Sunday, July 21, 2019

உத்தம வில்லன்


உத்தம வில்லன் 

ஆதிசங்கரர் கதையும் அத்வைதமும் உத்தமன் கதையாய் உத்தம வில்லன் என்றொரு அபாரமான திரைப்படமாய் வந்திருக்கிறது

Mano s part – Ample opportunity to contemplate on choices / decisions taken by Mano –
One end people calling it Justification ( Pure Kamal Fans call it Open Confession) to other end we can take the liberty to interpret that Mano is lying straight faced within
the movie itself

Mano s Part – Few of the scenes are not Organic in sense – Director had a Outcome / Transformation in his mind towards which the characters enact out or present in scene -Scene is conveniently arranged which irks viewers / purists where as the scene is enacted out beautifully fantastically most of the times – My Favourite is Tree of Life scene sequence. – For no reason Mano takes his son to his room while Manonmani reads his letter to Yamini, KB asks andrea to be in screening room when chokku,Mano discuss undelivered letters, KB accompanies Mano when PC gets to know about Mano s illness – all such scenes are conveniently arranged – Leaf out of Theater for Cinema

Uthaman part – this is at a different level a) All themes of Comedy used are already well oiled as part of Tamil film comedies with few scenes have direct mapping to legendary
debase comedies – Snakebite, Deadbody comedy,Two Bananas(Karagattakaran), Hitting in head( Ullathai alli tha), Kuyil shit (Vel), ear biting, Stoning, Slapping,Trumpets blown while speaking (Pulikesi), kicked onto water (Chinna Gounder),rusted sword (Pulikesi), Ellorum vaarungal when nasser discloses secret(Friends), Rat Chase, body odours, spoof dances, dysentery we have seen it all before in tamil Film s debase comedy – In a subtle indication – barber indicates bell before Uthaman gets kicked into water. - remember goundamani senthil river comedy from Chinna gounder

Icing on the cake Kamal brilliantly imitates Kaka Radha, Balaiyah & Sivaji as Uthaman story goes on 1.      Kamal wanted to make a film on Adisankara which we were told in the movie that it is dropped to give way to a comedy movie – But it is not dropped altogether – Uthaman part is tracing Adisankara s Story right in between debase comedies listed above. This by itself is an great attempt. Lot of indications throughout the movie about Sankarar’s Advaitam, Jainism & Budhism – We have “small god” worship indication in Sudalaimadan. Adisankarar s Advaitam has direct answer to Mano s quest for immortality

colour changes from start to end movement towards advaitam saffron

2.      One of the best cinema to have come out of Tamil with lot of Valid subtexts – Felt overwhelmed after Multiple viewings

4.      Kamal attempted to Kill Duality at all Levels – His Real vs Reel life , Masala Cinema Vs Artwork, Life Vs Death, Man vs God, – Non Duality is the core principle of Adishankarar s Advaitam – Adi Shankarar s Life history is the Uthaman Portion. People these days want Comedy movies in general where as Kamal wanted to make a Film on Adishankara – Uthaman part gratifies both needs.




வேங்கைச் சவாரி - விவேக் ஷன்பேக்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து ஒன்றரை வருட காலமாக வாசித்து வருகிறேன். பல புதிய புரிதல்கள், நூல்களின் அறிமுகங்கள்,இந்தியா பற்றிய தெளிவு என்று பல வழிகளில் உங்களை வாசிப்பது ஒரு நிறைவைத் தருகிறது நன்றிகள் பல.தங்களின் ரப்பர், ஏழாம் உலகம் மற்றும் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் முதலியவை படித்திருக்கிறேன்.நான்கு வேடங்கள் என்ற தங்களின் கட்டுரை எனக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது என்று சொன்னால் மிகை அல்ல.
தற்போது விவேக் ஷன்பேக் – வேங்கைச் சவாரி படித்தேன். வேங்கைச் சவாரி, சுதீரின் அம்மா இந்த கதைகள் என்னுள் மிகுந்த மன எழுச்சியை ஏற்படுத்தின. நாம் அறியாத ஒரு மனிதனின் திட்டத்தின் ஒரு பகுதியாக நம்மையும் அறியாமல் நாம் இருக்கிறோம் என்பது ஒரு வினோதம். தற்போதுள்ள நுகர்வு வெறி அந்த திட்டத்தின் ஆயுளையும் பலத்தையும் பல மடங்கு பெருக்குகிறது. இவற்றை மீறி ஒருவன் தன் தேவைகளை தெளிவாக உணர்ந்து செயல்படுதல் முற்றிலும் சாத்தியமா ? இல்லை முடியவே முடியாதா ?
நன்றி. அன்புடன்,
மணிகண்டன்

அன்புள்ள மணிகண்டன்
வேங்கைச் சவாரி முக்கியமான சிறுகதை. நாம் நம்மைச்சூழ்ந்துள்ள உலகியல் சதுரங்கத்தின் காய்களாக மட்டுமே செயல்படுகிறோம் என்பதை துணுக்குறும்படி சித்தரிக்கிறது
அதிலிருந்து தப்ப ஒரே வழிதான். அதை உணர்ந்துகொள்வது. அதை அறிந்ததுமே ஒருவன் அதிலிருந்து விடுபட ஆரம்பிக்கிறான். அறியாமலிருக்கும்தோறும் அதனுள் வாழ்கிறான்
ஜெ


https://www.jeyamohan.in/38032#.XTRzFPIzZ0w

Sufi paranja Katha - KP Ramanunni

Sufi paranja Katha

Sir - Just Finished reading "Sufi paranja Katha" in Tamil " Sufi sonna Katha" - Excellent novel aesthetically dealing Love, family lineage,Religion/Caste,personal quest,spirituality & Burden of History and specifically usage of words though I read only in Tamil. 

Family Lineage of Pullara Tharavadu / Menon/Brahmins/ Muslims in Kerala are dealt with the help of History highlighting inevitable mix of caste and religion in Long course of time, Sangu Menon s spiritual quest and his deliberations, Vigor of Love both in its mental and physical quests - Its great attempt to weave all above aspects in a novel

 To top it all you have provided a meaning to all this in highlighting harmony of all religions and need for more Beevi s and Bagawatis to push a good man in thought to good man in deed I particularly 

Liked your line " இவை அனைத்தையும் பார்த்து மனமுருகிய இக்கிராமத்தின் தாய்மை தான் இறுதியாக பீவியாக அவதரித்து உள்ளது" 

Thanks a Lot

Dear Sri. Manikandan,

Thank you very much for your good words about my novel. It is really a blessing for a writer to have true and tasteful readers like you. We will keep in touch.
Please e mail your phone no. 

With warm regards,

K.P. Ramanunni

தமிழில் குறிஞ்சி வேலன்

கோதானம் - முன்ஷி பிரேம்சந்த்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
கோதானம் நாவல் படித்து முடித்தவுடன் இம்மின்னஞ்சலை தங்களுக்கு எழுதுகிறேன்.
இந்த நாவல் காட்டும் இந்திய கிராமத்தின் சித்திரம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. அடுத்தவேளை உணவு பற்றி மட்டுமே சிந்தனை செய்து செய்து வாழ் நாளை கடத்துவது எத்தனை கொடுமையானது. எத்தனை கோடி ஹோரிராம்கள் இம்மண்ணில் இருக்கிறார்கள். இந்த கொடுமையான சூழலிலும் ஹோரி தனக்கென சில கடமைகளை மனதில் நிறுத்தி நெஞ்சில் அபரிமிதமான வலிமையோடு தன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான். குடும்ப வாழ்க்கை அளிக்கும் மனவலிமை எத்தனை அசாதரணமானது.
ஆங்கிலேயரின் கொடுமையான வரிவிதிப்பு நம் கிராமங்களை எப்படி வெறித்தனமாக உறிஞ்சி இருக்கின்றன. பெரிய பஞ்சங்கள் தவிர்த்து வெயில் காலங்களில் வெறும் கிழங்கிற்கும் பிடி அரிசிக்கும் எத்தனை போராட்டம் நடந்திருக்கிறது. அதே வேளையில் இப்போது இந்தியாவில் வீணடிக்கப்படும் அல்லது வெறித்தனமாக உண்ணப்படும் (நான் உட்பட) உணவறைகள் ஒரு வித குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றது

