Thursday, December 29, 2022

மண் பொம்மை

குமாஸ்தா

ஆதியிலிருந்து, இருந்து வரும் இவ்வுலகத்தை ஒட்டுமொத்தமாக நினைத்துப் பார்க்கையில் பஞ்ச பூத  இயற்கை சக்திகள் தவிர அனைத்து விஷயங்களும் தோன்றி, சில காலம் நீடித்து, மறைந்து கொண்டே இருப்பதை நாம் ஓரளவு உணர்ந்தே இருக்கிறோம். இருப்பினும் இருக்கும் வரை நான் எனது என்று சொந்தம் கொண்டாட அனுபவிக்க அச்சம் காரணமாகவோ தேவை காரணமாகவோ வித விதமான விஷயங்களை நாம் உண்டாக்கி வைத்துள்ளோம். அச்சத்திற்கும் தேவைக்குமான அல்லாட்டத்தை நாம் குமாஸ்தாவின்  குழப்பத்தோடு அணுகுகிறோம். நம் குமாஸ்தா முஸ்தீப்புகள், பூமி தொடங்கிய நாள் முதல் நம் வாழ்வோடு பிணைந்துள்ள மண்ணின் தொடர்பை வலுவிழக்க செய்கின்றன.  மண் பொம்மைகளான நம்மை பொன் பொம்மைகள் என உணர செய்கின்றன. குமாஸ்தாவின் கூட்டலும் கழித்தலும் பிரித்தலும் வகுத்தலும் என்பதான சிடுக்கான கணக்குகள் எளிய தர்ம உண்மைகளிடம் இருந்து  நம்மை வெகு தூரம் அழைத்துச் சென்று விடுகின்றன. முதல் மகன் பர்ஜு பதான் தனது தந்தை விட்டுச் சென்ற தர்மத்தின் வலிமையை உணர்ந்து, முதல் படியாக, குமாஸ்தா  உணர்வை துறக்கிறான்.



நுகர்வோன்

இரண்டாவது மகன் சக்டி, அனுபவிக்க பிறந்தவன். தான் அனுபவிக்கும் அனைத்திலும் மிதமான திருப்தியும் அநேக நேரங்களில் தீர்ந்து விடும் என்கிற  அச்சம் காரணமாக இன்னும் இன்னும் என்று கோரும் மனிதன்.வணிகர்களின் எடுப்பார் கைப்பிள்ளை.அகந்தையின் நான் என்னும் உணர்வின் வடிகால் வடிவம் அனைத்தும் அறிந்ததான ஒரு இறுமாப்பும் ஏமாந்து விட போகிறோம் என்கிற அச்சமும் கொண்ட நுகர்வோன் சக்டி.

மாமனிதன்

தந்தை சொல்லி உணர்த்திய தர்மம், தாய் காட்டிய கருணை, இவ்விரண்டும் எப்போதும் இப்பூமியில் இருந்து கொண்டே இருக்கும் விஷயங்கள். எனது உனது என்று பிரிக்க முடியாத இந்த தர்மத்தை  உணர்ந்தவன் பர்ஜு. தன் மௌனத்தின் வழி, அமைதியின் வழி தனது வைராக்க்கியத்தை கூர் தீட்டிக் கொள்கிறான். தன் பொருட்டோ பிறர் பொருட்டோ என்றில்லாது என்றும் உள்ள பிரிக்க முடியாத தர்மத்தின் பொருட்டு அவன் வைராக்கியம் மிளிர்கிறது. அவ்வொளியில் அவர்களையும் அறியாது பர்ஜுவின் மனைவியும் ஊர் மக்களும் திடமான மனமாற்றம் அடைகின்றனர். சற்று தாமதமாக நுகர்வோனும் வந்து சேருகிறான். தீமையை விட்டு சற்றே விலகி நின்று தீமை என்னும் மாயை மறையும் என்ற வைராக்கியத்தோடு வலம் வருகிறான் பர்ஜு.மின்னும் மண் பொம்மை பர்ஜு.


காளிந்தீசரண் பாணிக்ராஹி எழுதி 1934 ல் வெளிவந்த ஒரிய மொழி நாவல். ரா வீழிநாதன் இந்தியில் இருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்திருக்கிறார்.சாகித்திய அகாதெமி வெளியீடு. 1966 ல் மிருணாள் சென் இயக்கத்தில் படமாக வெளிவந்துள்ளது.

Saturday, December 03, 2022

Agent Kannayiram - A Subaltern Rhythm

Two Interviews

Towards end of the Movie we have two interviews that intrigue us. First Interview by the Doctor which turns out to be very articulate and cold followed by Interview of Mayavi which turns out to be Jubilant, mumbling and inarticulate. Contrast between these interviews is distinct. This contrast sets the paradigm to further understand the movie. In guise of a mystery solving detective , We have an Enterprising Kannayiram searching for his identity and Freedom. Movie is no longer a simple Murder Mystery but a layered movie on the subaltern. 

Gun 

After the two interviews,  Natural focus shifts to Kannayiram who seem to hand back the Gun given to him by his Father.  Father at last acknowledges him as his son. Kannayiram seem not interested in establishing a grand story on his quest for Freedom and his sense of achievement , After nailing the wrong, he seem really free and content absolutely devoid of any need to set the narrative, Gun which is of partial use to him until then is no longer needed - with the Gun he hands over the need to being supremacist, need for being dominant. 




Freedom 

What really is freedom ? Freedom from Birth ? Freedom from Circumstances ? Freedom from Religion? or shall we rephrase and ask- Will Birth guarantee freedom ? Will Religion Guarantee freedom ? Will our actions get us there ? Search continues until we handover our Hidden Prides back to centuries where it belongs and really be free and be in now. 

A Subaltern Milieu 

Movies gives us the full play view of the subaltern, Starting with their Innocence & Naivety We get a view of how affectionate they are. Continuing we see the Lumpenness in their attitude which transform sometimes to being brazen and uncouth providing a full play view. Movie's view of the subaltern people  is without any element of Judgement and anxiety - Mayavi( Pugazh) , Kingsley and Munishkanth play a perfect foil to bolster this subaltern narrative of the film. Kingsley and Munishkanth appear naïve and brazen against unintelligent Pugazh - Infact Munish's character can be seen as role played by Cinema actors in shaping subaltern politics. Maran and Dileepan who are involved in cracking this mystery succumb while taking the system head on, their names should ring a bell in terms of subaltern political view of Tamilnadu. 

Narrative 

Movie being a murder mystery is a medley of  disparate smaller events calling for an Intellect to join and set the motives & narratives behind the murders. In other words without the intellect or common narrative  , these events will remain disparate without any connection. This applies to Subaltern context as well, Set in Kongu region, Kannayiram in his quest for freedom and Identity binds the otherwise disparate events into a Narrative of horror, In this process he sets himself free from everything , even free from his own brethren. His Critical view of the subaltern throughout the movie is evident and unapologetic . With superb editing movie's bits and pieces keep coming together, We have plethora of images subtly nudging us to see the subaltern subtext. Music takes up the mantle to expound on the Individual's search for Identity and Freedom which resonate well with any discerning Individual who really wants to be free and reasonable.   

Saturday, October 01, 2022

Naane Varuven

Fantastic Film, Extraordinary performance from Dhanush to a chilling portending musical score. Splendid camera work and imagery.  Don't miss to watch in theatres. #NaaneVaruven


Story of three fathers, One Father begetting two others to set up the everlasting clash between the good and the evil. Story of three helpless mothers held at the mercy of fathers dance and whims either through brute force or by subtle pressure. Story of a male ego, 'naane' which arrives in time all the time to move the wheel further. Story of mankind from hunting gathering to deskjob eking out a living, Kathir like prabhu leaves home to  carry out hunting as if it's a Office job. Story of how we moved from Feudal Slaving Outdoors to Modern Surveillancing Seclusion. Story of Killing of fathers generation after generation to tame the animal in Man. Story of twin instincts, both delicately close to each other, one coercing to take out other lives while other instinct is ready to Offer its life for others. Story of how long it took for a war mongering Hero turns himself into a puny confused modern considerate logical man. Story of man turning into woman leading the actual women into a unknown vacuum.Story of how we have chosen to remain in secluded individual rooms against open green forests over a period of time ? 

What do one do against pure evil ? Where does the roots of evil lie ? Can we abandon evil so that it is gone ? Will evil perish by itself if we abandon ? Can we use force to remove the evil ? By Anhilating Evil did Good get a taste of what it is like being evil ? 

Thursday, September 01, 2022

நட்சத்திரம் நகர்கிறது

 Expected a Novel, turned out to be a good newspaper at best, Can you be fiercely individualistic but preach on universal love ? If you hang on to the past can you love freely in the present ? Can you stay a knowledge  supremacist but still write lectures on how to Love ? Can you utter words above words on Love, making it pale , a poor memory of our referential verbalised past and Wonder at love ?   Ranjith tries to swim in ocean and a well at the same time . He could not breach on screen, the fortresses he himself has created in the process of making this movie about love.


Is not love entirely thing of the present where time and experiencer cease to exist ? Is there an other in Love ?  Ranjith s constant glare on the other or his inclination to express himself as a reaction to the other creates two sets of people,one set of converts who apologise being on the wrong till that point and embrace and join hands ,two set of non converts who play as  the constant convenient villain, as idealised by any liberal, in Creating  disturbances throughout. This indulgence to glare at, as the other, minimises the possibility of Communion and flowering of love. Love in brief moments appear in the film keeps us floating only to be pulled down by Individual Self Assertion,Chained Past, Knowledge Supremacy and Empty Verbalization.

#natchathiramnagargirathu


ஒரு நாவலை எதிர்பார்த்து சென்றவனுக்கு நல்ல நாளிதழ் வாசிக்கக் கிடைத்தது போல். தீவிர தன்முனைப்புடன் இருக்கையில் தீவிர காதலில் இருக்க முடியுமா ? பழையதை விடாது பிடித்துக் கொண்டே இருக்கும் ஒருவர் காதல் தருணங்களில் தன்னை மறக்க இயலுமா ? புத்தக அறிவை அறிந்தவை குறித்த பெருமிதம் தொனிக்கும் ஒருவன் "நான்" கரையும் காதல் பாடங்கள் எடுக்க இயலுமா ? வார்த்தைகள் மீது வார்த்தைகள் அடுக்கி காதலை மிகவும் பழைய நலிந்த வார்த்தைகளால் விவரித்து சொல்பவன் காதலின் மௌன அற்புதத்தை உணர்ந்திருப்பானா ?

கிணற்றிலும் சமுத்திரத்திலும் ஒரே நேரத்தில் நீந்துவது போன்ற பாவனை எடுபடுமா ?  காதல் குறித்த இந்தப்  படம் வளர்கையில்,  உண்டாகிய கோட்டைகள் தகர்க்கப் படவில்லை. காதல் இக்கோட்டைகளின் சிறையில் இருந்து மீளவில்லை. 

காதல் ஒரு தனிப்பெரும் கருணை, காலமும்  அனுபவிப்பனும் கரைந்து இல்லாது ஆகும் அற்புதம் காதல். காதலில் இன்னொருவர் என்று ஒருவர் இருக்க முடியுமா ? ரஞ்சித் இன் பெரும்பாலான படங்களில்  "இன்னொருவர்" என்பவர் குறித்தே பெரும்பாலான உரையாடல் கட்டமைக்க படுகிறது. இந்த இன்னொருவரில் இரு பிரிவினர், ஒன்று தவறுகளுக்கு வருந்தி மன்னிப்புக்கு மன்றாடும் பிரிவினர், இரண்டு, தவறு எதுவும் நிகழவில்லை எப்போதும் போல் இனியும் தொடரும் என்ற பிரிவினர், இரண்டாமவர் லிபேரல்களின் "கனவு வில்லன்". படத்தின் பெரும்பாலான உரையாடல் இவ்விரு பிரிவினரை குறித்தே அமைந்து விடுவதால், நேர்மறையான காதல் குறித்து உரையாட மிகவும் குறைவான நேரமே அமைகிறது. காதல் குறித்த அற்புதமான தருணங்கள் ஆங்காங்கே இருந்தாலும் , தீவிர தன்முனைப்பு, பழையவற்றுடன் நம்மை பிணைக்கும் இறுக்கமான சங்கிலிகள், நம் புத்தக சிற்றறிவு குறித்த காலிப் பெருமிதம், இவையோடு நம் சோகையான தேய்வழக்குகளில்  வார்த்தைகளில் காதலை விளக்க முற்படுகையில், காதல் முழுமையாக மலர்வதில்லை. காதலில் இன்னொருவர் இல்லை, காதல் மட்டுமே உள்ளது. 

#நட்சத்திரம்நகர்கிறது

#natchathiramnagargirathu

Monday, August 15, 2022

ஸெர்யோஷா - வேரா பானோவா

இரு கண்கள் - அன்பின் கனிவின் பாதையை காட்டும் ஒரு கண் , குழந்தைமையின் உற்சாகத்தின் பாதையை காட்டும் இன்னொரு கண்.



சிறு வயதில் நாம் அத்தனை உற்சாகமாக இருந்திருக்கிறோம் அத்தனை ஆற்றலுடன், எந்த ஒரு வேலையையும் ,அத்தனையையும் செய்து முடிக்க முடியும், உலகின் எந்த மூலைக்கும் நம்மால் செல்ல முடியும் என்று எண்ணியிருக்கிறோம்.அத்தனை உற்சாகமாக களங்கமில்லாத ஆற்றலுடன் நாம் இருந்திருக்கிறோம்..  மாலுமிகளின் கதைகளில் உற்சாகத்தையும் வழிப்போக்கர்களின் கதைகளில்  கனிவையும் நாம் கற்றோம். விடாது ஊற்றெடுக்கும் நம் கேள்விகளுக்கு மிகுந்த கனிவுடன் பெரியவர்கள் பதிலளித்துக் கொண்டே இருக்கையில் நாமும் பெரியவர்கள் ஆகி விட்டோம். மிகுந்த பொறுப்புடன் கனிவுடன் நாம் வேலைகளை கவனிக்க துவங்கி விட்டோம்.சில நேரங்களில் தகவல்களும் பல நேரங்களில் அலுவல்களும் நம்மை குழப்பினாலும்  நாமும் நம்மை விட சிறியவர்களின் கேள்விக்கு மிகுந்த கனிவுடன் பதிலளிக்க துவங்கி விட்டோம். ஒரு கண்ணின் உற்சாக சிமிட்டல்களை நாம் மறக்கவில்லை.. மறு கண்ணில் கனிவுடன் நாம் அனைவரையும் அரவணைத்து செல்கிறோம். இரு கண்களின் வழி த்துணை கொண்டு நாம் வாழ்வதே நல்லது என்று இந்தப் புத்தகத்தில் இருந்து தெரிகிறது. 

நல்ல வரி ஒன்றும் இப்புத்தகத்தில் இருந்தது -" அன்பிற்கு உகந்த எதுவும் சுமையாக இருக்க முடியாது" 

---

தமிழில் பூ.சோமசுந்தரம்

நூல்வனம் வெளியீடு


Wednesday, July 13, 2022

குரு - பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்

குரு - பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்

ஹெச். எஸ். சிவபிரகாஷ்

தமிழில் ஆனந்த் ஸ்ரீனிவாசன்


-------------




குருவின் பாதம் பணிவோம் 

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஓம் நமச்சிவாய 

உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே

கவனி உள்ளிழு ஆற்றுப்படுத்து வெளியேற்று 

மனம் எனும் குரங்கு 

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்...கடமையை செய், பலனை எதிர்பாராதே..செய்யும் தொழிலே தெய்வம்..

கலை - மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தம்


"எல்லோருக்கும் புரிகிறது

ஒற்றைத் துளி கடலுடன் ஒன்றுகலப்பது

இலட்சத்தில் ஒருவருக்கே புரிகிறது

கடல் ஒற்றைத் துளியுடன் ஒன்று கலப்பது "

Saturday, July 02, 2022

பூமியெங்கும் பூரணியின் நிழல் - குமாரநந்தன்

பூமியெங்கும் பூரணியின் நிழல் சிறுகதை தொகுப்பு வாசித்தேன்.கதைகளை வாசிக்கையில் தோன்றிய சில...


நாம்  காணவியலாத, புறத்தை விட பன் மடங்கு பல்கி பெருகிக் கொண்டே இருக்கும் அக உலகின் அநேக பரிமாணங்களை உணர்த்தியபடியே செல்லும் கதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. 

அகம் சுட்டும் விஷயம் அல்லது அகத்தில் தெரிவது அல்லது நம் அகம் தான் என்ன ? , நடந்த நிகழ்வின் நினைவுப் பதிவா ? நடக்காத நம் பகற்கனவா ? ஊருக்கு நாம் கட்டிய வேஷத்தின் மனக் குமுறலா ? நம் வக்கிர ஆசைகளுக்கு ஒரு எளிய வடிகாலா ? நம் குரங்கு மனதின் திடீர் ஆசையா ? குற்றஉணர்வு ஒய்யாரமாக நடை பயிலும் ராஜபாட்டையா ?   சுகமும் துக்கமும் ஒன்றை ஒன்று விரட்டியபடி செல்லும் மேகக் கூட்டமா ? எல்லையில்லா விஷயத்தை வார்த்தையில் சொல்ல முயலும் வலைப்பின்ன உளறலா  ?  நாம் காண்கையில் ஒடிக்கொண்டே நின்று கொண்டிருக்கும் பிரவாக கானலா ? நிரம்பிக்கொண்டே இருக்கும் ஓட்டைப் பாத்திரமா நம் அகம் ? 

கதைகள் உலகில் எளிதில் நுழைய முடிகிறது. எண்ணம் விடு சொல், சொல் விடு செயல், செயல் விடு எண்ணம் என தொடர்புள்ளது போலவும் தொடர்பிலாதது போலவும் போக்கு காட்டும் நம் எண்ணங்களை கதைகள் ஆக்கி இருக்கிறீர்கள். எண்ணத்தை விரட்ட சொல், சொல்லை விரட்ட செயல், செயல் வினை பிரவாகம் நிறுத்த இயலாத பல மடங்கு எண்ணங்களை பல மடங்கு  சொற்களை கொண்டு சேர்க்க, செயல் தடுமாற்றம். 

நதி, மழையை இயக்குபவன், சபிக்கப்பட்ட நிலம் கதைகள் மிகவும் பிடித்திருந்தன. குறிப்பாக மழையை இயக்குபவன் கதை நின்ற இடத்திலேயே மாறிக்கொண்டே இருக்கும் காட்சிகள் எண்ணங்கள் முடிவுகள் என தொகுப்பின் அனைத்து கதைகளின் மென் எதிரொலி போல அமைந்திருந்தது. 

இத்தனை உலகங்கள் கொண்ட ஒரு மனிதன் ஒற்றை உண்மையை தேடுவது இயல்பே ஒரு வேளை ஓட்ட நிறுத்த முயற்சியோ ? 

ஒரு நபர் ஏதோவொரு விஷயம் காரணமாக பிடிக்காத நபர் ஆகி விடுகிறார். அதன் பிறகு அந்த விஷயத்தை வேறெங்கேயும்  வேறு யாரோ வெளிப்படுத்தினாலும் அவ்விஷயம்  நமக்கு முதல் நபரின் சாயலிலேயே காட்சி அளிக்கிறது. 

பிடிக்காத நபர் செய்தவை பாதி, அவர் செய்ததை எண்ணி எண்ணி துன்புறும் இன்பத்தில் அவர் செய்யாததையும் நாம் துல்லியமாக காட்சிப்படுத்தி அல்லது செவிமடுத்து நம் அகத்தை கோபத்தால் நிறைப்போம். அந்நேரத்தில் அந்த பிடிக்காத நபர் நமக்கு தற்சமயம் நல்லதே செய்துக் கொண்டிருந்தாலும் நாம் காட்சிப்படுத்திய அல்லது செவிமடுத்த கற்பனை அத்தனை துல்லியமாக இருக்கும் காரணத்தால், நம் கோபம் பன் மடங்கு அதிகரிக்கும். மனதின் விந்தைகளில் இதுவும் ஒன்று.

Friday, June 24, 2022

சித்தன் சரிதம் - சாந்தன்

யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு அரை நூற்றாண்டு கால வாழ்க்கையை மிகுந்த நிதானத்தோடு சொல்லிச் செல்லும் நாவல் 'சித்தன் சரிதம்'. கதை நாயகன் சித்தனின் வாழ்வின் தேர்ந்த நிகழ்வுகளை பதிவு செய்த வண்ணம்  நாவல் வளர்கிறது. குறிப்பிட்ட இலக்கையோ முடிச்சையோ மையப்படுத்தாது சித்தனின் பால்யம் தொடங்கி முதுமை வரை அவர் வாழ்வின் சுவையான கனமான நிகழ்வுகளை அவனது குடும்பத்தை, சுற்றத்தை, நண்பர்களை குறித்து பேசி செல்கிறது இந்த நாவல்.


சினிமா பாடல்கள்,  நவீன சாதனங்களின் வருகை  நகரமயமாதல், தமிழ் சிங்கள பிரிவினைகள், தமிழ் சாதி பிரிவினைகள், ஈழப்போர் என எளிய கலாச்சார விஷயங்களில் தொடங்கி தீவிரமான சூழலில் நிறைகிறது சித்தன் சரிதம்

நாவலின் மிகப்பெரிய பலம் ஈழத்தமிழ் வழக்கும் நடையும் ,  அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைந்துள்ள புறக்காட்சிகளின் விவரிப்பும். கிட்டத்தட்ட பெரிய இலக்கு இல்லாத திசை இல்லாத  சுயசரிதத்தன்மை உடைய இந்த நாவலின் கலையம்சம் கூடி வந்தமைக்கு காரணம் மேற்கூறிய இவ்விரண்டு விஷயங்களே. 

நிகழ்வுகளை உயிர்ப்புடன் பதிவு செய்யவே நாவல் முயல்கிறது, மேலதிகமாக போர் சூழல் குறித்தோ சரிதவறு சார்பு நிலை விவாதங்களுக்குள் நாவல் செல்ல மறுக்கிறது. ஈழப்போர் ,சித்தனுக்கும் அவரை போன்றவர்களுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஒரு தொடர் நிகழ்வாக அவர்கள் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அம்சமாகி விடுகிறது. போர் குறித்த தர்க்கங்களுக்குள் புகமால் போரின் தாக்கத்தை சமாளிக்க ஒவ்வொரு குடும்பமும் மேற்கொள்ளும் பிரயத்தனத்தை  யதார்த்த எல்லையிலேயே நாவல் விசாரிக்க முயல்கிறது. போரின் காரண காரியங்கள் நாவல் கதை மாந்தர் தம் உணர்வு உலகிற்கு அப்பால் எங்கோ யாரோ முடிவு செய்ய, ஒவ்வொரு குடும்பமும் தன்னால் ஆனதை செய்து தினப்படி வாழ்வை எதிர் கொள்கிறன. நாவலில் மூன்றாம் பகுதி மிகுந்த கலை அமைதியுடன் அமைந்திருக்கிறது. இயற்கையை எதிர்காலத்தை நம்பியே இக்குடும்பங்கள் தங்கள் பயணங்களை தொடர்கின்றன.

முழு நிலவில் இரவில் பட்டத்தை சித்தன் காண்பதும், தென்மராச்சியில் சட்டென திரும்பிய கூட்டு வாழ்க்கை முறையை சித்தன் உணர்வதும், சோழகம் குறித்த துவக்க குறிப்பும், சோழகம் குறித்த நாவலின் நிறைவு வரியாக அம்மா கூறுவதும், கண்ணை விலக்காது சித்தன் நிலவில் முழுகிய நிலப்பரப்பை காணும் இடங்களும் என்றும் நினைவில் இருக்கும். நிலவும் பாடல்களும் புத்தகங்களும் உடலுழைப்பும் போதுமே வேறென்ன வேண்டும். 


Saturday, June 11, 2022

777 Charlie



தனிமை. எதேச்சையின் கைகளோ நீங்களாகவோ ஏற்படுத்திய தனிமை. மூர்க்கத்தை கவசமாய் கொண்டு அர்த்தமில்லாத தனிமை மலையின் விளிம்பில் நிற்கும் நீங்கள். 

நீங்கள் மீண்டும் எதேச்சையாக தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள். இம்முறை அந்தக் கரம் உங்களை விளக்க முடியாத பெரிய விஷயம் ஒன்றோடு பிணைக்கிறது. புதிய பிணைப்பை ஏற்க முடியாத நீங்கள் கைகளை  உதறி ஓட முயல்கிறீர்கள்.

வெளியே தெரியாமல் சிறிதாக ஒளித்து வைத்து மறைத்து விடலாம் என்று நீங்கள் நினைக்கும் அந்த விஷயம் பெரிதாகி உங்களை சூழத் தொடங்குகிறது.குழந்தை ஒன்று  உங்களுக்கு அளிக்கும் வண்ண சித்திரம் வழி அந்த பெரிய விஷயத்துக்கு உங்களை ஒப்பு கொடுக்கிறீர்கள். ஒப்பு கொண்ட விஷயத்தின் தீவிரம்  கூடுகையில் தான் தெரிய வருகிறது உங்களுக்கான காலமும் நேரமும் மிகக் குறைவு என்று.

தனிமை அர்த்தம் பெறத் துவங்குகிறது. நீங்களும் அந்தப் பெரிய விஷயமும் ஒருவரோடு ஒருவர் பிரிக்க முடியாத ஒரு பயணத்தைத் தொடங்குகிறீர்கள் - பயணம் உங்களுக்கானதா அல்லது அந்தப் பெரிய விஷயத்தின் பொருட்டா என்று புலப்படாத வண்ணம் ஒன்றை ஒன்று இட்டு சென்றபடியே, உங்களால் செய்யக்கூடிய விஷயங்களின் எல்லை விரிவடைந்து கொண்டே வருகிறது. உலகத்தார் போற்றியும் தூற்றியும் உங்கள் பயணம் இறுதி கட்டத்தை எட்டுகிறது.

இறுதிக் கட்டத்தில் உங்கள் உடைமைகளை இழக்கத் தொடங்குகிறீர்கள். மற்றவர்களால் உங்களுக்கு உதவ முடியாது. தனிமை பனிப்பாலையில் நீங்களும் அந்தப் பெரிய விஷயமும் ஒருவரை ஒருவர் தொடர்ந்தபடி, யாருக்கு யார் வழி காட்டுகிறார் என்று தெரியாத வண்ணம் பயணம் நீள்கையில் ஒரு கனவு,ஒரு நனவு. 

கனவில் நீங்கள் பெரிய விஷயத்தை எட்டியதாக  இலக்கை எட்டியதாக எண்ணி மகிழ்கிறீர்கள். 

நனவில் பெரிய விஷயம் உங்களை வேறொரு இடத்திற்கு இட்டு செல்கிறது.. அது ஒரு வீடாகவும் கோவிலாகவும் இருக்கிறது. அங்கே நீங்கள் ஏறக்குறைய இறைவன் இருக்கும் இடத்தில், இன்னொரு பெரிய விஷயத்தை கண்டடைகிறீர்கள்.  ஆதி கருமையை, ஆதி இருட்டை விலக்கும் முதல் அசைவை நினைவூட்டும் அந்த விஷயம். உங்கள் வினை தொடர்கிறது. அவ்வினையின் எளிய சித்திரம் சிறு குழந்தையின் கைகளில் தொடங்கியதை நீங்கள் நினைவு கூர்கிறீர்கள். நல்வினை ஏறக்குறைய இறைவன். அவர்  உங்கள் கைகளில் சிறு கருமைப் பந்தாக புரண்டு படுக்கிறார்..வினை தொடர்கிறது.

Monday, May 30, 2022

கடலோரக் குருவிகள்- பாலகுமாரன்

கடலோரக் குருவிகள்- பாலகுமாரன் அவர்கள் எழுதி 1995ல் வெளி வந்துள்ள நாவல் - ஒரே நாளில் வாசித்து விடலாம். விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, சிறுவாணி வாசகர் மையம் மீண்டும் வெளியிட்டுள்ளது. 


நாவலில் பாலகுமாரன் முத்திரை புலப்படும் கீழ்கண்ட இடங்களை ரசித்து மனம் ஒன்றி வாசித்தேன்

முதல் முறை மாதவன் தன் சட்டைப்பையில் நானூறு ரூபாய் வந்தவுடன் மகிழும் தருணங்கள்,

தன்னிச்சையான சுதந்திரமான செயல்பாட்டின் விளைவாக தவிர்க்க முடியாது அமைந்து விட்ட தனிமையின்  உணர்வை ,"உனக்கு நீ மட்டும் தான் என்று "கிணற்றடியில் அழுகையில் மாதவன் உணரும் போது.மாதவனின் தந்தை மகனிடம் கேட்கும் இரு கேள்விகள். 

"மனதையே உற்றுப் பார்" என்ற தந்தையின் உபதேசத்தின் பின்னணியில்,  பயணம் தொடங்குகையில்,ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் மனதின் குரங்காட்ட வரிகளை வாசிக்கையில்,

பெரிய வீட்டில் இரண்டாம் நுழைகையில் துள்ளி வரும் இரு டாபர்மேன் நாய்கள் குறித்த சம்பவம்.

மீனாட்சி தகப்பனார் குமாஸ்தா வேலை குறித்து பிரஸ்தாபிக்கும் இடங்கள்,தேவர் மாதவன் சம்பாஷணை வரும் சிறிய அபாரமான அத்தியாயம், 

மாதவன் தந்தையின் கீதோபதேசம்- கடவுள் பக்தி- கர்வம் தவிர்- எல்லோரும் ஒன்று - எல்லாரும் கர்ப்பிணி-  மரணம்- இடையறாத அன்பு - கடலோரக் குருவிகள் என்ற உருவகக் கதை.

மனதுடனோ எதிரில் இருப்பவருடனோ கேள்வி,பதில் சம்பாஷனைகள் என நகரும் நாவல். 

சமூகம் விதித்துள்ள எல்லைக்கோடுகளை மீறத் துடிப்பவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கும் கேள்விகளுக்கு,  பழையதின் மண்ணில் ஊன்றி விட்ட  பெருமரத்தின் அடியில் அமர்ந்தபடி, எல்லைகளைத் தாண்டாத  சிலர்,  பதில் அளித்த வண்ணம் உள்ளனர்.

Saturday, May 28, 2022

When We Cease to Understand the World – Benjamin Labatut

When We Cease to Understand the World – Benjamin Labatut

Spanish Book translated to English, Five Chapters on the whole – Started as fact lister detailing facts,  anecdotes  and happenings entwining each other – one leading to another – braced with the risk of creating  fatigue of astonishing  and unbelievable facts, book took a spectacular turn towards imaginative literary flourish. Later part of the book reimagines breath-taking encounters of Great minds of Twentieth century with Truth or revelation and in this conscious turn lies the literary value of the book.




Prussian Blue – Starting as a thread trailing Cyanide s invention and its varied encounters with Humanity across centuries this chapter rests its weight on Germany during World wars. A Nation with swelling pride produced many a fierce individuals – this chapter devotes its time on Haber & Hitler. Haber- Founder of Nitrogen helped in leapfrogging  fertiliser production thereby saving millions from hunger also designed gas attacks during  World War 1  which killed many soldiers in cruel fashion. Haber also helped in his endeavour to produce more Fumigants and pesticides to protect fields and granaries invented  Zyklon D, gas that killed the Jewish prisoners. Haber s guilt surprisingly is not Zyklon but Nitrogen as he felt guilty of disturbing the equilibrium of nature by producing Nitrogen in Large Quantities. Hitler - Fighting in trenches during world war 1 , a Shy man partially affected by gas attacks carried the lost wounded pride of Germany to write a manual which he would use later in his life to leapfrog to highest position of the country. Such is the pride that loss in World war 2 meant he can no longer live – an anecdote in the book tells us about a planned concert attended by German Elite arranged during final phases of war- impending enemy troops - to end their lives by popping Cyanide pills midst chamber music

From the macro narrative of the first chapter  book took a subtle turn towards individual  inquisitiveness s in Schwarzschild s Singularity – a account of life of Karl Schwarzschild , astronomer, Physicist and Mathematician – Chapter begins with Schwarzschild serving  as lieutenant in German Army sends his first exact solution of equations of general relativity to Einstein, Chapter goes on to list the unsatiable genius and inquisitiveness ending with how decades later Scientific community accepts Schwarzschild s Singularity in general terms called the Black Hole

Heart of the Heart – Opens with Latest finding on Living Mathematician Shinichi Mochizuki leads us into the eccentric and unbelievable life of Mathematician Alexander Grothendieck – Grothendieck in his initial part of his life as a master of abstraction was always looking for “Heart of the Heart”, concept located at the centre of Mathematical Universe. When he turned 40 and afterwards his life took a topsy turvy turns too real to be imagined – In this Chapter Literary gambit of the book subtly changes from Individual inquisitiveness to Grand Big Truth or Universal Understanding  of Scheme of Things – Grothendieck s foray into seclusion , his daily memoirs and his turn to commune Life calls for Further reading into Many other books about this Mathematical Genius and breath-taking personality.

“When We Cease to Understand the world” – Best Chapter of the book – Encounters of the great scientific minds becomes more personal- Imaginatively retold based on available anecdotes and Memoirs – In this chapter we leap into a question of can universe be definitely comprehended understood and modelled – We witness the Classic battle of Bohr vs Einstein ( Einstein quipped “God does not play Dice with Universe” ) in side-lines of two moving separate encounters of Heisenberg and Schrodinger with the Universe. Heisenberg in secluded island of North Germany wrote  an epiphany which turned out to be first paper on Quantum mechanics and his challenges to Schrodinger resulted in Further revelation in Streets of Copenhagen to arrive at his pinnacle work of “ Uncertainty Principle” – Schrodinger similarly had a revelatory experience in Sanatorium to complete his Wave Function. Reading these chapters we get a glimpse of Exciting Unsatiated Energetic lives they lived.

The Night Gardner – Provides glimpse of how seeds of this book is sown with few anecdotes and presents itself an open question have we ceased to understand the world ? How much wonder is left to be ascertained ? How much Uncertain is Our Lives ?

 

Pushkin Press , Translated by Adrian Nathan West

Monday, May 16, 2022

வெறுங்கால் நடை - சு வெங்குட்டுவன்

வெறுங்கால் நடை - சு வெங்குட்டுவன் 


13 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.  இவற்றில் பெரும்பாலான கதைகள் ஒரு `தினுசான மனிதர்கள்` குறித்த அக்கறையாய் அமைந்து வந்திருக்கிறது.  - அம்மனிதர்கள் முற்றிலும் வினோதமான  ஆட்கள் அல்ல, அதே நேரத்தில் மைய நீரோட்டத்தில் இருந்து சற்றே விலகிய  சூழலோ குணமோ மன அமைப்போ கொண்டவர்கள். அம்மனிதர்கள் குறித்த இந்தக் கதைகள், யதார்த்த நடையில், கதைச்  சூழலின் எல்லையில்லா  புறப்  பொருட்களின் விவரிப்பின் வழி,, கதை மாந்தரின் மன ஓட்டத்தை தெளிவாக படம் பிடித்தபடி, மிகுந்த நம்பகத்தன்மையோடு, சுவாரஸ்யமாக  அமைந்திருக்கின்றன. உரையாடல்களில் இடம் பெற்றுள்ள வட்டார வழக்கு  துருத்தி கொண்டு இல்லாமல் மிக அமைதியாக கதை உலகை நெருங்கச் செய்ய உதவுகிறது -  சூழலையும் கதையின் அனுமானத்தையும் யதார்த்த நடையில் அமைத்து, கதையின் மைய உரையாடல்களை வட்டார வழக்கில் அமைத்திருப்பதால் கதைகளில் மேலும் அமைதி கூடுகின்றன. தெளிவும் அமைதியும் சுவாரஸ்யமும்  அமைந்த இந்தக் கதைகளை  குறிப்பிடத்தக்க தளத்திற்கு நகர்த்துவது கதையின் வடிவத்தில் கூடி வந்த, கதைகளின் முத்தாய்ப்பாய் அமைந்த  " அந்தக் கடைசி வரிகளே ". பெரும்பாலான கதைகளின் அந்தக் "கடைசி வரிகள்" கதையின் மொத்த புதிர்த்தன்மையை கூட்டி,   கதையின் முடிச்சை மேலும் இறுக்கியோ அவிழ்த்தோ அல்லது முற்றிலும் புதிய தளத்தில் கதையை  திறக்கும் வகையினதாகவோ அமைந்திருக்கின்றன  . வெறும் வேடிக்கைக்காக எழுதப்பட்ட கடைசி வரிகள் அல்ல இவை - கதையின் ஒட்டு மொத்த வடிவத்திலும் ஸ்வாரஸ்யத்திலும் கூடிவந்த ஆசிரியனின் அறிவார்ந்த "பொடிச் சிரிப்பு" இந்தக் கடைசி வரிகள்.

ஜோதிட ஆலோசகரான ஆசிரியர் மரபின் மீதான தனது நம்பிக்கையையும்,  ஒட்டு மொத்த உலகியல் விஷயங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்த, பிணைந்த அம்சத்தின் ஆன்மீகத்தையும், கதைகளில் காட்ட முயற்சித்திருக்கிறார்.  உண்மைத் தேடல் இட்டு செல்லும் விகார இடங்களை " ஆபரேஷன் சிந்தாமணியும்" , பணத்தின் மதிப்பையும் பணத்தின் ஆசையையும் பிரிக்கத் தெரிந்த ஆன்மீகத்தை "வாஸ்தவம்" கதையும், ஆன்மீக நாட்டம் அளிக்கும் தனிமையின் பிறழ்வை "வெறுங்கால் நடை" கதையும்  மிக எளிமையாக உள்ள பெரிய ஆன்மீக உண்மைகள் குறித்த கதையாக "ஈஷோபதேசம்"  கதையும் அமைந்திருக்கின்றன. 

Ganesh Pyne அவர்களின் அசர வைக்கும் முகப்போவியம் மனதை என்னவோ செய்கிறது. "வெறுங்கால் நடை" சு வெங்குட்டுவன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு - மணல்வீடு வெளியீடு.

Saturday, May 07, 2022

நான் கண்ட மகாத்மா - தி சு அவினாசிலிங்கம்

நான் கண்ட மகாத்மா - தி சு அவினாசிலிங்கம் அவர்கள் எழுதிய காந்தி குறித்த நினைவுக்குறிப்புகள். காந்தி தலைமையில், லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வெழுச்சி பெற்றுத்தந்த இந்திய விடுதலைப் போராட்டத்தின் நேரடி ஆவணம்.  இந்திய சுதந்திர போராட்ட களத்தில் புயலென நுழைந்த காந்தி என்னும் காந்த மாய சக்தியை வார்த்தைகளில் விவரிக்க முயலும் முயற்சி. தண்டி யாத்திரை தொடங்கி ஜனவரி 30 வரை, காந்தி மேற்கொண்ட எண்ணற்ற போராட்டங்களின் அரசியல் வியுகங்களின்,கொள்கை நிலைப்பாட்டின் மீது உரிய வெளிச்சம் பாய்ச்சும் நூல். தற்சுட்டும் ஆன்மீகப் பாதையில் தனி மனிதனும் தேசமும் நடக்க, சுயராஜ்யம் உடன் பெண் விடுதலை, தாழ்த்தப்பட்டோர் நலன், கல்வி,கிராம பொருளாதாரம் என காந்தி இட்ட ராஜபாட்டை குறித்த குறிப்புகள் அமைந்த நூல், காந்தி என்ற மனிதரை நெருங்கி அறிந்த அவினாசிலிங்கம் அளிக்கும் தனிப்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்களும் அமைந்த நினைவோடை. 



பல்வேறு கோணங்களில் காந்தியை நெருங்கி அறிய இந்நூல் ஒரு நல்வாய்ப்பு.அழிசி பதிப்பகம் வெளியீடு.

Sunday, April 24, 2022

பீடி - தக்க்ஷிலா ஸ்வர்ணமாலி

பீடி - தக்க்ஷிலா ஸ்வர்ணமாலி - தமிழில் எம் ரிஷான் ஷெரிப்


கதை நாயகன் நயனாநந்த நாம் முன் பின் அறியாத நபர். இருப்பினும் மிக இயல்பாக நமக்கு அவனது கதையை கூறத் தொடங்குகிறான், தன் சொந்தக் கதையை துவங்கும் முன் விமர்சகர்களுக்கும் தீவிர வாசகர்களுக்கும் கதைக்குள் அணுகி வர  சிறியதொரு பீடிகை போடுகிறான். "அசர மாட்டோம்" - அந்தப்பக்க பதில். பீடிகை பின்னோடே தனது கதையை கோர்வையாக சொல்லத் தொடங்குகிறான் - இரண்டு அருமையான காதல் கதைகள், ஒரு காத்திரமான குடும்பக் கதை , நண்பன் குறித்த சிறிய கிளைக்கதை என கோர்த்து முழு கதையை கூறி முடிக்கிறான். பீட்சா டாப்பின் போல அரசியல் தத்துவம் உண்டு - அவை முக்கியமில்லை - செறிவான இரு காதல் கதைகளும் நல்லதொரு குடும்பம் உருவாகும் கதையும் தான் மனதைத் தொட்டது.

காதல் கதைகள் இரண்டிலுமே,  பெருக்கெடுத்து செல்லும் மௌனமும் இயற்கையுடன் இயைந்த உடல் உழைப்புமே காதல் மலர, தழைக்க போதுமானதாக  இருக்கின்றது. வேறெந்த சொல்லோ ஸ்தூலமான பொருளோ தேவைப் படாத பிரபஞ்சத்துள் காதலர்கள் சஞ்சரிக்கின்றனர். பரஸ்பரம் காதலை சொல்லக் கூட தேவை இல்லாது இயல்பாய் ஒரு நாள் பொழுது நிலவோ சூரியனோ எழுவது போல் அமைந்த காதல் கதைகள் இவை. அதிக பிரயத்தனம் இன்றி அமைந்த காதல்கள் குறித்த கதைகள் இவை, மௌனமும் அருகாமையும் அலங்காரம் செய்யும் காதல்கள் இவை. 

குடும்பக் கதையில் எனக்கு தெளிந்தவை - இரு வேறு குடும்பங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் கலந்து முற்றிலும் புதியதொரு குடும்பத்தை நிர்மாணிக்கிறது. இப்புதிய குடும்பம் மேற்சொன்ன காதல்களைப் போலவே மிகக்குறைந்த எதிர்பார்ப்பினை தன் அமைப்பில் கொண்டதாக தன்னை நிர்மாணித்துக் கொள்கிறது.  நெடுநேர மௌனமும் குறைந்த தேவைகளும் இயற்கை சார்ந்த  உடல் உழைப்பும் இக்குடும்பத்தை அலங்கரிக்கின்றன. 

எதிர்பார்பில்லாத காதல் எதிர்பார்பில்லாத குடும்பம் 

நடுவில் நாயகன் நயனாநந்தவிற்கு வேஷங்கள் கட்ட வரும் அழைப்பும் அவ்வேஷங்களின் வியர்த்தம் அவனுக்கு பிடிபடுவதும் சுவாரஸ்யமான  இடை அத்தியாயங்கள். 

நயனாநந்த, காதல் வழியும் குடும்பத்தின் வழியும் குறிப்பிடத்தக்க விடுதலை மனநிலைக்கு செல்கிறான். அவன் சென்று அடைந்திருக்கும் இடம் கவர்ச்சிகரமான ஒன்று, அவன் செய்ய வேலை எதுவும் பெரிதாக இல்லை, தேவையும் குறைவு, அன்பிற்கு பஞ்சமில்லை, தீயவற்றிடம் இருந்து அது சொந்த தாயே ஆயினும் மெல்ல விலக அவன் பழகி இருந்தான், யோசிக்க பல மணி நேரங்கள் அவனுக்கு இருந்தன.  வெளி செய்திகளை அவன் செவிமடுக்க நிறுத்தி கொஞ்சம் காலமாகியிருந்தது, அவன்  நண்பன் வஜ்ரவுடன் பேசியபடியும் காதலியின் அருகாமையிலும் காலத்தைக் கழித்தபடி இருந்து வந்தான். சில நாட்களில் அவன் ஒன்றுமே செய்வது இல்லை. 

எதிர்பார்பில்லாத காதல் எதிர்பார்பில்லாத குடும்பம் எதிர்பார்பில்லாத தனிமனிதன் 

இது சாத்தியமே இல்லாத விஷயம் என்று கூறுபவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை. நயனாநந்த சிறுவயதில் ஒருமுறை ஊர் மாறியதோடு சரி, சொந்த ஊரிலேயே தான் இருந்து வருகிறான். இது அவனை செயலின்மையின் மதுவிற்கு அடிமையாக்கி விட்டது எனக்கருத வாய்ப்புண்டு,

நயனாநந்த விற்கு சில கஷ்டங்கள் உண்டு ,ஆனால் அவன் சிறு வயதிலிருந்தே தீமையிடம்  நேரடியாக மோதாது தப்பிக்க தெரிந்தவன். மெல்ல கஷ்டங்களை செரிக்கத் தெரிந்தவன். தானாகவும் அவனாகவும் அமைத்ததே இம்மூன்றும்

எதிர்பார்பில்லாத காதல் எதிர்பார்பில்லாத குடும்பம் எதிர்பார்பில்லாத தனிமனிதன் 

நல்ல நாவல். சிங்களத்திலிருந்து தமிழுக்கு ரிஷான் ஷெரிப் நன்றாக மொழிபெயர்ப்பு  செய்துள்ளார். 

Saturday, April 23, 2022

மாஸ்டர் ஒரு சாதா டீ ! - வா.மு. கோமு

மாஸ்டர் ஒரு சாதா டீ ! - வா.மு.கோமு



நான்கைந்து பக்கங்கள் கொண்ட முப்பது கதைகளின் தொகுப்பு, வாசகசாலை வெளியிட்டுள்ளது. கதைகள் முப்பதையும் சாராம்ச படுத்திப் பார்க்கையில், நல்விழுமியங்களுக்கும் வாழ்க்கை அவ்விழுமியங்களை தழைக்க, விடுக்கும் சவால்களுக்கும் இடையேயான ஒரு போட்டியாக அமைந்துள்ளதை உணர முடிகிறது. பெரும்பாலும் நல்விழுமியம் வெற்றிப் பெற்று விடுகிறது, அல்லது இந்தக் கதைகள் அப்படி முடிகின்றன, சில கதைகளில் விழுமியம் சற்று பிழையான பழைய ஒன்றாக தோன்றுவதால் தூக்கி வீசப்படும்படி  யாகி விடுகிறது. இக்கட்டான சூழ்நிலையின் உடனடி முடிவுகள் அதிர்ச்சியாகவும் சிரிக்கும்படியாகவும் நியாயமானதாகவும் அமைந்திருக்கின்றன. சிரிப்பது நியாயமா என இலக்கிய வாசகன் கேட்கக் கூடும்,வேறு வழி இல்லை,அப்பட்டமாக எழுதப்படும் வாழ்க்கைக் குறிப்புகள் சிரிப்பை வர வைத்தால் யார் என்ன செய்ய முடியும், சிரிப்பை தாண்டி சம்பந்தபட்டவர்களின் துயரம், அடி, அலைச்சல் நம் கவனத்தில் இருப்பதாகவே கதைகள்  அமைந்துள்ளன, வெறும் சிரிப்பு மூட்ட மட்டும் இக்கதைகள் எழுதப்படவில்லை - கதைக்களனும் கதைமாந்தரும் பொருளாதாரத்தில் கிடை மட்டத்தில்  உள்ளவர்கள், விளையாட்டாக இக்கதைகள் தொடும் இடங்கள் கனமானானவை, கதை மாந்தரின் ஆசை, காதல், லட்சியம், சுதந்திரம், கிறுக்குத்தனம், அவசரம், தியாகம், பக்குவம், சாமர்த்தியம், பயம்,  கதைகளாகி இருக்கின்றன, ஆசிரியரே பின்னட்டையில் குறிப்பிடுவது போல எந்த யுக்திகளையும் பயன்படுத்தாத நேரடிக் கதைகள் இவை. 

Friday, April 15, 2022

வாசிகள் - நாராணோ ஜெயராமன்

 1970களில் அமையப்பெற்ற சிறுகதைகள் இவை. நகரத்தை தனதாக்கத் தொடங்கிய தனி மனிதனின் நினைவுத் தடங்கள் என இக்கதைகளை கூறலாம். ஏறத்தாழ இன்று முடிவாகி விட்ட 'நகரப்பண்புகள்' குறித்த குறிப்புகளாகவும் இக்கதைகள் மலர்ந்துள்ளன. புற சூழலையும் விழிப்பு நிலை மனவோட்டங்களைத் தொடர்ந்து செல்லும் இக்கதைகள் முடிவான எதையும் முன் வைப்பதில்லை,  சூழலை அப்படியே முன் வைப்பதில் பெரு முனைப்பு கொண்டுள்ள இக்கதைகள்  'ஆழ உழல' முயல்வதில்லை.



கதைகளில், இவ்வாறு நகர சூழலின் இறுக்கம், தனிமை தாளாது அனைத்தையும் நுண்மையாக கவனிக்கத் தொடங்கி, ஒரு ராட்சத கேன்வாஸை உருவாக்கி, அதன் முன் எந்த ஒரு முடிவுக்கும் வர இயலாத ஒரு மௌன பார்வையாளனாக, அந்நியனாக,  அனைத்தையும் விட்டு ஓடத் துவங்க தயாராக இருப்பவன் போல, அதே நேரத்தில் இருக்கும் இடத்தை  துளி கூட விட்டுக் கொடுக்காதவனாக, அனைத்தை குறித்தும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவனாக அதே நேரத்தில் ' அதனால் என்ன " என்னும் அலட்சிய போக்கை உடையவனாகவும்,  பொருள் வயின் லட்சியங்களை தியாகம் செய்பவனாகவும், கூட்டத்திலிருந்து வெளியேறிய தனி மனிதனாகவும் அவ்வாறு வெளியேறியதன் குற்றவுணர்வை சுமந்தவனாகவும், அனைத்து கண்களும் அவனையே நோக்குவதாக உணர்பவனும், சிறிய உதவிக்குக் கூட துணை இல்லாது இருப்பவனும்  இவ்வாறு ஒருவனே வெவ்வேறு சிறுகதைகளில் வரையறுக்க முடியாத வகையில் தோன்றி நகரத் தனி மனிதன் தடம் பதிக்கிறான். 

பகுப்பாய்வு, தானியங்குதல் (அடையாளமின்மை), வேக விழைவு, தக்க வைத்தல், லாப விழைவு , கண்காணிப்பு என்னும் அடிப்படைக் கூறுகள் இந்த தனி மனிதன் நகரத்தினோடு உறவாட தொடங்குகையில் தனிப்பட்ட அளவில் ஏற்பட்ட விஷயங்கள் -  இன்று இவை பெரும் முதலீடும் வாய்ப்பும் அளிக்கும் துறைகளாக நிறுவன அளவில் நிச்சயமின்மையை தவிர்க்க எதிர்கால நிச்சயத்தை உறுதி செய்ய இயங்கும் அடிப்படை விதிகளாக அமைந்திருப்பதை நாம் காண்கிறோம். இந்தச் சிறுகதைகள் மேற்சொன்ன விஷயங்களை புரிந்து கொள்ளும் வண்ணம் தனி மனித வாழ்க்கையின் எதிர்வினைகளாக அமைந்திருப்பதாக கருத வாய்ப்புள்ளது. 

கதைகள் வெளிப்படுத்தும் தலையாய பண்பாக நிச்சயமின்மை இருக்கிறது. நகர வாழ்வின் நிச்சயமின்மையை எதிர்கொள்ள நாம் கைகொள்ளும் திட்டமிடல், திட்டமிடலின் அயர்ச்சி, திட்டமிடல் இட்டு செல்லும் பகற்கனவுகள் , பகற்கனவுகள் அளிக்கும் மகிழ்ச்சிகள், அம்மகிழ்ச்சிகளின் நிச்சயமின்மை , அந்த நிச்சயமின்மை முன் பழக தொடங்குகையில் ஏற்படும் பரிச்சயம் அல்லது நிச்சயமின்மையின் சாஸ்வதத்தை உணர்ந்து Indifferent ஆக செயல்படும் ஒரு போக்கு என்று இணைத்து வாசித்து புரிந்துக் கொள்ள இக்கதைகள் ஒரு வாய்ப்பு. 

இக்கதைகளோடு கிட்டத்தட்ட பொருத்தப்பாடு உள்ள அசோகமித்திரன் அவர்களின் காலமும் ஐந்து குழந்தைகளும் சிறுகதையை வாசிக்கும் போது ஏற்படும் தீவிரத்தன்மையும் மன விகாசமும் நாரணோ ஜெயராமனின் கதைகளை வாசிக்கையில் ஏற்படுவது இல்லை - 'வாசிகள்' தொகுப்பு தொடும் தளங்கள் கிட்டத்தட்ட ஒரு மௌனமான முழுமையான ஒப்புக்கொடுத்தல் அமியின் கதையில் இருப்பது ஒப்பு கொடுக்க மறுக்கும் சீற்றமான தருணங்கள்- ஒளி பொருந்திய தருணங்கள். 

Tuesday, April 05, 2022

மாயவரம் - சந்தியா நடராஜன்

மாயவரத்தில் பிறந்த, வாழ்ந்த ஆளுமைகள் குறித்த கட்டுரைகள், நினைவுப் பதிவுகள் கொண்ட தொகுப்பு - சந்தியா நடராஜன் எழுதியுள்ளார். 


கட்டுரைகளை வாசிக்கையில் தோன்றிய விஷயங்கள் குறித்து, 


ஒரு ஊருக்கு எது பெருமை சேர்க்கிறது ? இன்று பெருமையாக சாதனையாக பார்க்கப்படும் விஷயங்கள் துவங்கிய விதம், அதற்கான தனி மனித முயற்சிகளை, தியாகங்களை நாம் இன்று எவ்வாறு புரிந்து கொள்கிறோம்? ஒரு தேசத்தின் வரலாற்றை ஊரின் வரலாற்றோடு பொருத்திப் பார்க்க வாய்ப்பாக இருக்கும் விஷயங்கள் குறித்தும் சில வரிகள் இந்தப் பதிவு


புத்தகத்தில் இடம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க ஆளுமைகள் குறித்து, 


காவிரி

மாயூரநாதர் 

பரிமள ரங்கநாதர் 

தேரெழுந்தூரில் கம்பர்

தரங்கம்பாடி சீகன்பால்குவின்

மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

உவேசா அவர்களின் தமிழ் கல்வி 

மாயூரம் வேதநாயகம் பிள்ளை 

மு அருணாச்சலம்

மூவலூர் ராமமிருதம் அம்மையார்

ஜி நாராயணசாமி நாயுடு

கல்கி கிருஷ்ணமூர்த்தி


கட்டுரைகளை வாசிக்கையில் இந்த ஆளுமைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் எழுகிறது.

இவர்கள் தவிர மாயவரம் அளவில்  அரசியல், இலக்கிய, சமூக இயக்கங்களுக்காக வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்த ஆளுமைகள் குறித்த நினைவுக் குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. 

இந்திய தேசத்தின் சுதந்திர போராட்ட வரலாற்று நிகழ்வுகளின் எதிரொலி மாயவரத்திலும் இருந்தது. மாயவரம் சேர்ந்த தமிழர்கள் காந்தியுடன் தென்னாபிரிக்காவில் உரிமை போராட்டங்களில் பங்கெடுத்துள்ளனர். அதன் நினைவாக இந்தியா வந்தவுடன் காந்தி, தில்லையாடி வந்திறங்கி, தில்லையாடி மண் எடுத்து கும்பிட்டார். சுதந்திர போராட்டம் வலு பெற்ற அதே வேளையில்  விடுதலை வேட்கையையும் தாண்டி,  கள், அந்நியமோகம் - கதர், பெண்ணடிமை, சாதி ஒழிப்பு  என்னும் இன்ன பிற தளங்களில் மாயவரம் நெடுக நடைபெற்ற சீர்திருத்தங்கள், போராட்டங்கள்  குறித்த குறிப்புக்கள் அடங்கிய நூல் இது. குறிப்பாக ஜி நாராயணசாமி நாயுடு அவர்களின் ஆர்ப்பாட்டம் இல்லாத அப்பட்டமான வரிகள், ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திர வெற்றியை மறக்காமல் இருக்கச் செய்வது. சின்ன அண்ணாமலை அவர்களின் "சொன்னால் நம்ப மாட்டீர்கள்" புத்தகத்திலும் இது போன்ற, சுதந்திர போராட்ட காலம் குறித்த நேரடியான குறிப்புகள் இடம் பெற்றிருக்கும்.  சுதந்திரம் கிடைத்த பின் பல்வேறு சமூக தரப்பின் குரல்களாக சுதந்திர இந்தியாவை வடிவமைத்ததில் திராவிட, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பை இக்கட்டுரைகள் வாயிலாக புரிந்து கொள்ளலாம். 

எது பெருமை 

ஒரு ஊருக்கு எது பெருமை ? ஒரு ஆறு,  நீடித்த பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் பண்பாட்டு விஷயங்கள், முதன் முதலில் நடந்தவை, ஆளுமைகளின் தனிப்பட்ட சாதனைகள் மற்றும் தியாகங்கள், வரலாற்று மனிதர்களின் தடம் அவ்வூரில் பதிந்த விதங்கள், அந்த ஊர்களின் விவசாய வியாபார செழிப்பு, வழிப்பாட்டு தளங்களின் தனித்துவம் - என பொதுவாக இவ்விஷயங்களை கூறலாம் - இவை பெரும்பாலும் நேற்றைய விஷயங்கள் -  அவற்றில் இன்றும் நீடிக்கும் சில விஷயங்கள் நாளைக்கும் எடுத்துச் செல்லக் கூடியதாக அமைந்தவை எவை ? 

---

மாயவரம்

இவ்வளவு பெருமை மிக்க ஊர்களிலிருந்து ஏன் வெளியேறினார்கள் 

ஏன் நினைவுகளை வெளியிருந்து தூண்டியபடி ?

நிலவுடைமை பெருமை சுடரின் மையக்கருமையில் சாதியும் தாசிகளும்,

நறும்புனல் காணா  காவிரியைக் கண்டு சிறு முக சுளிப்புடன் செய்யத் தவறியவற்றிற்கு மாமூலான ஒரு முகமன் 

மீண்டும் ஊர் திரும்பி வா என்றும்  வேண்டாம் என்றும் கை அசைக்கும்  உள்ளூர்வாசிகள்

பல கால சுடரின் கருமையை நூற்றாண்டு அரசியல் காந்தி திராவிடம் பொதுவுடைமை இன்னும் சிலர் கண்டு சொன்னவர்களுக்கு நாம் உறுதி அளித்த விஷயங்கள்.

மணிக்கு 120 ல் இரு ஐந்து மணி நேர பாய்ச்சலில் நாம் தொட்டு விட்டு திரும்பும் நம் குல தெய்வங்கள் 

இங்கிலாதது அங்கு அங்கிலாதது இங்கு என்று நாக்கை சுழற்றியபடி புலன்களை விரித்து நாம் அலைபாயும் நேரங்கள் பல நூற்றாண்டு வரும் என்றொரு கணக்குண்டு. நாம் இந்த பெருமை மிக்க  அலைச்சலை நிறுத்த ஒரு வழியுண்டா ? 

நில உடைமை சுடரில் தஞ்சம் புகவா இத்தனை நவீன வேடங்கள் என்று யார் அவர் கேட்பது ? 

கோபுரம் வேண்டாம் பிரகாரம் வேண்டும் என்று நீ கேட்பதில் ஏதோ அர்த்தம் 

சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்து இருக்கையில் கேட்கும் நாதஸ்வர நாதம் உன் வீட்டு ஸ்பீக்கரில் குழறும் ரேடியோஹெட் 

தமிழ் வளர்த்த பண்டிதர்கள் கேட்கிறார்கள் எவ்வளவு தமிழ் youtube டைனோசர்கள் 

குந்தேரா " Slowness" என்றார்

இந்த "மெதுவா" வஸ்து அரிதினும் அரிதான ஒரு விடை , ஒரு சாளரம்.

மாயவரம் குறித்து அவர் எழுதிய நாவலா அது என்று இலக்கிய வாசகர் கேட்கிறார். எந்த ஜானர் ?

பழையதையும் புதிதையும் வெட்டி

நம் சோற்றுப் பருக்கைகளால் அட்டைக் கோட்டைகளில் ஒட்டும் எதிர் கால கனவு எனில் "சயின்ஸ் பிக்க்ஷன்"

காலமேனும் மரங்களில் கிளை தோறும் தாவித் தாவி பெருமை  பழங்கள் பறிக்கும் விளையாட்டு எனில் "வரலாற்றுப் படம் "

இப்போதைக்கு, "நடை சாற்றி விடுவார்களாம்" என பைபாஸில் விரையும் மனதின் "இருத்தலிய நாடகம்".

நீங்கள் செல்லும் கோயில் பிரகாரத்தில் "தேமே" என்று ஒருவன் அமர்ந்திருப்பான். நூற்றாண்டு சுற்றிய குழப்பத்தில் இருக்கும் அவனிடம் எதுவும்  கேட்காதீர்கள். அவனுள் உறையும் அத்தனை கேள்விகளுக்கும் மெதுவாய் தான் விடை வரும்.

Tuesday, March 22, 2022

பூமராங் - சத்யானந்தன்

பூமராங் நாவலை முன் வைத்து, 2022 ல் நடக்கும் நாவல். அடையாளம் குறித்த  தனிமனிதனின் தேடல்கள், நிறுவனங்கள்  கொண்டுள்ள நிச்சயங்கள்,  அடையாளத்தின் உண்மை ரூபத்தின் முன் தனி மனிதனுக்கு எழும் மேலதிக கேள்விகள், அடையாள வேட்கையின் நீட்சியாக ஏற்பட்டிருக்க கூடிய வணிக சாத்தியங்கள் என அடையாளத்தின் பன்முக உருமாற்றங்கள் குறித்த இந்த நாவல்  சமகாலத்தை மேலும் சற்று புரிந்துக் கொள்ள உதவுகிறது. சம்பவங்களின் தொகுப்பாகவே அமைந்துள்ள இந்நூல்  குறிப்பிடத்தக்க நடையையோ வடிவத்தையோ கொண்டிருக்கவில்லை.கதையின் வீச்சோ கதையின்  முடிவோ நம்மை பெரிதாக  அசைத்துப் பார்க்கவில்லை. 


நாவலின் உட்பிரதி சமகால அரசியலை தொகுக்கும் வண்ணம் அமைந்திருப்பதால் சற்று கவனத்தைக் கோருகிறது. நாவல் முடிவாக கூர்மையாக எதையும் முன் வைப்பதில்லை,  படித்து முடிக்கையில் நம் மனத்தில் எழும் கேள்விகளை தொகுத்தால் மட்டுமே சமகாலம் குறித்த சில கேள்விகள், நம் கவனம் குவிய வேண்டிய இடங்கள் குறித்து அறிய முடியும். 

"இவர் இத்தொகுதியை வென்றார்" ,இவர் இந்நாட்டை வென்றார்",இவர் தான் இக்கட்சியின் "உண்மையான வாரிசு" , "இவர் அடுத்து ஆட்சியை பிடிப்பார்" என்கிற ரீதியான  ராஜா ராணி காலத்தின் சாயல் கொண்டபடி செய்திகளின் சமூக ஊடகங்களின் திவலை ஒன்று.

அரசியல் கட்சி நிறுவனமாக அடையாளத்தை பெற, தேட முயல்கையில் ஏற்படும் ஒற்றைப்படைத்தன்மை-  ஒரே தீர்வு ஒரே வரலாற்று நாயகன் ஒரேடியான மாற்றம் என்கிற திவலை இரண்டு.

தனி மனிதனாக ஏன் தினசரி அடையாளம் சார்ந்த விஷயங்கள் எக்காலத்திலும் இல்லாது நம்மை இப்படி அலைக்கழிக்கின்றன ?, நம் சிறிய வாழ்வில், ஏன் இவ்வளவு ஆர்வமாக  இத்தனை பழைய நாட்களை , இத்தனை பழைய சொற்களைச் சுமக்கத் தயாராக இருக்கிறோம்? இத்தனை அடையாள பிரக்ஞை ஏன் வருகிறது ? என்கிற திவலை மூன்று.

அடையாளத் தேடல் நம்மை கொண்டு சென்று நிறுத்தும் நாம் விரும்பத்தகாத உண்மையான இடங்கள், அவற்றிற்கான நமது எதிர்வினை என்ன ? நாம் வரலாற்றைப் புரட்டி நமக்கு வேண்டிய வீர தீரங்களை மட்டும் பொறுக்கி எடுக்க விரும்புகிறோம். தவறி கையோடு வரும் நம் சாதாரண வலுவில்லாத இருப்பிற்கும், வலி மிகுந்த ரணங்களை ஆற்றுவதற்கும் நமக்கு பரந்த நோக்கும் லட்சியமும் இருக்கிறதா ? அல்லது அடையாளத் தேடல் நம் ஆணவத்தை வீங்க வைக்கும் மற்றுமொரு சல்லிசான முயற்சியா? என்கிற திவலை நான்கு.

இவ்வாறு அனைத்து இடங்களிலும் வியாபித்து இருக்கும் அடையாள வேட்கை, அதன் தத்துவம், மெய்ம்மை, பொது நோக்கு அனைத்தையும் செரித்து ஏப்பம் விடும் வண்ணம் அமைந்திருக்கும் அடையாளம் சார்ந்த வணிகம் , அடையாளம் சார்ந்த ஸ்தூல பொருட்களின் வருகை குறித்து எவ்வளவு பிரக்ஞை பூர்வமாக நாம் உணர்ந்திருக்கிறோம் ? என்கிற திவலை ஐந்து.


176 பக்கங்கள், ஒரு நாளில் வாசித்து விடலாம், ஸீரோடிகிரி எழுத்து பிரசுரம். 

Tuesday, March 15, 2022

காந்தி ஸ்கொயர் - களத்தர கோபன்

காந்தி ஸ்கொயர் - களத்தர கோபன் அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு , மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ராஜன் ஆத்தியப்பன் மொழிபெயர்த்திருக்கிறார் - புது எழுத்து வெளியீடு. 



இக்கவிதைகளின் ஒட்டுமொத்த  பார்வையை  "ஒன்று மற்றொன்று  போல ஆகுதல்" என்று கருத வாய்ப்பிருக்கிறது. ஸ்தூலமான ஒரு பொருள் இன்னொன்றாவதின் சித்திரம், சாதாரண நிகழ்வுகளின் விசித்திரமான கோணம், விசித்திரமான நிகழ்வுகள், தலைகீழாக்கம் என்னும் வகையில் அமைந்த கவிதைகள் இவை.

சமகாலத்தின் நிஜ வாழ்வின் எவ்வகையான விஷயங்களை இக்கவிதைகள் பிரதிபலிக்கின்றன என்பது குறித்து - கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கையில் துயரம்/ வலி / துர்சம்பவம் / இழப்பு  இவற்றின்  ரேகைகளே பெரும்பாலான கவிதைகளில் பதிந்திருக்கின்றன. தேடித் தேடி சலித்தாலும் ஆறுதல் அளிக்கும் வரிகளை இக்கவிதைகளிலிருந்து காண்பது கடினம். ஆறுதல் அளிக்காத வலி மிகுந்த வரிகள்  ஆர்ப்பாட்டம் இல்லாத மொழியில் அமைந்திருக்கின்றன.  மாபெரும் துயரங்கள் முதல் சின்ன சலிப்புகள் வரை இக்கவிதைகளின் வரிகளில் விரவிக்  கிடக்கின்றன. ஏன் இவ்வாறு - நம்மை சூழ்ந்துள்ள புற உலகம் இத்தனை வேதனையானதா ? வேடிக்கைச் சம்பவங்கள் போல் வரும் வரிகளில் ஏன் இத்தனை சோகம் ? 

"நல்லதொரு குடும்பம்" , "ஒன்றின் வெளிப்படல் ", "ரேசன் கார்டு" , "ஆமையும் முயலும்" ஆகிய கவிதைகள் அதன் அறிவார்த்தத்தால் முழுமை பெறுகின்றன.  "கெட்ட வாழ்வு", "நீர்க் குழந்தை" - ஆகிய கவிதைகளில் அதன் அறிவார்த்தத்தையும் மீறிய ஆசிரியரின் தனித்துவம் கூறும் கவிதைகளாக , அறிவை மீறிய உணர்நிலைகளை தொட்டு செல்கின்றன. இரு  துருவ உணர்வுநிலைகளின் எல்லையில் உள்ளவை இவ்விரண்டு கவிதைகள்.

அநேக கவிதைகள் சம்பவங்களின் கோர்வையாக இருக்கின்றன. நல்ல சில முழுமையான  கவிதைகளைத்  தாண்டி அநேக கவிதைகளில் சம்பவ விவரிப்பின் விஸ்தாரமான  வரிகளின் ஊடே நன்கு அமைந்த சில வரிகள் ஒளிந்திருக்கின்றன. ஒரு சில இடங்களில் மொத்த கவிதையின் சித்திரத்தை நன்கு அமைந்த அந்த சில வரிகள்  மட்டுமே  அளிக்கவல்லதாக இருக்கின்றன. சம்பவங்களின் விஸ்தாரமான விவரிப்பு வாசக அனுபவத்தின்  அமைதியை குலைப்பதாகவே உள்ளது. தாண்டித்தாண்டி இடைவெளிகளை நிரப்ப வல்ல வாசகனுக்கு இவ்வகையான விஸ்தாரமான விவரிப்புகள் தடையாகவே இருக்கிறது. அவ்வாறு அமைந்த அந்த சில வரிகள் தன்னளவிலேயே மிகுந்த அமைதியை சூடிக்கொண்டிருக்கின்றன. 

"காலகாலமாய்   

மரத்தடிகளில் எத்தனையோ பேர் 

அமர்ந்திருக்க 

ஒருவன் மட்டும் 

புத்தனாகி எழுகிறான்" 


"ஊடே ஒன்று சொல்கிறேன் 

உடன்படாதவர்களின் உதிரம்தான் 

இந்த பூட்சின் மினுமினுப்பை 

தொடர்ந்து தக்கவைப்பது" 


"வளர்ந்த பின்னும் 

எதற்காக 

இந்த நினைவுகள் 

பாழ்வெளியில் மீன்பிடிக்கின்றன "  


"மதிய வெயில் வந்து 

மரத்தை பலவித நிழலாக்கி 

தரையில் எழுதி விளையாடும் 

மரம் அதை  ரசிக்கும்" 


"ஆற்றில் ஒருபுறம் பசிய வெளி 

மறுபுறம் வீடுகள் 

நீலவானம் அல்லது மழை மூண்ட 

சூழலில் அது ஒரு ராட்சத கான்வாஸ்"


"தன்மையின் மாய விரலால் 

வரையும் நதிக்கு ஓவியனின் லாவகம்" 


"அதோ அவனே தான் 

இறங்கி ஓடுகிறான் 

முடிந்தவரை அனைவரும் அழைத்தபின்னும் 

திரும்பிப் பார்க்காமல் 

மரங்களிடேயே ஓடுகிறான் 

..............

காலகாலமாய் 

நம்மிலிருந்து ஒருவன் 

காடு புகுவது வழக்கமே 

என்று எண்ணினால் மட்டும் போதும் " 


"இரவும் பகலும் 

அதனதன் 

அர்த்தத்திற்கு வெளிய 

சென்றுவிட்டன"

நகரங்களின் அவல புறத்தோற்றம், ஒன்றை  இன்னொன்றாக்கும் இன்னொன்றாக பார்க்கும் மனநிலை , ஒரு விஷயத்தின் மாறுபட்ட கோணங்கள் அல்லது பகுப்பாயும் மனநிலை , சூழலில் நிரம்பியுள்ள துயரங்களின் குரல்கள் அளிக்கும் ஆறுதலின்மை, வேடிக்கையுடன் அனைத்தையும் கடக்க முயலும் எத்தனம் என நம் சூழலின் ஒரு பிடி இக்கவிதைகளில் உள்ளன. களத்தர கோபன் அவர்களுக்கும் ராஜன் ஆத்தியப்பனுக்கும் நன்றி.  

Friday, March 11, 2022

நாரத ராமாயணம் - புதுமைப்பித்தன்

 ராமாயண கதை நிகழ்வுகளையும்  மற்றும் கதாப்பாத்திரங்களையும் பகடி செய்யும் விதமாக தொடங்கும் இந்தப் புதினம் இந்திய தேசத்தின் சமூக வரலாற்றின் அவல சித்திரமாக,  இந்தியாவில் காலனியாதிக்க வரலாற்றின், வணிக அரசுகளின் ஆளுகையின் விமர்சனமாக விரிந்து , புதுமைப்பித்தனின் சமகாலத்தவராக கருதக் கூடிய காந்தியின் வருகையுடன் முடிகிறது.


வருண அவருண அமைப்புகளை பொருத்தி பார்க்க வல்ல பாத்திர படைப்புகளாக குகன், சுக்ரீவன், விபீஷணன், பரதன் கதாப்பாத்திரங்கள் அமைந்துள்ளன.பாத்திரங்களின் மைய அச்சு மட்டுமே ராமாயணத்தை தழுவி வருகிறது, இப்புதினத்தின் கதை ராமாயணத்தை விட முற்றிலும் வேறானது. இந்நூல் தழுவலோ மறுகூறலோ மொழியாக்கமோ இல்லை. அதே நேரத்தில் வரலாற்றுடன் தொடர்பு படுத்தி பார்க்கையில் மட்டுமே முழு பொருள் கொள்வதாக அமைகிறது. வரிக்கு வரி வரும் எள்ளலும் பகடியும் பிரவாகிக்க நிறுத்தி நிறுத்தி தான் வாசிக்கவே முடிகிறது. 

ஒரு தேசத்தின் வீழ்ச்சியின் கதையாகவும் நாரத ராமாயணம் அமைந்துள்ளது.  இந்நாவல் எழுதப்பட்ட ஆண்டு குறித்த தகவல் இல்லை. 1955 ல் முதலில்  வெளியாகியுள்ளது , இன்று வாசிக்கையில், நாம் பழம் பெருமை என்று புரிந்தும் புரியாமலும் பேசி மணி ஆட்டிக்கொண்டிருக்கும் அபாண்டங்கள், விஷயங்கள், மாறவே விரும்பாத சோம்பல் போதை மற்றும் பொறுப்பற்றத்தன்மை, விஷயத்தை நேரடியாக சந்திக்காது விலகி ஓடும் குணம், உழைப்பே வாழ்க்கையாகிவிட்ட சாமான்ய  மக்களின் அவல நிலை , மக்களுக்காக பட்சணம் என்பது போய் பட்சணத்துக்காக மக்கள்  என்று நாம்  இன்று வந்து சேர்ந்திருக்கும் நிலை, இவை குறித்து நாம் மீண்டும் சிந்தித்துப் பார்க்கும் வாய்ப்பாக இந்நூல் வாசிப்பு அமைந்தது. 

72 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அழிசி வெளியிட்டுள்ளது.

Monday, March 07, 2022

கைம்மண் - சுதாகர் கத்தக்

சுதாகர் கத்தக் எழுதிய பன்னிரெண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.

முற்றிலும் கைவிடப்பட்டவர்களின் கதைகளாக, எளிய மனிதர்கள் அவர்களின் எளிய  இருக்கப்பட்ட நிலையில் இருந்து, மெல்ல, மீட்பே இல்லாத முற்றிலும் கை விடப்படும் நிலைக்கு செல்லும் சித்திரத்தை அளிக்கும் கதைகள் இவை. பள்ளிகளில் மேஜிக் செய்பவர், கழைக்கூத்து ஆடுபவர், பாலியல் தொழிலாளி, திருநங்கை, ஆடு மேய்ப்பவர்கள் , குயவர், கம்பக்காரர், கை விடப்பட்ட பெண்கள் , மரம் வெட்டுபவர், பூட்டுக்காரர்  என்கிற கதாப்பாத்திரங்களை மையமாகவோ, கிளையாகவோ கொண்டு அமைந்த கதைகள் இவை. இக்கதைகளில் மனிதர்கள், மனிதர்களை  கைவிடுகிறார்கள்,  மனிதர்களை இயற்கை கைவிடுகிறது - துயர் மிகு இச்சித்திரங்களை மிகுந்த அமைதியான மொழி நடையிலேயே நமக்கு கடத்திவிடுகிறார் சுதாகர் கத்தக். கதைகளில் வரும் சம்பவங்கள், எப்பொழுதும் இப்பொழுதும்  நடைப்பெற்றுக்கொண்டே இருக்கிறது என்பதான தொனி இந்த "அமைதியான நடை" தேர்வின் மூலம் நமக்கு புலனாகிறது - தொகுப்பின், எந்த ஒரு கதையும் அவல சித்திரத்தை முன் வைத்து வாசகனிடம் இறைஞ்சுவதில்லை. இந்த எளிய மனிதர்களின் இருப்பை அத்தனை அழகுடனும் அவர்களின் இருத்தலிலிருந்து இல்லாது செல்லும் பயணத்தை, அப்பயணம் அளிக்கும்  வலியை அத்துணை கண்ணியத்துடனும் பதிவு செய்திருக்கும் கதைகள் இவை. 



ஒரு தொல் கதையின் நாடோடிக் கதையின் சாயலுடன் எழுதப்பட்டிருக்கும் நவீன கதைளாக " வரைவு" , " நட்சத்திரங்களுடன் பேசுபவள்" , "மருமகளும் மாமன்மார்களும் " மற்றும் " பயணம்" கதைகள் அமைந்திருக்கின்றன. "ஒன்றுக்கும் மேற்பட்டவர்க்கு இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது "அல்லது "காலம் காலமாக தொடரும் அவலம் இது"என்ற தொனியை  இக்கதைகளுக்கு இந்நாடோடி அம்சம் வழங்குகிறது, அதே நேரத்தில், இன்றைய காலகட்டத்தை இணைக்கும் வண்ணம், கதையில் ஒரு சில விஷயங்கள் அமையப்பெற்று நாடோடி கதைகள் அளிக்கும் " என்றோ நடந்தது" என்பதான அம்சங்களையும்  தாண்டி இன்று நடந்து கொண்டிருக்கும்  நவீனகதைகளாகவும் இவை அமைந்திருக்கின்றன. இக்கதைகளின் சில பகுதிகளில்  கூடி வந்திருக்கும் கவித்துவம், மறக்க முடியாத "நிகழ் சித்திரங்களை" நமக்கு அளிக்கிறது.  

"வரைவு" மற்றும்  "கைம்மண்" கதைகளின் உட்பிரதிகள் மிகவும்  நுட்பமானவை - ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் சரி நிலைகள் மதங்களின் சரி நிலைகள் குறித்த வாசிப்பாக அமைந்த கதைகள் இவை - இயற்கை பொய்த்து, நீர் முற்றிலும் வற்றி பாறைகள் வெடிக்கத் தொடங்கும் உலர்ந்த கதைகளாக " கறுகுதல் ", "திருமணஞ்சேரி" அமைந்திருக்கின்றன."உயிர் வித்தை", " கழைக்கூத்து" ,"நாட்கள்" , "மழை" மற்றும் "சாபம்" என்னும் முதல் ஐந்து கதைகள் சுதாகர் அவர்களின் துவக்க கால கதைகள். காலத்தால் பிந்தைய  ஏழு கதைகள் 

கூடுதல் செறிவுடன் அமைதியுடன் அமைந்துள்ளன. அனைத்து கதைகளிலும்  பாலியல் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் மிகவும் நேரடியாக குறுகுறுப்பின் குற்றவுணர்வின் சாயல்கள் அறவே இல்லாத யதார்த்த நடையில் தொனியில் அமைந்துள்ளன. 

கதைகளின் மைய உரையாடல் போக இக்கதைகள் மனதில் எழுப்பிய சலனங்கள் குறித்து - சுதாகர் அவர்களின் பிற்கால கதைகள் மிகுந்த செறிவுடன் அளிக்கும் சித்திரங்கள் மனதில் ஒரு "கனவை " விதைக்கிறது. இயற்கையை நிதானமாக அமர்ந்து கண்டுக்கொண்டே மெதுவாக எந்த வித அவசரமும் இல்லாத ஒரு வாழ்வியல் முறை  நிச்சயம் இருக்கிறது என்னும் அந்தக் கனவு - அந்தப் பழைய கனவின், மனிதன் கண்ட  அக்கனவின் "நனவுப் பிரதி" மெச்சும்படியாக இல்லை.   நனவுப் பிரதியின் முகத்தில் உள்ள காலத்தின் வடுக்களாக  இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் உள்ளன.  அறிந்தும் அறியாமலும் மனிதன் கடந்து வந்துக் கொண்டிருக்கும் பாதச்சுவடுகள் இக்கதைகள். இவ்வடுக்களை, இத்துயரங்களை நீக்கியவாறே அப்புதிய கனவினை நோக்கி மீண்டும் நடக்க நவீன மனிதன் விழைகிறான்.  

Tuesday, March 01, 2022

வியனுலகு வதியும் பெருமலர் - இளங்கோ கிருஷ்ணன்

இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பை முன் வைத்து, 


தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கத்  தொடங்குகையில் முதலில் மனதைக்  கவர்வது கவிஞரின் ஆர்ப்பாட்டமான மொழிநவீன கவிதைகளில் இத்தனை ஆர்ப்பாட்டம் பொருந்தாதது என்ற கருத்தும் ஏற்கத்தக்கதேஆனால் அதே நேரத்தில் பாடு பொருளின் தீவிரம் நிகழ்த்தும் பிரவாகம் இவை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்இந்த ஆர்ப்பாட்டத்தின்பிரவாகத்தின்  ஓட்டத்தில் வாசகன் கண்டடைய நிறைவு பெறாத " தார்மீக பிரகடனங்கள்" , மௌடீகம் உடையும் "சொற் கோர்வைகள்", தீவிரமான "நிகழ்த்து உருவங்கள்  " அமையப் பெற்ற கவிதைத் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது "வியனுலகு வதியும் பெருமலர் ".  

தொகுப்பு ஐந்து பகுதிகளாக 1. பசியின் கதை 2. மரணத்தின் பாடல்கள் 3. பேரன்பின் வேட்டை நிலம் 4. எனும் சொற்கள் 5. நீர்மையின் பிரதிகள் என  பிரிக்கப் பட்டுள்ளதுஐந்து பகுதிகளையும் இணைத்து வாசிக்கையில்,   இத்தொகுதி ஒரு கவிஞனின் அல்லல் மிகு அகப்பயணத்தின் சாட்சியாகவும் அமைந்திருக்கிறது என்றே தோன்றுகிறதுஅதே நேரத்தில் பெரும்பான்மையான கவிதைகள் "எதிரொலி " அல்லது "எதிர் வினை " அம்சம் கூடிய கவிதைகளாக இருக்கின்றனகவிஞரின் எதிர்வினை என்றென்றும் இருக்கும் பசியின் மரணத்தின் போதாமையின் சொற்களாகவும் சமகால நிகழ்வுகளான கொரோனா பேரிடர் விளைவுகள் , தூத்துக்குடி குறித்த கொந்தளிப்பான வரிகளாகவும் அமைந்திருக்கின்றனஇயற்கையில் தவிர்க்க இயலாத பசி மற்றும் மரணம் குறித்த அடிப்படை தொனியில் இக்கவிதைகள் அமைந்துள்ளன.

