Sunday, December 05, 2021

எழுத்தாளர்கள் நூல்கள் நிகழ்ச்சிகள்- அசோகமித்திரன் - சில குறிப்புகள் சில கட்டுரைகள்

 

1999,2000,2001 ல் எழுதப்பட்ட கட்டுரைகள் -  புத்தக அறிமுகங்கள், சுருக்கமான நினைவோடைகள், வெவ்வேறு இதழ்களில் வெளி வந்த கட்டுரைகள் அடங்கிய நூல் 


சுருக்கமான நினைவோடைகள் 

ஜி நாகராஜன் 

நம்பி கிருஷ்ணன் 

ஆர் கே நாராயணன் 

புதுமைப்பித்தனை முன் வைத்த கநாசு

எம் வி வெங்கட்ராம்

இந்திரா பார்த்தசாரதி 

தஞ்சை பிரகாஷ் 

ந பிச்சமூர்த்தி

சிவபாதசுந்தரம்

தி ஜானகிராமன் 


ஜெயமோகன் சொல்புதிது நேர்காணல் 

நல்லி நாராயணசாமி செட்டி - நம்பிக்கை -  அமி தொடர்பான வாழ்க்கை நிகழ்வு பற்றிய குறிப்பு



பிற கட்டுரைகள்

இருபதாம் நூறாண்டு முடிகையில் தமிழ் சினிமா 

உலக தமிழ் மாநாடுகளின் எதிர்காலம் 

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் படைப்பிலக்கியம் 

அச்சு ஊடக எதிர்காலம்.

அவதூறும் சாதனையும் - கல்கி புதுமைப்பித்தன் 

வசீகரத்தின் இலக்கணம் - டி ஆர் ராஜகுமாரி

குஷ்வந்த்சிங் கின் பல்லக்கு 

ஒரு வசனமில்லா நாடகம் - முட்டாள் சொன்ன கதை  1974 ல் எழுதப்பட்டது 

---

படித்ததில் பிடித்தவை 

" மனிதனை மனிதன் சுரண்டும் தன்மை எந்த மகானை மதித்திருக்கிறது? "

"மறு பிறவி கர்ம பலன் ,விபரீதத்திற்கு வேறு காரணங்கள் வேண்டாம் "

"திராவிட கட்சி பிரமுகர் கமலஹாசன்"

"உலகின் அனைத்து சுற்றுலா இடங்களும் தமிழ் சினிமாவின் பாடல் காட்சிகளுக்கும் நடன காட்சிகளுக்கும் பின்னணியில் பாதாம் அல்வாவில் கடுகு கருவேப்பிலை தாளித்தது போல இருக்கும்."

"இரண்டாயிரமாண்டு பிறக்க போகும் இந்த தருணத்தில் தமிழ் சினிமா ஒரு ரசிக்கத்தக்க இரைச்சலாகவும், அனுபவிக்கதக்க குழப்பமாகவும் இருக்கிறது. "

"இரு பாகவதர்கள் உச்சி வெயிலில் ஒரே இடத்தில் நின்று கொண்டு பாடிய காட்சி இன்னும் மறக்கவில்லை. மறக்கக் கூடாதது அது தானோ ? "

ராஜஸ்தான் மாநிலத்தில் எழுத்தாளர் நைபால் மாநாட்டில் - வாயில் மண்ணெண்ணெய் கலவை ஊற்றி வித்தை காட்டிய ஆண்கள் - நைபால் அந்த ஆண்களுக்கு பல நூறு ரூபாய்க்கு குறையாது வெகுமானம் அளித்தது ! அடுத்த வரி - "பெண்கள் நடனத்தில் பயிற்சிக்கும் தேர்ச்சிக்கும் ஒரு குறைவும் இல்லை. ஆனால், அவர்கள் நெருப்பை ஊதி பரபரப்பேற்படுத்தவில்லை "

--

அமி குறிப்பிட்டிருந்த  சிறுகதைகள் புத்தகங்களில் சில

அட்லாண்டிஸ் மனிதன் - எம்ஜிசுரேஷ்

இயந்திர மாலை ஆர் ராஜகோபாலன் 

நீலக்கடல் , மருமகள் வாக்கு  நம்பி கிருஷ்ணன் 

பைத்தியக்கார பிள்ளை பெட்கி- எம் வி வெங்கட்ராம் சிறுகதைகள்

தி ஜானகிராமன் - நாலாவது சார் சிவஞானம் 



No comments: