Wednesday, May 20, 2020

My American Uncle - Alain Resnais

My American Uncle , Starts really weird with Montage shots travelling through childhood of 3 different people and at the same time a scientist explaining basic functioning of brain,starts with explaining about brain of an insect inter cut with a wonderful crab moving its pincers as if puzzled by the observation of the voice over saying insect do not have emotions but only reproductive and protective instincts, further moving to mammals who have got an improved brain with the emotive faculty and adding further comes to Man who has got this special associative ability, thus the backdrop is drawn, 3 people 2 He & 1 She, their lives roll on and all three arrive at their adult phase.

A Writer , A Factory Manager and an Actress , Each one have their own equation with their Families and wrestle with idea of breaking from their Family for different reasons - Actress for an independent Life , Writer for political growth and Factory worker for proving his utility to Factory Management, All Three lives inter wine is peculiar Fashion ,A premise originates which we will examine later, Independent Actress is always at loggerheads with who ever she interacts with starts a relationship with Writer only to be separated by that premise, She as a professional dress designer interacts with Factory Manager,who is already challenged by another Manager appointed to work alongside him, She eggs him to perform better in his role, resulting him complete burnout of the Factory Manager,

Actress is the Utopia, believes on the premise that Family will die allowing the individual to Flourish in his Liberty, but rather it did not die. Family provides the necessary cushion for individual achievers to reach their goals,a contradictory but practical occurrence, Family trumps the Utopia that all are equal, Further from the other end of Spectrum we have the Utopia of Machines & Capital causing a man to burn out only to be humanized and saved by his Family's emotional support. Due to Family's Stable support Writer becomes a successful Politician only to wrestle with idea of independent individual , wrestle with Utopia forever.  sums up confidently that this much We Know and we need to move further from here.

My American Uncle stands as a Wonderful Metaphor to Individual Ambition , No One knows if American Uncle succeeded in Life , but there is always a word around about American Uncle.

Sunday, May 17, 2020

விபரீத ராஜ யோகம் - கல்யாணராமன்

"விபரீத ராஜ யோகம் " சிறுகதை தொகுப்பு வாசித்தேன் - புத்தகம் குறித்த எனது சில எண்ணங்களை பின் வருமாறு தொகுத்துள்ளேன்


 நீங்கள்  ஆதவனின் "புதுமைப்பித்தனின் துரோகம் " வாசித்திருக்க கூடும் எவ்ளோ சொன்னாலும் வாசகனின் கிறுக்கு புத்தி மீண்டும் மீண்டும் செய்யும் அற்பத்தனம் இருந்தும் தங்களது பெரும்பாலான சிறுகதைகளின் தன்வரலாற்று தன்மை என்னை அவ்வாறு சிந்திக்க வைத்தது - மன்னிக்கவும்


யோசித்துப் பார்க்கையில் இந்த தன் வரலாற்று தன்மையான உரைநடை  கதைகளில் அபாரமாக கூடி வந்திருக்கிறது சரளமாக காலத்தில் முன்னும் பின்னும் செல்லவும் , நிகழ்ச்சி, அடுத்த நிகழ்ச்சி என அன்றாடத்தையும்  அதே நேரத்தில் என்றும் உள்ளவற்றையும் கோடிட்டு காட்டி , ஒரு சேர வாசிக்கையில் , சுகம் வலி என பிரித்தறிய முடியாத நினைவுகளை மீட்டியபடியே வாசிப்பு அமைந்தது .மற்றுமொரு அழகிய உத்தி சட்டென்று கதைக்கோணம் வேறு ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் முடிவது - நன்கு ரசிக்கும்படி இருந்தது.


 தன் வரலாறு என்பதாலோ என்னவோ பழைய கதைகள் என்னும் தொனி அனைத்து கதைகளிலும் இருக்கிறது - சில கதைகளின் ஆதாரமான விஷயங்கள் ( ஜல சமாதி, பிரும்ம ஞானம் , சிரிப்பு, ஒரு பூனையும் சில மழைநாள்களும், பெர்னார்ட் ஷா பிறந்தார்  ) இன்று சிக்கலான விஷயங்கள் அல்ல , நடைமுறையிலும் அவை எளிதாக புரிந்து கொள்ள படுகின்றன


மாறாக  "பிம்பங்கள் மாயைகள் லீலைகள்" , "எதிரி " விபரீத ராஜ யோகம்" , "ஏழாம் பிறை", "கழுத்தைப்பிடி"  போன்ற கதைகளில் வரும் ஸ்தூலமில்லாத விஷயங்களே என்னை வசீகரிக்கின்றன - இந்தக் கதைகளே என்னை மிகவும் கவர்ந்தன.