 

பசியின் கதையில் "அவர்கள் செல்கிறார்கள்" கவிதையில்

"பசி போல்

துல்லியமான

ஒரு தத்துவத்தை

ரொட்டி போல்

கருணையுள்ள

ஒரு தலைவனை

உங்களால்

ஏன்

உருவாக்க

இயலவில்லை " 

ஒரு பிரகடனத்தின் நீட்சியாக அதே நேரத்தில்  மிக எளிமையான இக்காரியத்தை இவ்வளவு காலம் கடந்தும்  நம்மால் ஏன் செய்து முடிக்க இயலவில்லை என்ற கேள்வியே கவிதையாக அமைந்திருக்கிறது  -  இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் "நம்மால் " கவிதையில் "உங்களால்" என்று அமைந்திருப்பதையும் துணுக்குற வைக்கும் இவ்வரிகளில் நாம் காண முடியும்.


----

மரணத்தின் பாடல்கள் மிகுந்த நேரடியாக உள்ளன. பாடுபொருளின் உள்ளார்ந்த தீவிரம் கவிதைகளில் வெளிப்படுகிறது -

மரணத்தின் நிமித்தம் குறித்த வரிகளாக

"கரு நீல வண்ண மாத்திரையை

ஒரு நாள் பிரிக்கும்போது

கட்டிலுக்கடியில் உருண்டோடிவிட்டது

இப்படித்தான்

இருண்டது ஒரு மரணம்"  (இப்படித்தான்)

 

"பணிக்கு செல்லும் பரபரப்பில் .....

.......

மரணத்தின் லாரி

டீசல் நிரப்பிக் கொண்டிருக்கிறது " ( மரணத்தின் லாரி )

 

"அத்தனை

வாழ்த்துக்கள் கொஞ்சல்கள்

இருக்க இதுவா பலிக்க வேண்டும் " ('அன்னை இட்ட தீ' )

 

மரணம் நிகழ்வதின் சாஸ்வதம் குறித்த பதிவுகளாக, 

“உதிர்ந்த இலையில்

தன் மரணத்தைப்

பார்த்துக்கொண்டிருக்கிறது

மரம்

குனிந்து

அந்த மரத்தைப்

பார்த்துக்கொண்டிருக்கிறது

வானம் “ ( 'பார்த்தல்' )

  

"அத்தனை துரிதமாய்

உன்னிடம்

நடந்து வருபவர் யார்

ஒரு கையிலிருந்து

இன்னொரு கைக்கு

மாறுவதற்குள்

ஒரு கனி காயாகி விடுகிறது

துரத்தி வரும் கண்கள்

கல்லாய் சமைய " (கனி )

என்னும் வரிகள் அமைந்திருக்கின்றன.

 

மரணப் பிரிவின் அரற்றலின் உணர்ச்சிகர சித்திரமாய்,

" வெறி கொண்ட ஆண் மந்தி 

.......................................................................

நீர் பாம்புகளைப் பிடித்து

படார் படாரென தரையில் அறைந்து கொல்கிறது " (யம கதை’)

 

அரற்றலின் பின் தொடரும் மரணம் குறித்த புரிதலும் தத்துவமும் அமைதியும் அமையப்பெற்ற வரிகளாக

 

" துக்க வீட்டில்

 ஒவ்வொருவராய்

எழுந்து செல்கிறார்கள்

துக்க வீடும் இறுதியாய்

எழுந்து சென்றது

துக்கம் எழுந்து செல்லும் வரை

காத்திருக்கிறான் புத்தன் " ( புத்தன் )

  

".......

இவன் போன வாரம் தான் அங்க செத்துக்  கிடந்தான்

வாராவாரம் இவனை யாராவது

கொன்னுடறாங்க என்ன கருமமோ என்றார் " (பிணம்)

 

"....

மோபியஸின் பாதை நீள்கிறது

இந்தப் பாதையில் ஊரும்

எத்தனையாவது

எறும்பு இது

என்கிறான் போதிச் சத்துவன்

இந்த எறும்பைச் சுமக்கும்

எத்தனையாவது பாதை

இது என்கிறான் புத்தன் " (மோபியஸ்)

மரணத்தின் இந்தப் பாடல்களில் தனிப்பட்ட மரணம் குறித்த பயங்களோ, அவகாசங்களோ பதிவாகவில்லை - மாறாக மரணம் என்னும் தொடர் நிகழ்வினை பொருள் கொள்ள முயலும் ஒரு விலகல் முயற்சியாக இக்கவிதைகள் இருக்கின்றன.  

-------

 'பேரன்பின் வேட்டை நிலம்' பகுதியின் இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் சென்னை நகரவாழ்வின்  சித்திரமாகவும் அவரின் உள்ளார்ந்த செழுமையின்  கற்றலின் கொந்தளிப்பான பயணமாகவும்  அமைந்திருக்கிறது.

"கோயம்பேடு அல்லது கலாப்ரியா வரையாத ஓர் ஓவியம்"  என்னும் கவிதை அளிப்பது  இன்றைய கோயம்பேட்டின் சித்திரம் அதே நேரத்தில் எப்படியோ சில சொற்சேர்கைகளில் ஒரு புராதன சாயல் வந்து விடுகிறதுஅதன் காரணம் " கொள்ளை காலம் இருக்கும்என்று முணுமுணுக்கும் குறுங்காலீஸ்வரர்ரா ? இல்லை  வெளியே எட்டி பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே இறங்கி கொள்ளும் சாக்கடைப் பெருச்சாளி"யா  என்று தெரியவில்லை.

பள்ளிகொண்டேஸ்வரம் , பேரன்பின் வேட்டை நிலம்காளிக்கு சொன்னது - இவை மூன்றும் நீண்ட கவிதைகள். பழைய நினைவுகளுடன் இன்றைய யதார்த்தத்தை பொருத்தும்  அல்லது பொருத்தமின்மையை முன்னிறுத்தும் தீவிரமான கவிதைகள் - புராதனத்தின் கதைத் தன்மையும்  இன்றைய நகரத்தின் அவல சித்திரத்தையும் அளிக்க முற்படும் கவிதை " காளிக்கு சொன்னது" - " 

இது உனது நகரம் " "இது உனது நகரம்என்று முடியும் "நகரம்கவிதை சென்னைக்கு பயணப்பட்டு சென்னையை கவிஞர் மனதளவில் ஏற்றுக்கொண்டதன் பிரகடனம். " மகளுக்கு சொன்னதுதமிழின் நெடிய கவிஞர்களின் பன்முகப்பட்ட வரலாறாக நேரடி கவிதையாக அமைந்திருக்கிறது.

-----

 

எனும் சொற்கள்

இப்பகுதியில், 'தோற்றம்என்னும் முதல் கவிதை தொடங்கி  பொதுவாக கவிதைகள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதற்கான வரைபடம் போல் அடுத்தடுத்த கவிதைகள் வரிசை படுத்தப்பட்டுள்ளனஒவ்வொரு தனி க் கவிதையின் வாசிப்பு இன்பத்தையும் தாண்டி இப்பகுதியின் கவிதைகள் உருவாக்கும் ஒட்டு மொத்த சித்திரம் மிகுந்த தெளிவாக அமைந்திருக்கிறது.

'தோற்றம்', 'நாளைய கவிதை'யில் அடிப்படையான சொற்களில் தொடங்கும் இந்த வரைப்படம்எதற்காக கவிதை எழுத வேண்டும் என்பது குறித்து 'கவிஞன்',  கட்டுக்கு அடங்காத சொற்களின் பிரவாகம் குறித்த 'இரவின் சொற்கள்' , திடீரென பிரவாகம் நிற்க சொற்களுக்குக்கான காத்திருப்பு நீளுகையில் 'அம்மா வந்து விடு','கிணறு', பிறிதொரு கவியின் சொற்களின் இடம் வலம் அரசியலின் வருகையை தெரிவிக்கும் 'எறும்புகள்', நோய்மையின் விகாரம் காட்டும்  'நோய்மையின் சொற்கள்', எழுதப்படாத புதிய கவிதை குறித்த 'இடப்படா முத்தம்', பக்தி குறித்த 'விநோதக் கடவுளின் பக்தன்', பொருள்முதல்வாத கவிதைக்கான எதிரொலியாய் 'ஹோலுப்புக்கு ஒரு கடிதம்'மற்றும் 'உப்பு', தர்க்கத்தின் எதிரொலியாய் 'எறும்புகள்லௌகீகம் குறித்த 'மதிப்பீடு' , இதர படைப்பளிகளுக்கான எதிர் வினைகளாக அமைந்த 'போரும் அமைதியும்', 'ஆத்மநாமை கொலை செய்தவர்கள்', 'போதாதாஎன்று நீண்டு கவிதை உருவாவத்தின் நிகழ்வதின் சித்திரத்தை அளிக்கிறது.

கவிதை உருவாவதன் வழி தவிர்க்க இயலாது கூடவே எழும் 'அழகிய குரூரம்', 'சிதைவுகள்'  'கடுமை', மீண்டும் மீண்டும் சொற்களுக்கான தேடல் நிகழும் 'எனும் சொற்கள்' , உயிர் பெரும் சொற்கள்', 'கல் எறியும் கலை', 'சொற்கள்என்று விரிந்து 'மோசமான கவி'ஞனை 'மோசமான வாசகன்குறித்து முத்தாய்ப்பாய் கூறி வரைபடம் நிறைவு பெறுகிறது.

 

'நீர்மையின் பிரதிகள்' பகுதி கவிஞர் அவரது அர்த்தமுள்ள அலைதலுக்கு பிறகு மெல்ல மீள்வதை கடப்பதை பதிவு செய்கிறது.இப்பகுதியில் தனிப்பட்ட தொனியிலான கவிதைகளே அதிகம் இருக்கின்றன - முன் பகுதிகளில் அமையாத மென் தருணங்கள்தனிப்பட்ட அனுபவ பதிவுகள் இப்பகுதியில் இடம் பெற துவங்குகின்றன.

"ஆழ்கடலின் ஒரு மீன்

மொத்த கடலையும் சுமந்து கொண்டிருப்பது

ஒரு பாவனையா

ஒரு பூ

மொத்த பிரபஞ்சத்தையும் சுமப்பது போல "  ( ஆழ்கடல் மீன்கள்)

 

 பூத்தொடுக்கும் அந்தப்பெண்

சட்டென முகத்திலாடும் ஈயை

விரட்டிய கணம்

சிலையாகித் திரும்புகிறாள்”  ( பழைய நூற்றாண்டு)

 

"தான் கொடுத்த ஆரஞ்சுச்  சுளைகளை

உண்ணாத நாய்க்குட்டியை மிரட்டிக் கொண்டிருந்தாள் " ( குட்டி சிறுமி )

 

"ஒரு பூனைக்கு குட்டியிடம்

அதைக்  கையளித்தேன்

ரகசியம்

இதை பத்திரமாய் வைத்துக்கொள் என்றேன்” ( ரகசியம்)

 

புன்னகைத்தபோது தான் கவனித்தேன்

இரண்டு தங்கப் பற்கள்" ( சிங்கம் )

 

"உச்சி கிளைகளில்

சில பழுத்த இலைகள் உதிர்கின்றன

உயரத்தில்

மிக உயரத்தில்

இரண்டு விண்மீன்கள் உதிர்கின்றன

உதிரவா என்கிறது பூமி

ஆதூரமாய் அவன் தோளைத் தொடுகிறது

ஒரு கரம்

சட்டென எங்கும் பரவுகிறது நிம்மதி "( நிம்மதி)

 இப்பகுதியில் வெறுப்பு புரிந்து கொள்ளப்படுகிறதுசிறிய தினப்படி விஷயங்கள் கண்ணில் தென்பட தொடங்குகின்றனதத்துவங்கள்ஆவேசங்கள் குறைந்து சிறு சலிப்புடன் நாட்கள் நகருகின்றனகேக்கின் ருசியற்ற பகுதி குறித்த ஆர்வம் அதிகரிக்கிறதுதினம் ஒரு விடியலின் பூங்கொத்தே போதுமானதாக இருக்கிறது