Sunday, August 22, 2021

இக்கதை தொடங்காமலே முடிகிறது - சயன் சகோதரர்களின்

சயன் சகோதரர்களின் 'இக்கதை தொடங்காமலே முடிகிறது' "இழந்த சொர்க்கம்" குறித்த நேர்மறையான கனவுகளுடன் வந்திருக்கும் பிரதி, இங்கு சொர்க்கம், 'தூய' 'கறைபடாத' 'கலப்படம்' இல்லாத 'குழப்பங்கள்' இல்லாத ஒரு 'அன்பான', 'பூச்சு' இல்லாத 'முகமூடிகள்' அற்ற, 'மனிதஅறிவு' தலையிடாத  பழைய காலம் என்ற பொருளில் வருகிறது. 


ரொமான்டிக் என்று கூறலாமா என்று தெரியவில்லை, ஆனால் உணர்வு பூர்வமான ஒரு கனவின் வெளிப்படாக இந்த கதை அ கதைகள் இருக்கின்றன.  

கதையின் பிரயத்தனம் முதலில் களைய வேண்டிய பிரிவுகள் அ வேற்றுமைகள் குறித்த ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றன, மேலும் முன்னகர்ந்து இத்தனை கால சிலந்தி அடைசல்களையும் களைந்து இயற்கையுடன் இணையும் ஒரு முயற்சியாக நம் உடலையும் உடல் குறித்த எவ்வித பேதமற்ற பிரக்ஞையையும் இக்கதை முன்வைக்கிறன.  உடல் குறித்த நேர்மறை பிரதியாக , உடலின் மீது படர்ந்து செல்கிறது இந்தக் கதை. உடல்களின் இணைவை, கலவியை ஆதி ஆற்றலின் செயலூக்கத்தின் ஆவேசத்தின் இயலாமையின் அதிகாரத்தின் ஒரு பகுதியாக, வடிகாலாக காணாது அன்பின் விதைப்பாக காண்கிறது. என்றோ தொடங்கிய இந்த இருமையே இக்கதையின் அடிநாதமாக இருக்கிறது. அன்பின் விதைப்பிற்கும், பிரிவின் விதைப்பிற்கும் காரணமான இயற்கை கீற்று அமிலத்தின் (DNA)கதை தானா மனித வரலாறு ?. DNA என்பதன் இந்த மொழியாக்கம் ஆசிரியர்கள் செய்திருப்பது, நன்றாக அமைந்த ஒன்று.கணியன் கூறிய புணை போல் ஆருயிர் இந்த இயற்கை கீற்று அமிலமோ? 

கதையின் உச்சப்புள்ளியாக இந்த அன்பின் விதைப்பை இணைவை நாம் கண்டுகொண்டால் மேலதிக கேள்விகளுடன் பிரதியை தாண்டி நாம் இன்றைய நாகரீகத்துக்குள் இறங்கலாம்.  கொல்லும் நோக்கம் இல்லை எனினும், எல்லை காப்பதற்கும், உணவிற்கும் நடக்கும் கானுயிர் இயக்கம் நமக்கு சொல்ல வருவது என்ன ? எறும்பு முதல் சிங்கம் வரை , பாசி முதல் ஆகாயத்தாமரை வரை, கள்ளி முதல் ஆலம் வரை உயிர்களை இயக்குவது எது ? கதை விவரிக்கும் நீர் துளிகளின் காதல் என்ற கவிமனம் அருகே மெர்வின் ஹாரிஸ் எழுதியுள்ள "The Naked Ape" என்கிற விலங்கியல் புத்தகத்தை வைத்தல் அபாண்டம் எனினும் நாம் முயல்வோம். உடற்கூறியல் மற்றும் மரபணு கதைகளின் படி மனிதன் கானுயிர் வரிசையின் முடிசூடா நாயகன். கலாச்சார வெற்றி அல்லது தோல்வி வெகு பின்னே வருகிறது, உடல் கூறு அமைந்த விதத்திலேயே மரபணு அமைந்த விதத்திலேயே தன் உடல் தவிர்த்த பொருட்களை உபயோகித்து தன் இருப்பை நிலைநாட்டியவன் மனிதன்.கலாச்சார நடவடிக்கைகள் மிக சொற்பமான அளவே அவனை மட்டுப்படுத்திறது என்கிறார் மெர்வின்.  அதே நேரத்தில் போர்களின் trauma தாக்கம் மரபணுக்களில் பதிகிறது என்றும் நாம் காண்கிறோம்.இலக்கிய பிரதியான இந்த கலாச்சார முயற்சியும் அவ்வகையே, இழந்த சொர்க்கம் பற்றி பேசும் கதை எனினும், அது தன் விழைவை, வேற்றுமைகள் நீங்கிய எதிர்காலத்தை நோக்கியே வைப்பதான எத்தனிப்பை கொண்டுள்ளது.  இதே கனவை நாம் தத்துவங்களிலும் சமூக இயங்கியல் தளங்களிலும்  கண்டிருக்கிறோம். இன்னும் வரும். 

