Thursday, February 24, 2022

உடல் - அரிசங்கர்

சமூக அமைப்பில், பல்வேறுபட்ட  மனிதர்களின் உடல் சார்ந்த விழைவுகள்,  சிக்கல்கள் மற்றும் புரிதல்களை பேசும் சிறுகதைகளை கொண்ட தொகுப்பு "உடல்".  பெரும்பாலான கதைகளில் ஒரு பாலியல் சிக்கலோ நெருக்கடியோ மையமாக இருக்கிறது . அனைத்து கதைகளின் பிரயத்தனம் , வெளி கண்ணோட்டத்தின் பார்வையில் "சரி" களை முன்வைத்தே அமைந்திருக்கிறது - இந்த "சரிகள்" நமக்கு முன்பே மிகவும் பரிச்சயமானவை - கட்டுரைகள் , விவாதங்கள் வழி இலக்கிய வாசகன் முன்னரே அடைந்துள்ள புரிதல்களே இந்த "அரசியல் சரிகள்"- கதைகள் அனைத்தும் கதையின் நிகழ்த்து அம்சத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்காது, இவ்வரசியல் சரிகளை அடைய மட்டுமே பயணப்படுகிறது - நன்கு தேர்ந்த உரையாடல்,  மொழியின் அழகான கொச்சை வழக்கில் ஆசிரியரால் பல இடங்களில் கையாளப்பட்டிருந்தாலும் அவை கதையின் இந்த அரசியல் சரி வீச்சில் எடுபடாமல் போகின்றது. இது ஆசிரியர் கதாப்பாத்திரத்தின் மனோபாவத்தை விளக்கும் இடங்களில் சற்றே நீட்டித்து மொத்த சூழலின் கருத்தை கூறுகையில் வாசகனின் பங்களிப்பிற்கு இடமே இல்லாது போகிறது. சரளமானதெளிந்த உரைநடை அநேக இடங்களில் ஆசிரியரின் தெளிவை பறைசாற்றினாலும் வாசகன் பார்வையில்  கதை உயிர் பெறும்  இடங்கள் நிகழ்த்து அம்சம் அமைந்துள்ள இடங்களே.


பொருள் வயின் பிரிவால் ஏற்படும் சிக்கல்களை மையப்படுத்தி உடல், ஒலிக்குறிப்புகள், காமுறுதல்,முத்தம், கூண்டுக்கு வெளியே கதைகளும், இயற்கை விலகலை மையப்படுத்தி பைனரி மழை கதையும், முகம் சிறு பிறழ்வை மையப்படுத்தியும், மாகாளி, அம்மா கதையில் இயற்கையில் அமைந்த திரிபுகள் குறித்தும் அரிசங்கர் எழுதியுள்ளார். - உடல், மாகாளி, அம்மா,  ஒலிக்குறிப்புகள் கதைகளின் சாத்தியங்கள் ஏராளம் . தற்போதைய அளவில் அவரது மொத்த புரிதலையும் தேய் வழக்குகளையும் அரசியல் சரிகளையும்  கதையில் அமைக்கையில் உட்பிரதிகளுக்கும்   மேலதிக வாசிப்பிற்கும் இடம் இல்லாது போகிறது .

Wednesday, February 23, 2022

ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்

பெண்களின் அக உலகை அவர்களது மௌனம் மிகுந்த துயரங்களை நெருங்கி வாசிக்க முயலும் பிரதி, அதே நேரத்தில் பெண்களின் மனப் போராட்டங்களின் காரண காரியங்களுக்குள் புக விரும்பாத இலக்கிய ஆக்கமாகவும் அமைந்திருக்கிறது. அந்தப் பெண்களின் கதை வழி அவர்கள் வீட்டின் கதைகளும் நமக்கு கூறப்படுகின்றன. அனைத்து கதைகளையும் ஸ்தூலமாக புறத்தே இணைப்பது அம்மக்கள் வாழும் ரெயினீஸ் ஐயர் தெரு. அகத்தே  பால்யம் முதல் முதுமை வரையிலான பெண்களின் மன ஓட்டங்களை பதிவு செய்யும் நாவலாக ரெயினீஸ் ஐயர் தெரு அமைந்திருக்கிறது. 


சம்பவங்களின் கதை நிகழ்வுகளின் விவரிப்பிற்கோ பதைப்பிற்கோ ஓரளவுக்கு மேல் இடம் கொடுக்காது ஒரு வித கதைச்சுருக்கம் போல் வீடுகளின் கதைகளை வீட்டில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து படி நாவல் விரிகிறது. டாரதி என்னும் சிறுமி தொடங்கி, அற்புத மேரியின் முதல் சஞ்சலம், ஜீனோவின் பூப்பெய்திய காலங்கள், பிலோமியின் அக்கா மீதான பொறாமை, இருதய டீச்சர் சேசுராஜ் மண வாழ்வு கதை, அன்ன மேரி அக்காவும் அவரது விதவை கோலமும் அவர் மகன் தியோடரும், எஸ்தர் சித்தியும், மங்களவல்லி சித்தியும், ரோசம்மாள் ரெபேக்காள் முதுமைக்காலங்கள் என நாவல் பெண்களின் வெவ்வேறு வயதின் அக விழைவுகளை பதிவு செய்வதில் வெற்றி கண்டுள்ளது. ஏற்கனவே கூறியது போல் காரண காரிய ஆராய்ச்சியில் இறங்காது சிறிய ஓவியங்களை போல் நிகழ்வுகளை அளவான துல்லியத்துடன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. அந்த ஓவியங்களுக்கு ஒளியூட்ட காமம் மெல்லிய சுடராய் ஒளிர்கிறது. வழக்கம் போல் மாதங்களும் பருவங்களும் மாறியும் மாறாது இருக்கும் காலங்களும் வந்த வண்ணம் உள்ளன. 

அக்காம சுடரின் ஒளியில் டாரதி மழையில் நனைவதையும், ஜீனோ ராட்டினத்தில் சுற்றுவதையும், பிலோமி கடற்கரையில் குதிப்பதையும், இருதய டீச்சரின் மெல் அணைப்பையும், எஸ்தரின் அத்தனை குதூகலத்தையும் நீங்கள் காண முடியும். அந்த சுடரின் முன் தந்தை அண்ணன் கணவன் மகன் உறவு பேதங்கள் இல்லை, ஆணும் பெண்ணும் அவ்வொளியின் வெம்மையை சிறிது உணரும் தருணங்களின் மென் விவரிப்புகளே இந்நாவல். முற்றிலும் உடல் சார்ந்ததாக  என்று கேட்டால் இல்லை என்றே கூறத் தோன்றுகிறது. ஸ்பரிசத்தை விட அருகாமை சொற்களை விட மௌனம் மிக அழகாக அவ்வொளியில் மின்னுகிறது. மழை வருகையில் நாம் அமைதி அடைவது இதனால் தான் போலும், நாம் விழையும் ஒன்றின் அருகாமை நம்மை அறியாமல் நம்மை மகிழ்விக்கிறது நாம் மௌனித்து அதை உணர்கிறோம். 

Saturday, February 19, 2022

The New BJP - Nalin Mehta

Comprehensive book on History and Growth of BJP - gets us a insider view of Party s guiding principles, Electoral Politics, Changing Narratives, Success areas of Current Era of Modi Shah, Conjoint role of Other organisations of Sangh especially the RSS. Book is built on data of candidates across legislative and party positions summarised as Mehta Singh Social Index, Analysis of Nature and frequency of topics of discourse by the various parties  through traditional and social media routes in objective manner resulting in Narad Index. Adding to these Objective analysis are anecdotes, Interviews and Speech Excerpts. 


In its attempt to be Objective book is less perceptive except in very few places  1)Where it clearly links current faultlines with Origins of Sangh  2)Reasons for Rise of woman power in BJP 3) It rises a open academic question on Contours of Third Indian Way against polarities of Capitalism and Communism else where in the world. 

Using Objective Analysis, Book charts BJP s growth as a Rurban and Rural party , Growth in its Women cadre base, How it blended Technology, Cadre Addition , Welfare Politics and Organisational Structure changes in tune with times, Influence of Sangh& RSS and BJP s success story in Karnataka ,NE and if it can be repeated in other southern states. 

Arrival of the Political Automaton

Targeted Welfare kept as a Wheel, Extensive use of Technology for Cadre and Voter enrolment to travel along, Virulent Narratives to keep the Speed, Smart and Stoic enough to take diversions and remain hungry to reach newer spaces. Book details working of this automaton and a template for any party to emulate. This template in way ensures perpetual power for whoever runs it, add to this complying institutions and Media to this, Perpetual Power is a byproduct. 

Another area where this book provides additional light is on Woman voters and Cadre. On Objective view Woman voters are significant reason for BJP s success. Government s welfare wheel runs along Women s life cycle from Birth, Education, Career till Old age, Add to this a perceptive point on  impact of virulent male image like Modi creates in Women Minds. In normal opinion matters it is difficult to establish certainty of what women think and in political milieu it remains all the more elusive. 

Due to its Conjoint position Sangh is able to take stance of varying degree of seriousness separating BJP and other Organisations like RSS, but at same time provide a pipeline of cadre to BJP party and Government. RSS emulating church in its attempt to wrest social control from Church in Northeast, Imma e Hind and Indian Church party are interesting way to look at things. 

Reading the book will make us little wiser we have better stones to pick and hurl at each other now in our everlasting debates or pastimes rather. 

Monday, February 14, 2022

கல் மண்டபம் - வழக்கறிஞர் சுமதி

கல் மண்டபம் - வழக்கறிஞர் சுமதி. 2001ல் வெளிவந்த நாவல், 2009ல் ஒரு பதிப்பும், 2022 ல்  சிறுவாணி வாசகர் மையம் சார்பாக இப்போது மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது.


தேசு என்கிற வேதாந்த தேசிகன் என்னும் கதாப்பாத்திரத்தின் முப்பதாண்டு கால வாழ்க்கைப் போராட்டம்  நாவலாக அமைந்திருக்கிறது. தேசுவின் தாய், தந்தை, உறவு, சுற்றம் குறித்த எண்ணற்ற கிளைக்கதைகள் வழி ஒரு சமூகத்தின் மன ஓட்டத்தையும் அவர்கள் சந்திக்கும் அக மற்றும் புற சவால்கள் குறித்த குறிப்புகளும் நிறைந்த நாவல் கல்மண்டபம். 

வேதவிற்பன்னம் , தளிகை , ஈம சடங்குகள் - இம்மூன்று  விஷயங்கள் குறித்த சமூக உளவியல் சார்ந்த பார்வையாக நாவலை பார்க்காலம். தேசுவின் தந்தை ராமான்ஜி கற்றறிந்த வேதங்களை விடுத்து தளிகைக்கு வருகிறார் - காலம் அவர் மகனை ஈம சடங்குகள் செய்து வைக்கும் இடத்திற்கு தள்ளுகிறது. ஒப்புக்கொள்ளாவிடினும் வேத பாராயணம் விற்பன்னம் தளிகையை விட உயர்ந்த ஒன்றாகவும் , ஈமச்சடங்குகள் செய்வது இவ்விரண்டையும் விட சற்றே தாழ்ந்ததாய் சமூகத்தின் பார்வையில் இருப்பதான சித்திரம் நாவலில் வருகிறது. காலத்தால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட தேசு மனம் உவந்து ஈம காரியங்கள் செய்யும் இடத்திற்கு வரவில்லை. வேறு வழி இன்றி அவன் தஞ்சம் அடைந்த இடம் , அவனை விட தனித்துவம் மிக்க கோம்ஸ் , மிக நிதானமான சௌமியா  கூட அவ்விடத்திற்க்கு வந்து சேர்கிறார்கள்  - மன நிறைவு என்று கூற முடியாவிடினும் ஒரு வித நிதானமான ஏற்போடு தங்களுக்கு விதிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள் - தேசுவின் தவிப்பு அல்லது மனத்தாங்கல் தன்னால் இவ்விதியின் போக்கை மீறி எதுவும் செய்ய முடியவில்லை என்பதே  - அல்லது அதற்கான தன்முனைப்பு தன்னிடம் இல்லை - தன்னை விதியின் சூழலிலிருந்து மீட்கும் கல்யாணியின் கரங்களை பற்ற அவனுக்கு ரொம்ப காலம் ஆகிறது - தன் சுற்றங்களிடம் இருந்தே நல்லதையும் கெட்டதையும் தேசு பெறுகிறான். நல்லதை கண்டுக்கொள்ள அவனுக்கு நாள் எடுக்கிறது.  