ஹோரி முழுமையாக தன்னை சமூகத்திற்கு ஒப்படைத்தவன். சமூகம் கிழித்த கோட்டை தாண்டாதவன் .தனியா கலகக் குரல். தன்னால் முடிந்த வரை வெற்று பெருமையும் அநியாயத்தையும் எதிர்த்து தன் குடும்பத்தை நடத்த முயல்கிறாள். கோபர் நிலவுடமை சமூகத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு இந்தியா வைத்த முதல் அடி. இன்று வரையில் முற்று பெறாத ஒரு முயற்சி. போகிற போக்கில் இது சரியான நகர்வு தானா என்ற கேள்வியும எழுகிறது. தன்னிறைவு கிராமங்கள் பெற்று காந்திய பாதைக்கு திரும்ப இயலுமா என்ற ஆசையும்.

மேஹ்தா மாலதி ஆண் பெண் விவாதங்கள், ஒரு ஆணோ பெண்ணோ தன் கடமையை, தன்னை உணர வேண்டிய அவசியத்தை , பிரசார அல்லது புத்திமதி கூறும் தொனி இல்லாது யதார்த்தமாக, அவற்றைப் பற்றி பேசுகின்றன .ராய் சாஹாபின் குற்ற உணர்ச்சிக்கும் இந்த நாவலில் இடம் இருக்கிறது அதுவே இந்த நாவலை முழுமையடைய செய்கிறது. மிர்சா சாகிப் ஒரு zorba. ஒரு கனவின் இடம் இவருக்கு.

என்னை மிகவும் நெகிழ வைத்த கட்டங்கள், மேஹ்தாவிடம் மலைப் பெண் காட்டும் அன்பு, தனியா,ஹோரி ஜுனியாவை ஏற்கும் தருணங்கள், சுஹியாவின் முலை சுரக்கும் தருணங்கள். இந்த மண்ணில் என்றும் இருக்கும் தாய்மையே நம்மை வாழ வைக்கும், புற பொருளாதார விஷயங்கள் ஓரளவே மனிதனை நெருக்கும். ஆனால் அவன் அதையும் மீறி ஒளிர்வான். இந்த நாவல் என்னுள் ஏற்படுத்தும் நம்பிக்கையை என்றும் தக்க வைக்க முயல்வேன்.
தங்கள் கட்டுரை மூலமே இந்த நாவல் அறிமுகம் ஆனது. சரஸ்வதி ராம்நாத் மிகுந்த அர்ப்பணிப்புடன் மொழிபெயர்த்திருக்கிறார்.
அன்புடன்,
மணிகண்டன்

https://www.jeyamohan.in/78208#.XTRudPIzZ0w

தாண்டவராயன் கதை - பா வெங்கடேசன்


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 

தாண்டவராயன் கதை - வாசித்து முடித்தேன் - மிகவும் நிறைவான வாசிப்பு அனுபவமாக இருந்தது - துப்பறியும் கதையின் சுவாரசியமும் அதே நேரத்தில் எண்ணற்ற கதைகளின் வழி சமூக வரலாறு  , பொருளிய , தத்துவ தளங்களில்  சிந்திக்க, உரையாட அற்புதமான அனுபவமாக அமைந்தது