Friday, August 20, 2021

மனிதர்கள் - நா கிருஷ்ணமூர்த்தி

சிறிய சிறிய திரிபுகள், கோணல்கள் அமைந்த கணங்கள், மனிதர்கள் பற்றிய கதைகள் இவை . இந்த கோணல்களின் வார்ப்பில் கூட ஒரு முழுமை இருக்கிறது . அவசர கோலத்தில் மட்டுமே வருகிற கோணல்கள் அல்ல நின்று நிதானித்து வரும் திரிபுகள் மாதிரிகள்.


அவற்றின் அழகே ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு ரூபங்கள் எடுப்பது தான் . "மனிதர்கள்" கதையில் அபாண்டாமாகவும், "உதிரும் மலர்கள்" கதையில் லௌகீகமாகவும், "ஒர் இரவின் பிற்பகுதி" கதையில் திகைக்க வைக்கும் அழகாகவும் அதட்டலாகவும, "வருகை" கதையில் லட்சிய முகமாகவும், "நிழல் மரத்தில்" புகழின் நிழலாகவும் இந்தத் திரிபுகள் வண்ணம் காட்டுகின்றன. இவ்வகை கதைகள் திரிபுக்கான காரண காரிய ஆராய்ச்சிகளில் இறங்காது கோணல்களின் முழு சொரூபத்தை நமக்கு காட்ட முயல்கின்றன. இருந்தும் துளி கூட அவநம்பிக்கை ஊட்டாத வகையில் கதை சம்பவங்கள் யதார்த்த பாணியில் நடந்து முடிகின்றன.

ஒப்பு நோக்குகையில் தொகுப்பில் உள்ள "காலமேனும் தூரம்" கதை சற்றே விலகி வேறொரு பின்புலத்தில் நிகழ்கிறது. அனைத்து கதைகளும் அறுபதுகளில் "நடை" மற்றும் "கோணல்கள்" தொகுப்பிலும், "வருகை" கதை 1971 ல் "கசடதபற" விலும் வெளிவந்துள்ளன.

இந்நூலிற்கு உஷாதீபன் அவர்கள் எழுதிய விமர்சனமும் (ஜெயமோகன் அவர்கள் தளத்தில்), மாமல்லன் அவர்கள் கொடுத்த "நண்பர்கள்" கதை சுட்டியும் ( தினமணி) புத்தகம் வாங்கத் தூண்டியது, இக்கதைகளை வாசிக்கையில் நம் வாழ்வில் நாம் கண்ட திரிபுகளை அசை போட ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்.

Sunday, August 15, 2021

Summer of 92 - Navarasa

Summer of 92 (Navarasa) உட்பிரதி குறித்து, படம் பார்த்தவர்களுக்கு மட்டும். பெரும்பாலான இடங்களில கண்டிப்பாக சிரிப்பு வரவில்லை, ஆனால் "சிரிக்கிற விஷயம் இல்லை" என்கிற வகையில் படத்தின் உட்பிரதி அமைந்துள்ளது. படத்தின் பல சிதறிய அம்சங்களை குவித்து வைத்து காணவே இந்தப் பதிவு


படத்தின் பீரியட் ,சுதந்திரம் அடைந்த பத்து ஆண்டுகளில் நடப்பது போல் உள்ளது. அதே நேரத்தில் படத்தின் தலைப்பு Summer of 92 என்றும் , யோகியின் அல்லது innocent ன் வெற்றிகள் நிகழும் காலம் என்கிற நினைவும் படம் பார்க்கும் நமக்கு எழுகிறது, இந்த கலவையான கால உணர்வு தலித்துகள் நிலை மற்றும் எழுச்சி பற்றி அறிந்து கொள்ள ஒரு  வசதியான திரை ஏற்பாடாக நாம் கருத முடியும். 

படத்தின் நாயகன் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை, ஆனால் பள்ளி ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்கி, எப்படி தன் பள்ளி படிப்பு தடைப்பட்டது என்றும், படிப்பு அல்லாத காரணங்கள் எப்படி அவனை பள்ளி கல்வியை முடிக்க விடாமல் செய்தது என்றும், படித்து முடித்தாலும் அவனுக்கு அமைய இருக்கும் வேலை மலையக தோட்டத்தின் தொழிலாளர் வேலை என்றும் கூறுகிறான். படிப்பு என்ற ஆயுதத்தின் எல்லை எவ்வாறு மட்டுப்படுத்த படுகிறது கருத இடம் உள்ள சிறிய கண்ணி இது, மேலும் படிப்பை தடுத்து நிறுத்தும் நிகழ்வுகளை " குற்ற பரம்பரை" , "செருப்பு" ," சண்டியரின் நாடக காதல்" என்ற வரிசையில் புரிந்து கொள்ள இடம் இருக்கிறது, இதே வரிசையில் வரும் படத்தின் கடைசிக்காட்சிகள் அமைந்துள்ளன.

வெள்ளைக்கார நாயை விரட்ட நடக்கும் ஒப்பந்தங்கள் - நம் சுதந்திர போராட்ட வரலாற்றை நில மற்றும் கல்வி உடைமை சாதிகளின் அரசியல் அதிகாரத்திற்கான போட்டி Vs அடித்தட்டு மக்களின் உணர்வெழுச்சியான பங்கெடுப்பு என்று ஒரு புரிதலுக்காக எளிமையாக வகுக்கலாம், பின்னதே நம் போராட்டத்திற்கான ஆன்ம பலத்தை கொடுத்தது, தங்களால் தனியாக விரட்ட முடியாத வெள்ளைக்காரனை அடித்தட்டு மக்களின் துணை கொண்டு விரட்ட ஏற்பாடானது. அதுவே பல்லாண்டுகளாக இருந்த நிலம் x கல்வி உடைமைவாதிகளின் வேறொரு ஏற்பாட்டின் கீழ்மைகளை,  ஊருக்கு வெளியே இருந்து, அதே வெள்ளைக்காரன் வழி நம் வீட்டின் வரவேற்பறைகளுக்கு கொண்டு வந்தது, முன்பே கூறியது போல் இது சிரிக்கும் விஷயம் அல்ல. வைதீகர்கள் உரம் என்றால் சண்டியர் Schrödinger's Cat என்கிறார்.

பல ஆண்டுகள் கடந்தும் இவ்விஷயங்கள் நிலம் x கல்வி உடைமைவாதிகளை தொந்தரவு செய்கிறது. மன்னிப்பின் இடத்தில் முணுமுணுப்பை வைக்கிறார்கள்.