பிறர் துக்கத்தையும் தம் துக்கமாக சுமப்பவனே உண்மையான வைஷ்ணவன் என்கிறார் தேசுவின் மாமா மது. தன் பாட்டையே சரியாக பார்த்து கொள்ள தெரியாத தேசுவிற்கு லட்சிய வைஷ்ணவன் ஆவது எட்டாக்கனி -இவ்விடத்தில் தேசு சுந்தரேசன் மாமாவையும்  , ஹோட்டல் மணி ஐயரும் வைத்துப்  பார்க்கிறான் - இவ்விடத்தில் இவர்கள் இருவரும் தனது பாட்டையும் பார்த்துக்கொண்டு பிறரது சுமையை சிறிது முணுமுணுப்பும் இல்லாது  சுமக்கின்றனர். தேசுவின் தேம்பல் ஒரு நேர்கோட்டில் சென்றபடி இருக்க சுற்றி அமைந்துள்ள கிளைக்கதைகள் தேசுவிற்கு ஆறுதல் கூறியபடி அவனை தேற்றியபடி அவனை கரை சேர்க்க முயல்கின்றன - கிட்டுவின்  மாதவ் ராவின் விஸ்வநாதனின் அட்டுழியங்கள் சடகோபனை சௌமியாவை மணி ஐயரை ஓரளவுக்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதையும் டைகரின் அராஜகம் ஒரளவு தேசு போன்ற ஆட்களுக்கு தேவைப்படுகிறது என்பதையும் நாவலை வாசித்து முடிக்கையில் உணர்கிறோம். 

இறைவன் இருக்குமிடத்தில் இருந்து விலகி வந்ததை சௌந்தரம் ராமான்ஜியிடம் சுட்டிக் காட்டுகிறாள். இறைவனிடத்தில் இருந்து விலகிய ராமான்ஜி வேதத்திலிருந்தும் விலகி பொருள் நோக்கி ஒரு ஓட்டம் எடுக்கிறான் - பொருள் மட்டுமே நினைவாக கொண்ட அந்த ஓட்டத்தின் முடிவு மிகவும் கோரமான ஒன்றாக மாறி தேசுவை நிர்கதியாக்குகிறது -  இறைவனிடமும்  அறத்திலிருந்தும்  விலகிய  பொருள் ஓட்டத்தின் கோரம் பரத்தைமை நாவலின் முக்கியமான இழை - இறுதியில் தேசு தனது கடைசி வாய்ப்பை  அவனது தந்தையின் பூர்வ செயல்கள் வழி அடைகிறான். 

தேசு தனது வாரிசுகளுக்கு எந்த ஒரு விஷயத்தை விட்டு செல்லப் போகிறான் ? காலம் தோறும் மாறாத பிறப்பு நடப்பு இறப்பு சட்டகத்தை குறித்த பரிச்சியம் அடைந்திருக்கும் தேசு, இம்மூன்றை குறித்த தனது பார்வையை பொது சமூக கண்ணாடி வழியே இனியும் தொடர்ந்து பார்க்கப் போகிறானா ? இறப்போர்,  முக்தி வேண்டிய பயணத்திற்கு முடிந்த  தன் பங்கை சஞ்சலத்துடன் செய்து கொண்டிருக்கும் தேசுவிற்கு "முக்தி ரதம்" வேன், அவனது புறத்தேவையை தற்போதைக்கு தீர்க்கும் ஒரு வாய்ப்பு  -ஆனால் அவன் முதலிருந்து பங்கு கொள்ளும் முக்தி பயணத்தை சௌமியா போல் சடகோபன் போல் ஏற்புடன் அமைத்துக் அப்பயணத்தில் தன் பங்கை உணர்ந்து, தன்னை உணரும் வாய்ப்பை காலம் அவனுக்கு அருளுமா ? திடீரென சீற்றமாகி கணவனை இழந்த மாமியின் கூடையை பற்றியபடி பஸ் வரை நடந்து சென்று அவள் அளித்த நாலணாவை மறுத்து  " நான் கூலியும் இல்லை கிராதகனும் இல்லை"  என்று கூறியவன் அல்லவா தேசு. 

Saturday, February 12, 2022

கடைசி விவசாயி - ம. மணிகண்டன்

கடைசி விவசாயி- பார்க்க வேண்டிய படம். நல்ல படம். 


பொற்காலம் திரும்புகிறது

மெதுவாக நிதானமாக நொடி நொடியாக காலம் நகர்கிறது, நீங்கள் அவசரமாக எங்கும் செல்ல வேண்டியத் தேவை இல்லை . யாரிடமும் அவசர அவசரமாக பேசத்தேவையில்லை. மொத்தத்தில் குறைவாக, மெதுவாக கூற ஒரு சில வார்த்தைகளே உங்களுக்கு போதுமானதாக இருக்கும். 

பொற்காலம் திரும்புகிறது,

தினமும் நீங்கள் செய்வதற்கு ஒன்றிரண்டு வேலைகளே இருக்கும். அவ்வேலைகளே உங்கள் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும் ஏனென்றால் உங்கள் தேவைகளே மிகக் குறைவாக இருக்கும்.நீங்கள் அவ்வேலைகளை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் சலிப்படையாமலும் இருப்பீர்கள். 

பொற்காலம் திரும்புகிறது,

நீங்கள் யார்? எந்தப் பிரிவை சேர்ந்தவர் ? உங்கள் கடமைகள் என்ன என்கிற வரலாற்று பளுக்களை யாரோ அகற்றி விட்டனர் , நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மண்ணை சற்று கீறி விதைகளை சற்றே தூவி காத்திருப்பது மட்டும் தான். நீங்கள் எவரிடமும் செய்ய வேண்டியதை பற்றி மிக எளிதாக விளக்கிக் கூறுவீர்கள். உங்களிடம் ரகசியங்கள் இல்லை. தர்மசங்கடமான சாத்திரங்கள் இல்லை, கடினமான சூத்திரங்கள் இல்லை, தத்துவ சிக்கல்கள் இல்லை, அனைத்தையும் விளக்க உங்களுக்கு கைப்பிடி மண் மட்டுமே போதுமானதாக இருக்கும். இதையும் மீறிய வானம் பொய்க்கும் கடின காலங்களில் இறைஞ்சுவதற்கு கல் போன்ற ஒரு கடவுளும் நம் முன்னோர்களும் துணை இருப்பர். 

பொற்காலம் திரும்புகிறது,

உங்களின், உலக நடப்புகளை அறிந்து கொள்ளும் வேட்கை, தணிந்திருக்கும். நீங்கள் மென்மேலும் அறிவை விசாலம் செய்ய மேலும் புத்தகங்களை நாடுவதை நிறுத்தி விட்டு வெகு நாட்களாகி இருக்கும். சூர்யோதயமும் அஸ்தமனமும் , நிலவு நிரம்பிய இரவுகளுமே உங்களை இளைப்பாற்றும்.  தாவரங்களின் பூச்சிகளின் வண்டுகளின் பறவைகளின் மிருகங்களின் உலகிற்கு மிகவும் அருகில் நீங்கள் இருப்பீர்கள்.நீங்கள் பிறந்த ஊரை விட்டு வெளியே செல்ல அவசியம் இருக்காது,  காட்டு வழி உலகை சுற்றும் மயில் சித்தன் ஒருவன் வருடத்தில் இருமுறை வந்து கடவுளின் ஆட்சியை குறித்த புகார்களை, கடவுளின் வருத்தங்களை உங்களிடம் தெரிவிப்பான். 

பொற்காலம் திரும்புகிறது,

என்றுமே இருந்தது போல் காலம் உறைந்திருக்கும், புதிய இரும்பையோ புதிய தங்கத்தையோ புதிய எண்ணெய்யையோ நாடி பூமியின் அடியில் பயணப்பட மாட்டார்கள். பூமியின் மேல் நாகரிகம் உறைந்திருக்கும். இப்படியானதால் அப்படியானது, அப்படியானதால் இப்படியானது என்ற கதையாடல்கள் பழங்கதையாய் மாறிவிட்டிருக்கும். நீங்களும், அடிவானமும், காணி நிலமும், மயில் அகவும் பாறை மலைகளும், சூரியனாலும் சந்திரனாலும்  மழையாலும் நிரம்பி தளும்பும் வெளியும், பிரித்தறிய முடியாதவாறு வரும் மாலை நேரங்கள் மாறாது வந்தபடியே இருக்கும். 

Tuesday, February 08, 2022

விசாரணை அதிகாரி - The Grand Inquisitor

விசாரணை அதிகாரி - - The Grand Inquisitor , Chapter from Brothers Karamazov

ஷங்கர்ராமசுப்ரமணியன் அவர்களின்  மொழிபெயர்ப்பில் ஆர் சிவகுமார் அவர்களின் செம்மையாக்கத்தில் நூல்வனம் வெளியீடு. 


இரண்டு கடவுள்கள்

எனக்கு அற்புதங்கள் நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது, இந்த சிறிய வாழ்வின் அத்தனை அகலமான ஆசைகளும் எப்படியாவது ஒரு நாள் பூர்த்தியாகும் என்று நம்பவே விரும்புகிறன்,  சிறிய ஆசைகளையும் துற என்பவரிடமும் எதேச்சை என்பவரிடமும் கர்மவினை என்பவரிடமும் என்ன பதிலுரைப்பது ?

சர்வ வல்லமை படைத்த ஒருவனை காணுகையில் மனம் மகிழ்கிறது. அவ்வல்லமை கொண்டு அவன் ஆக்குகிறான் என்று ஒரு தரப்பும் அழிக்கிறான் என்று இன்னொரு தரப்பும் சண்டையிடுகின்றனர். ஆனால் ஆக்கலும் அழித்தலும் தாண்டி அவ்வல்லமையின் கொக்கரிப்பு அல்லது அது குறித்த ஜம்பம் ஒன்றே நமக்கு இன்றளவிலும் போதுமான ஒன்றாக இருக்கிறது. சரணாகதி இத்தனை இனிமையாக இருக்கையில் Who wants Freedom என்று பஷீர் கேட்கிறார்.


நம் தேவைகளின் ரகசியம் தெரிந்த ஒருவனே நமக்கு கடவுள் -  உணவு மட்டும் அல்ல நம் மனதின் அத்தனை அபிலாஷைகள், வக்கிரங்கள் ஆட்டம் போட அனுமதிக்கும் கடவுளை நான் வணங்குகிறேன், மனதை அடக்க கூறும் கடவுளை, நற்குணங்களை பட்டியலிடும் கடவுளை தந்திரமாக தவிர்க்கவே விரும்புகிறேன்.


ஆனால்,நினைத்திருந்தால் நிகழ்த்தியிருக்கக் கூடிய அற்புதம், அடைந்திருக்கக் கூடிய அதிகாரம், தேவையான பொருளை அளித்து அடைந்திருக்க கூடிய நிறைவு இம்மூன்றையும் அளிக்காத  கடவுளின் வருகைக்காக ஏதோ ஒரு காரணத்தால் காத்திருக்கிறேன். 


அது வரை, கடவுளின் தூதர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் ஒரு முதியவரை,  சிறிது வெளிச்சம் காட்டிய அந்தக் கிழட்டுக் கடவுளை முத்தமிட்டு மகிழ்கிறேன். 

Monday, February 07, 2022

Sea of Poppies - Amitav Ghosh

Masterful , Moving Portrait of  Lives in first half of 19th Century in  British Colonial India with three parts Land,River and Sea. An Account of Atrocious Rule of the Merchant class and Sea Faring English Men. A  journey begins through the handiwork of destiny's far reaching hands. Greatness lies in using the backdrop subtly we never feel the historical back drop trying to outproject itself as the Novel.  What we have is a moving and poetic prose on handiwork of destiny interwining lives of so many people in so many different ways with astonishing details. Might be Tempted to perceive this novel in a metaphoric tone attributing each  character's  background to a  specific historical narrative, we can attempt and resist. 


Few Extraordinary details , moments which I cherished - Shark mistaking betel juice for blood of an animal, Bees and insects submerged in poppy syrup not removed by farmers to increase weight, Ship anchored on Ganga Sagar on crevice of land about to slip in abyss of sea, Gayatri Mantra gets a astonishing Physical reference as ship enters the black water sea prayers of the inmates of the ship using Gayathri Mantra, Raja Neel s entire character arc is tremendously written as an epitome of Dignity and Contemplation even during the Times of Strife, A wedding celebration and a pregnant mother realising first kick of her baby and husband feeling it while on board with gleaming smile seen through the darkness of the night. 

While reading I was reminded of  similar novel I have read in Tamil written by Pa Venkatesan -  Thandavarayan Kathai. Sea of Poppies is filled with detailed imagery giving life to  both Ghastly and Cherishable moments of Life with Atrocious Colonial rule of law unfolding in the background.