சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல் கதை தொகுப்பு வாசித்தேன்.
முகநூலில் ஏற்கனவே கிட்ட தட்ட அனைத்து கதைகளையும் வாசித்திருந்து எனக்கே வியப்பாக இருந்தது. அந்த அளவிற்கு போகன் சங்கர் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன் என்று புரிந்தது. செயலி இல்லமால் facebook ID இல்லாமல் தங்கள் facebook பக்கத்தை Chrome browser வழி மட்டுமே பின் தொடர்ந்து அனைத்து கதைகளையும் வாசித்து இருக்கிறேன்.
மீள் வாசிப்பில் பின் வரும் கதைகள் மிகவும் பிடித்திருந்தன.
வெளியேற்றம்
கடவுளின் இல்லம்
புனிதமும் சாதாரணமும்
இம்மானுவேல் காண்டின் ஸ்பூன்
மோகக்கிணறு
மறைந்த புத்தகம்
காலப்பறவை
கதவுகள்
சமிக்கை
புண்ணியகரை
வரி
புறக்கணிப்பு, கோபம், ஆன்மீகம், மன உடைவு, ஆசை, குற்ற உணர்ச்சி, ஞாபகம், இயலாமை, சந்தேகம், நிவர்த்தி, முழுமை - இக்கதைகளை நினைவு கூற வசதியாக இந்த சொற்களை வைத்து கொள்கிறேன். குறுங்கதைகள் கொடுக்கும் முதல் அதிர்ச்சிகள் தாண்டி இந்த வடிவத்தில் வாசகன் நினைவு கூற தக்க முழுமை பார்வை மேல் உள்ள கதைகளில் அமைந்துள்ளதாக நினைக்கிறேன.
ஏனைய கதைகள் சுவாரஸ்ய சம்பவங்களாகவும் திடமான கருத்தாகவும் அமைந்திருக்கின்றன.
பாருகுட்டியின், தீவிர சாமியார்களின் கதைகள் இந்த தொகுப்பில் குறைவு அல்லது அநேகம் இல்லை. அறிவியல் புனைவுகளும் அநேகமாக இல்லை, இளவயதினர் இக்கதைகளில் பெரும்பாலும் வரவில்லை.
மேற்படி குறிப்பிட்ட கதைகளில் போகன் கதைகளின் உண்மையான ஆன்மீகம் வெளிப்படுகிறது. மனக்குழப்பத்திலும், ஆற்றாமையிலும், குற்ற உணர்ச்சியாலும், இயலாமையாலும், ஏக்கத்தாலும், அலைக்கழிக்கப்படுபவன் மேல் ஆசிரியர் செலுத்தும் வெளிச்சம் இந்தக் கதைகள்.
எவரும் தன்னைக் கண்டு கொள்ள, தன் கருணையின் எல்லையை விரிக்க சிறு வாய்ப்பு இந்தக் கதைகள்.







