Tuesday, March 26, 2024

யஹதா ககாமி

நிகழ்வுகளின் வேடிக்கை மற்றும் உயிர் நிறைந்த சம்பவங்கள் இரண்டும் அமைந்த புற சூழல் இந்த கதைகளின் உள்ளே நுழைய நம்பகமான வாயில் தோரணங்களாக அமைந்திருக்கின்றன.




நுழைந்து நோக்குகையில் ஒப்பு கொள்ளவே இயலாத வலிகளின் நிழலில் கதையின் மாந்தர்கள்.

அத்தனை வலியையும் எப்படியோ சுமக்கும் மனிதர்களின் கேள்விகளுக்கு பதில்கள் இல்லை.


இப்படியும் நடக்கிறது என்பதே தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது, அனைத்து மனிதர்களும் எதிர் கொள்ளும் இழப்போ வலியோ இல்லை இவை. கதை மாந்தர்களின் சொந்த தவறான வினைகளின் விளைவுகளும் அல்ல இவை, காலம் தேர்ந்தெடுத்து இந்த சுமைகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.  


கேவல்களுடன், அதியுச்சி விளிம்பின் எல்லையில் நின்றுக் கொண்டிருக்கும் அவர்கள்.


அவர்களின் இருட்டு நிழலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாய் அமைந்த மனிதர்களின் சித்திரங்களும் கதைகளில் வருகின்றன. இவர்களுக்கு நம் காதை அடைக்கும் நியாயங்கள் ஏதேதோ இருக்க கூடும்.



Tuesday, March 19, 2024

ஐந்து வருட மௌனம்

கதைகளின் ஆழ்படிமங்கள் 

https://www.sramakrishnan.com/%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

ஐந்து வருட மௌனம் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் உங்களுக்கு எழுதுகிறேன்.




இக்கதைகள் மொத்தமாய்க் குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கிறன. இக்கதைகளின் நாயக நாயகியர் வாழ்வின் பாரத்தை மௌனமாகச் சுமப்பவர்கள், அனைத்து விஷயங்களுக்கும் தார்மீக பொறுப்பேற்பவர்கள்,பழையவற்றில் சிலதை விடாது பிடித்துக் கொண்டிருப்பவர்கள்.சிறிய வைராக்கியங்கள் நிறைய உடையவர்கள் , சிறிய விஷயங்களிலேயே நிறைவை காண்பவர்கள், தனித்துவமிக்கக் குணாதிசயம் வழி துயர் மிகு வாழ்வை கடப்பவர்கள். நீங்கள் அவர்களது வாழ்வை எழுதியிருக்கும் விதத்தில் அவர்களிடம் பெரிய குற்றச்சாட்டோ பரிதாபமோ இல்லை , சிறிய சலிப்புடன் தங்கள் வாழ்வின் பாரத்தைச் சுமக்க தெரிந்தவர்கள், உங்கள் எழுத்து வழி கையறு வாழ்விலும் உறுதியான மனம் படைத்தவர்களின் கதைகளாக அமைந்துள்ளது இந்தத் தொகுப்பு.

துயரம் பொறுத்தலும்’ ‘மாறிக்கொண்டே இருக்கும் காலம்’ குறித்த பிரக்ஞையும் தங்கள் கதைகளின் ஆழ்படிமங்கள். உங்கள் கதைகளின் கலை வெற்றிகள் எவை என்று கேட்டால் இவை இரண்டையும் கூறுவேன்.


இவற்றைத் தாண்டி இத்தகையவர்களின் கதைகளைக் கூறும் தங்களைப் போன்ற எழுத்தாளுமையின் பரிவு அளிக்கும் ஆசுவாசம் இன்றியமையாதது, பாரம் சுமப்பவர்கள் இளைப்பாற தங்கள் கதைகள் ஒரு சுமைதாங்கியாக இருந்து வருகின்றன.நீ மௌனமாய்த் துயரப்படுவதை நான் அறிவேன் என்னும் பரிவு.