தங்கள் தளத்திலும்(இரண்டாயிரத்திற்கு பின் தமிழ் நாவல்கள்)  சாரு அவர்களின் தளத்திலும் இந்த நாவல் பற்றி படித்தப் பின்னர் இந்த நாவலை வாங்க நான் மீண்டும் முயற்சிக்கத் தொடங்கினேன்.  ஆழி பதிப்பகம் தற்போது இயங்காத காரணத்தால் எந்த புத்தகக்  கடையிலும் கிடைக்காத பக்ஷத்தில் ஓலைச் சுவடி போன்ற அரிதாகி விட்ட( நன்றி சாரு)   இந்தப் புத்தகத்தை (அகநாழிகை பொன் வாசுதேவன் தயவில்)  கையகப் படுத்தினேன். சிவராம் கரந்தின்  மண்ணும் மனிதரும் , ராஜ் கௌதமனின் சிலுவை ராஜ் சரித்திரம் எங்கும் கிடைப்பதில்லை ( தமிழினி  மீண்டும் பதிப்பிப்பார்களா தெரியவில்லை )       

நீண்ட நீண்ட வாக்கியங்கள் துவக்கத்தில் மலைப்பை ஏற்படுத்தினாலும் பின்னர் ஒரு புதிர் போல் ஸ்வாரஸ்யத்தை தூண்டியது. பரீட்சைக்கு படிப்பதைப் போல் படித்து முடித்தேன். தொன்று தொட்டு வரும் துயரக் கதையை, உணர்ச்சி பூர்வமாக மட்டும் அல்லாது தேர்ந்த சமூக விமர்சகனின், தத்துவ ஆசிரியனின்  கனகச்சிதமான  பார்வையை கொண்டு சொல்லியிருக்கும் பா வெங்கடேசன் அவர்களின் படைப்பாற்றலும் அர்ப்பணிப்பும் அபாரம்

கையகப் படுத்திய நாவலுடன் மயிலை பரிசல் கடையில் செந்தில்நாதன்  ,நண்பர் லியோ , நண்பர் நரேன் மற்றும்  கி சச்சிதானந்தம்  அவர்களுடன் சிறிது நேர உரையாடலுக்கு பின்னர் திரு கி தாண்டவராயன் கதையை வாங்கி "ஓசூர் காரர்" என்று குறிப்பிட்டு நீண்ட நீண்ட வாக்கியங்கள் குறித்து குறிப்பிட்டு "நான் குறையா சொல்லவில்லை முயற்சி வித்தியாசமா இருக்கு ஆனால்  படிப்பதற்கு அசாத்யமாய் இருப்பதாக சொன்னார்" ( கி விரைவில் தாம்பரத்தில் " ஆனந்த் குமாரசாமி நினைவு நூலகம்  துவங்க இருப்பதாகக்  கூறினார் , பீகாக் பதிப்பகம் பெயரைக் குறிப்பிடத்தும் கண்கள் மின்னின - மௌனி சிறுகதைகள் தொகுப்பு

நாவலைப் படித்து முடித்தவுடன் சிறு குறிப்புகள் எழுத முயன்று உதிரி வாக்கியங்களையும் ஓரிரு சொற்றொடர்களையும்  மட்டுமே எழுத முடிந்தது . கதை படிக்கும் நேரங்களில் ஒரிஜினல் வாழ்வில் (?)  நடக்கின்ற   நிகழ்ச்சிகளை கதையுடன் முடிச்சு போட்டு  ( இதற்கு என் ஆணவமே காரணம் எனினும் )  நினைக்கையில் இன்று கபாலீஸ்வர மாட வீதியில்  அத்தனை பொம்மைகளுக்கு நடுவே தேரோட்டுபவனின் சிலை கண்டதில் ஒரு மனத்திருப்தி

தாண்டவராயன் கதையை படித்ததும் " மிலன் குந்தேராவின் Unbearable lightness of being படிக்க  நினைத்திருந்தேன்  இன்று தான் ரியாஸ் கடிதத்தில் பா வெங்கடேசன்  மிலன் குந்தேராவின் பாதிப்பைப் பற்றி சொல்லி இருப்பதைப் பார்த்தேன் - ஒரு சேர அதிர்ச்சியும், என் வாசிப்பின் மீதான மன நிறைவும்    

தங்களுடன் பகிரத் தோன்றியது ஆகவே இந்தக் கடிதம்

அன்புடன்
மணிகண்டன்