 தங்கள் கதைகள் தூண்டும் நினைவுகள் மனதை மகிழ்வித்தது , நினைவுகள் என்று மட்டும் சொல்லி பழையது என்று போக்கு காட்டி எனக்கு நானே சமாதானம் சொல்லிக்   கொண்டாலும் " குடும்ப பாரம்" அல்லது  பொதுவாக " பொறுப்பு " என்று சொல்லப்படும் விஷயங்கள் குறித்த உரையாடலாகவும் உங்கள் கதைகள் இருக்கின்றன -


குறிப்பாக முப்பத்தைந்தை தாண்டி உள்ள எனக்கு சாப்பாடு, சினிமா, புத்தகம் தவிர வேறு பெரிய ஆசைகள் இல்லை என்பது எனக்கே சிறு சந்தேகத்துடன் ஒப்பு கொள்ளக் கூடிய ஒன்றாக இருந்தாலும் எனது இந்த   stoic ness ஐ சுற்றி உள்ளவர்கள் உரிய முறையில் டீல் செய்து வருகிறார்கள் - அந்நடவடிக்கை சில நேரங்களில் என் " நானை" துளைத்தும் பல நேரங்களில் என் சாமர்த்திய அமைதியாலும் சில நேரங்களில் என் இயல்பான அமைதியாலும் டயர்ட் ஆகாமல் (சைக்கோ திரைப்படம் ) நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன - தன் வரலாறு முற்றும்.


கதைகளில் உள்ள வெளிப்படையான ஆன்மீக சாய்வு , குறிப்பாக , த்வைதம் , அத்வைதம் மற்றும் சூன்யம்  குறித்த விஷயங்கள் கச்சிதமாக இருக்கிறது - காரண காரியம் குறித்து நீங்கள் பெரிதும் அலட்டிக் கொள்ளாதது மகிழ்ச்சி - அதே நேரத்தில் நிஜத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள்  போல் உள்ளதால் கதைகளின் நம்பக தன்மை கெடவில்லை. 


கதை வரிகளில் " தித்திப்பு"  என்கையில் திஜா வும் "நடிப்பு" என்கையில் ஆதவனும் , இரு ஆசிரியர்களும் நினைவுக்கு வருகிறார்கள்


நல்ல புத்தகம் 

Friday, May 15, 2020

புது பஸ்டாண்ட் - சத்யானந்தன்

சத்யானந்தன் அவர்களின் புது பஸ்டாண்ட் நாவல் குறித்த சில எண்ணங்கள் 

திருவெள்ளறை ராஜா கோபுரம் ஒரு அழகான குறீயீடாக வந்தமைந்துள்ளது - முற்று பெறாத எதோ ஒன்றை , ஒரு சிறு குறையை , மானுடம் சாதிக்க முடியாது எதோ ஒன்றின் விளக்கமாக அமைந்துள்ளது - தொடர்ந்து படித்து கொண்டிருக்கையில் வெவ்வேறு உதிரி சம்பவங்களின் தொகுப்பாக உணர்ந்தேன் ஆனால் ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் இப்புதினம் சமகால வாழ்வின் மொத்த சூழலையும்  வாசகன் கண் முன் கொண்டு வந்து நிறுத்த பிரயத்தன பட்டிருப்பது புரிந்ததது.

பழைய பெருமை அதன் ஓட்டுவாரொட்டியாக சாதி X தற்கால இளைஞர்களின் சாதி குறித்த மதிப்பீடுகள் X  குடும்ப உறவுகளில் அதன் தாக்கம் X இயற்கை விவசாயம் குறித்த ஆசை ஆர்வம்  Vs அதன் சாதீய கூறுகள் X அரசியல் அதிகாரத்தின் தின் தடித்தோல் மற்றும் கயமைத்தனம் X விஞ்ஞான தொழில்நுட்பத்தின் கட்டற்ற பாய்ச்சல் X தொழில் நுட்பம் சமூக உறவுகளில் ஏற்படுத்தும் சிக்கல்கள்  என கிட்டத்தட்ட ஒரு 360 டிகிரி பார்வையை கொடுக்க முயன்றுள்ளது, 

நாவலின் இவ்வடிவம் எனக்கு மிகவும் புதியதாக இருந்தது - சாதியும், தொழில்நுட்ப மாற்றமும் தான் இடையறாது நம்மை தொடர்ந்து வந்து கொண்டிருப்பவை - மனிதன் இயந்திரங்களுடன் அதிகம் பழக துவங்கிய பிறகு ஏற்படும் உளைச்சலை சமன் படுத்த பழையதை, இல்லாத ஒரு பழைய பொற்காலத்தை, இயற்கையை நாட முயல்கிறான் என தோன்றுகிறது ,

ஆனால் அந்த பழையதும்  இயற்கையும் நமது நுகர்வு மனப்பான்மையும் ஒன்றுக்கொன்று முரணான இடத்தில் அமைகிறது , குறைந்ததே நல்லது என்கிறது பழையது ஆனால் தொழில் நுட்ப சூழலில் நுகர்வே நாட்டுக்கு நல்லது. நுகர்வும் துறவும் எந்த ஒரு சிந்திக்கும் நவீன மனிதனை அலைக்கழிக்கும் இரு முக்கியமான  விசைகள், பல்வேறு இயங்குவிதிகளின், கற்பனையின், யதார்த்தத்தின், ஸ்தூலம் இல்லாத வரலாற்றின், மாறிக்கொண்டே இருக்கும் தொழில்நுட்பங்களின் ஒரு கோட்டு சித்திரமாக அமைந்ததுள்ளது இந்த நாவல். இரும்பை விஞ்சுமா செயற்கை நுண்ணறிவு? காலம் தான் விடை அளிக்கும்.