Wednesday, August 11, 2021

உப்பு வேலி - ராய் மாக்ஸம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இறுதி வரை தொடர்ந்த , சிறுக சிறுக அமைக்கப்பட்டு உறுதியான வேலியாக மாறி மக்களை சுரண்டி மாபெரும் பஞ்சங்களின் கோர பிடியில் தவிக்க விட்ட ஆங்கிலேயர் அமைத்த சுங்க வேலி குறித்து வரலாற்றாய்வாளர் ராய் மாக்ஸம் எழுதியுள்ள ஆதாரபூர்வமான நூலான "The Great Hedge of India " வின் தமிழாக்கம் இந்நூல், மொழிபெயர்த்தவர் சிறில் அலெக்ஸ், தன்னறம் வெளியீடு


ஆங்கிலேய ஜெனரல் ஒருவரின் நினைவலைகள் நூலின் அடிக்குறிப்பில் தொடங்கி (Bakewar) பகெவார் வரை நீண்ட பயணம் இந்த நூல். அந்த அடிகுறிப்பிலிருந்து ஆங்கிலேய அரசு ஆவணங்களின் வழி, புவியியல் துறை வரைபடங்கள் வழி, இந்திய நண்பர்கள் துணையோடு gps கருவியின் எண்ணற்ற எண்களின் வழிகாட்டுதலில், வழிபோக்கர்களின் நண்பர்களின் உற்சாகமும் கேலியும் உந்தி தள்ள ராய் அவர்கள் கண்டடைந்தது என்ன என்பதை என் வாசிப்பில் தொகுத்துக் கொள்கிறேன்

கிஞ்சித்தும் இரக்கம் இல்லாத ஒரு அமைப்பு எவ்வாறு உருவாகிறது என்பதற்கான சாத்தியங்களை ராயின் சொற்களில் நாம் அறிந்து கொள்கிறோம், தனி நபரின் பேராசையாக தொடங்கி பின்னர்  கம்பெனியின் ஒப்புதலோடு குறிப்பிட பங்குதாரர்கள் சூறையாடும் களமாகி அதையும் தாண்டி ஆங்கிலேய அரசின் ஒப்புதலோடு  சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சூறையாடும் அமைப்பாக படிப்படியாக மாறுகிறது 

1857 க்கு பிறகான நேரடி  கட்டுப்பாட்டிலும் இந்த அமைப்பு தன் நாச வேலையை செவ்வனே செய்தது  குறிப்பிடத்தக்கது, தானியங்கள் பதுக்கல் , நிலவரி போக உப்பின் மீதான வரி, பதுக்கல் பாமரமக்களின் உயிர்களை சிறுக சிறுக உறிஞ்சி, தாது வருஷ பஞ்சங்களின் போதும் உப்பு வரியை கடுமையாக வசூலித்து ஒரு மானுடத்தன்மையற்ற சுங்கவேலியை தனது வருவாய் ஈட்டும் எந்திரம் ஆக்கியது ஆங்கிலேய அரசு.  இதை ஆங்கிலேய அரசின் அதிகாரிகளின் வருடாந்திர குறிப்புகளிருந்தே நிறுவுகிறார் ராய், இன்னொரு நம்ப முடியாத தகவலாக AO Hume அவர்கள் சுங்க ஆணையராக இவ்வேலியை பராமரிப்பதிலும் நீட்டிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறார், ஏனைய மாகாணங்களை விட வங்கம் பெருமளவு உப்பு வேலியால் பாதிக்கப்பட்டிருந்தது.

