Sunday, July 21, 2019

வேங்கைச் சவாரி - விவேக் ஷன்பேக்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து ஒன்றரை வருட காலமாக வாசித்து வருகிறேன். பல புதிய புரிதல்கள், நூல்களின் அறிமுகங்கள்,இந்தியா பற்றிய தெளிவு என்று பல வழிகளில் உங்களை வாசிப்பது ஒரு நிறைவைத் தருகிறது நன்றிகள் பல.தங்களின் ரப்பர், ஏழாம் உலகம் மற்றும் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் முதலியவை படித்திருக்கிறேன்.நான்கு வேடங்கள் என்ற தங்களின் கட்டுரை எனக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது என்று சொன்னால் மிகை அல்ல.
தற்போது விவேக் ஷன்பேக் – வேங்கைச் சவாரி படித்தேன். வேங்கைச் சவாரி, சுதீரின் அம்மா இந்த கதைகள் என்னுள் மிகுந்த மன எழுச்சியை ஏற்படுத்தின. நாம் அறியாத ஒரு மனிதனின் திட்டத்தின் ஒரு பகுதியாக நம்மையும் அறியாமல் நாம் இருக்கிறோம் என்பது ஒரு வினோதம். தற்போதுள்ள நுகர்வு வெறி அந்த திட்டத்தின் ஆயுளையும் பலத்தையும் பல மடங்கு பெருக்குகிறது. இவற்றை மீறி ஒருவன் தன் தேவைகளை தெளிவாக உணர்ந்து செயல்படுதல் முற்றிலும் சாத்தியமா ? இல்லை முடியவே முடியாதா ?
நன்றி. அன்புடன்,
மணிகண்டன்

அன்புள்ள மணிகண்டன்
வேங்கைச் சவாரி முக்கியமான சிறுகதை. நாம் நம்மைச்சூழ்ந்துள்ள உலகியல் சதுரங்கத்தின் காய்களாக மட்டுமே செயல்படுகிறோம் என்பதை துணுக்குறும்படி சித்தரிக்கிறது
அதிலிருந்து தப்ப ஒரே வழிதான். அதை உணர்ந்துகொள்வது. அதை அறிந்ததுமே ஒருவன் அதிலிருந்து விடுபட ஆரம்பிக்கிறான். அறியாமலிருக்கும்தோறும் அதனுள் வாழ்கிறான்
ஜெ


https://www.jeyamohan.in/38032#.XTRzFPIzZ0w

No comments: