உண்டு முடிக்கும் அழகின் கோரம்  

தாங்க முடியாத பெண் தெய்வமாக

தாங்க முடியாத ஆண் சொன்ன சொல் 

பவதுக்கம் பவதுக்கம் பவதுக்கம்


Tuesday, January 31, 2023

புனிதமான குடிகாரன்

கடவுள் அவ்வளவு பிஸி இல்லை மனிதன் தான் பிஸி. அவனுக்கு செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளன இதன் நடுவே அவன் எப்படி நேரில், கடவுளைப் போய் சந்திப்பது, இது ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடிய விஷயம்.


மனிதன் பிஸியாக அப்படி என்ன செய்கிறான், அவனுக்கு நிறைய வேலைகள் இருக்கும் , அங்கும் இங்கும் அலைவது, சும்மா அமர்ந்திருப்பது, பணம் கிடைத்தால், செலவு செய்வது, சேர்த்து வைப்பது. இல்லையேலில்லை. அது சரி, அவன் எல்லா காலத்திலும் இப்படி இல்லை, இப்போது தான் கொஞ்ச வருடங்களாக.. மத்திம வயதை கடக்கையில் இப்படி ஆகிவிட்டது. கடந்த காலம் நகுலன் கூறியது போல் ஒரு இடமாக கூட இல்லை, இவன் அளவில் காலம் ஒரு புள்ளி போல் ஆகிவிட்டது, புகை மூட்டத்தில் ஒரு புள்ளி போல். எதிர்காலம் பற்றிய கவலைகள் குறித்து நீங்கள் கேட்கலாம், ஆனால் இவன் கொஞ்சம் ஞாபகமறதிக்காரன். எதிர்காலத்தை நினைவில் இருந்து மீட்க மறந்தவன். இப்படி முன்னதையும் பின்வருவனவற்றையும் இழந்த அவன் இன்று பிஸியாக இருக்கிறான். இப்படி இன்றை மட்டுமே கவனத்தில் கொள்வதால் இவன் ஒன்றும் தன்னை ஆன்மீக புலி என்று கருதுவதில்லை. ஆனால் சர்வ அலட்சியமாக ஒரு தினத்தில் இருந்து இன்னொரு தினத்துக்கு பொதியின்றி செல்கிறான். இப்படி கூறலாம்.. "காலத்தைக் கரைத்து குடித்தே விட்டான்.  .. முனைப்பின்றி நாகரீகத்தின் படிக்கட்டில் அவன் அமர்ந்திருக்கிறான்.." அனாவசியமான பெரிய வார்த்தைகள். பொருட்படுத்தாதீர்கள்.

ஞாபகமறதிக்காரன் என்றாலும் கொஞ்சம் ஞாபகம் மீதி வைத்திருப்பவன். அதற்கு காரணம் கடவுளின் அத்தனை அற்புதங்களும் அவனுக்கு ஒன்றன் பின் ஒன்றாக புலப்படுவது தான். மத்திம வயதில் புகை மூட்டத்தில் இருக்கும் ஒருவனிடம் கடவுள் தன் அற்புதங்களை நிகழ்த்திக்காட்டியபடி இருக்கிறார்.

இவன் பிஸி என்பதால் கடவுளை நேரில் சந்திக்க வாய்க்கவில்லை. ஞாபக மீதி நினைவூட்ட சந்திக்க முயன்றான். ஆனால் ஆயிரம் வேலைகள். பிழைப்பு, காதலிகள், நண்பர்கள், மது,மாது அலைவது, அமர்ந்திருப்பது. இப்படி பல முக்கியமான வேலைகள்.இதன் நடுவே அவன் எப்படி கடவுளைச் சந்திப்பான்.. ஆனால் முயன்றான். கடவுள் அவனுக்கு அளிக்காத, மத்திம காலம் அவனுக்கு அளித்த, புகைமூட்ட பிரக்ஞையை அவன் விரும்பியிருந்தான் என்றே தோன்றுகிறது.ஆனால் கடவுளைப் பாருங்கள், நேரில் வராவிட்டாலும், நல்லெண்ணத்துடன் தனது அற்புதங்களை,அவனை சீண்டியபடி  நடத்திக் கொண்டிருந்தார்.

கடவுள் தான் பிஸி இல்லையே, அவர் நேரில் வரவேண்டியது தானே? அவரும் வரவில்லை. இல்லை வந்தார் அல்லது வந்ததாக இவன் புரிந்து கொண்டான். அப்படியான தருணத்தில், அவனிடம் இருந்தவை மீதமிருந்த நினைவின் இரண்டு மலர் மொக்குகள். அவற்றைக் கூட கடவுளுக்கு கையளித்து விட்டு நினைவழிந்து நல்லபடி  மறைந்தான். அது நல்லதொரு மரணம். சித்திரகுப்தனின் ஏட்டில், நினைவின் சித்திரங்கள் ஏதுமற்று ஒரு பக்கம் காலியானது இப்படித்தான். பிரார்த்தனை தொடங்குகிறது. பிறவாமை வேண்டும். 

Monday, January 09, 2023

திருடன் மணியன் பிள்ளை

திருடன் மணியன் பிள்ளை

ஜி.ஆர். இந்துகோபன் 

மலையாளத்திலிருந்து தமிழில் குளச்சல் யூசுஃப்

---


சாகசத்திற்கான மீண்டும் மீண்டும் விடப்படும் அழைப்பு.

அத்தனை வசீகர பயங்கர சாகசமும் கொடும் பாதாளத்தில் நடைபெறும்.

சாகச மனதின் தன்மை சூழல் அறிந்த உயர் அறி நிலை யோகம்.

யோகம் அளிக்கும் ஆப்த வாக்கியங்களின் கூர்மை.

விழுமியங்கள் உடனான முடிவில்லாத தொடர் பரிசீலனை.

குணங்களின் பண்பாட்டை பொது நியாயத்தை தக்க வைக்க அலைவுறும் சஞ்சல மனம்.

கொடும் பயங்கரங்கள் மறையும் மென் நகை மொழியின் வளம் விசித்திரம்.

மடித்து வைத்த நினைவுகளை சொல்லில் மீட்க முடிந்த சரஸ்வதி கடாக்க்ஷம்.

குற்றவுணர்ச்சியின் அகல் ஏந்திய வழி காட்டும் பந்தம்.

ராஜா வேஷம் போட்ட திருடன் இல்லை திருடன் வேஷம் போட்ட ராஜா.

இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துக் கொண்டே இருப்பவன்.

கள்ளும் பெண்ணும் கூடிய  யாருமற்ற பகலையும் எதற்கும் துணிந்த இரவின் நிழலையும் கொண்டவன். 

நியதியின் எதிர் திசையில் சென்ற தனி மனிதன் ஒருவனின் வலி மிகுந்த பயணம்.