ஏனைய நாடுகளில் இருந்த உப்பு வரிகள் குறித்த பார்வையும் , உடல் நலத்திற்கு தேவையான இன்றியமையாத ஒரு பொருளாக உப்பு இருப்பதையும் நிறுவுகிறார், வேலியின் எச்சங்களை காண இந்திய கிராமங்களில் நடையாக நடக்கிறார், ஒருவருக்கும் இது குறித்து எதுவும் தெரிவதில்லை, ஒரு சில முதியவர்கள் "பர்மத் லயின்" என்ற அளவிலேயே அதை அறிந்து கொண்டுள்ளனர், 90களின் இறுதியில் ராய் தன் கள ஆய்வை மேற்கொண்டார், 150 ஆண்டுகளுக்குளாகவே மக்கள் பிரக்ஞைலிருந்து இவ்வேலி மறைந்து விட்டதை நம்ப முடியவில்லை, வேலி கைவிடப்பட்ட 50 வருடங்கள் தாண்டி காந்தி தண்டியில் உப்பு சத்தியாகிரகம் செய்ததை ஒத்துழையாமை குறித்தே நாம் இணைத்துப் பார்த்தாலும், உப்புவேலி குறித்து ஏதேனும் ஒரு வகையில் காந்தி அறிந்திருப்பார் என்றெபடுகிறது. நம் பாட புத்தகங்களிலும் இவ்வேலி குறித்து எந்த முக்கிய இடங்களும் இல்லை , இது வருந்தத்தக்க விஷயம். 

ஆங்கிலேய மேலாதிக்கத்தின் ஒரு அலகான இந்த உப்புவேலி குறித்தே ராய் வரும் வரை நமக்கு தெரியவில்லை என்றால் ஏனைய துறைகளின் வேலிகளை கண்டறிய நாம் இன்னொரு ராயின் வருகைக்காக காத்திருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

மரபை குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு எல்லை என்றால் அப்பட்டமான சுரண்டல் அமைப்பை குறித்த நேர்மையான பார்வையை கூட வைக்க இயலாத மலட்டுதன்மை இன்னொரு எல்லை, ஜெயமோகன் அவர்கள் முன்னுரையில் கூறுவது போல் நம் சம கால உளவியலை தீர்மானிக்கும் சக்திகளாக இப்பெரும் பஞ்சங்கள் அமைந்தன. 

பகெவாரின் கருவேல மரங்களும் இலந்தை முள் செடிகளும் பின்னிய இந்த வேலி பெரிதும் கவனப்படுத்த படாத பல்லாயிர மைல்கள் நீண்ட உப்பு வேலியின் எஞ்சிய கள சாட்சி.

Monday, August 02, 2021

Hindu Religion An Enquiry by Srinivasa Ramanujam

 

Discussion on Possibilities and Challenges against the premise of Hindu Rashtra dream of RSS


Doesn't account for Marxist, Mythological reading of India, Doesn't account for Nationalistic Fervour of Freedom Movement, Doesn't take into account the relative absence of Violence in Society compared to other parts of the world

Largely Reduces the Role of Mutt to inactors without taking into account that their predominant duty is to sustain the Legacy of their forefathers


Interesting Informative  read 


-------------

Notes 

Approaches of Adisankara and RSS similarities

Hindu Religion formed after destroying peasants and Saints - Devadevan ?

Supremacy of RSS head over Ruling Government

-------

Overarching We Hindu Theme over several infinite Other Me themes underneath

Is RSS a Hindu Mutt in addition to being a religion

Difference between We Hindu Vs Other Me s We s

We Hindu Vs Virat Hindu of Golwalkar

Societal Need for Other We s 

Basis on Brahmin Supremacy  or Supremacy

For Buddhism and Jainism Supremacy is in Sainthood

For Bhakti Movement it is in Kudumbasthan or Practical or Materialistic

For RSS Hindu Nationalism

-----------

Sankarar s established Pure Brahman who is beyond all Varna s who is beyond all Rituals 

Similar RSS calls for We Hindu which tries to assimilate or reject numerous other We s beneath for the nationalist goal

Golwalkar gets Sainthood but returns back to RSS Mutt as a Hindu

Can a pure Brahman can be a Hindu , No is the Answer 

But Golwalkar has a valid point that saints across caste creed travelled length and breadth of the country to forge cultural Unity 

Supremacy as a tactical tool or as a notion across creates various groups establishing their Supremacy though they themselves were carved out as an opposition to some another supremacist view - crux of whole article

Why We Hindu cannot include Christians and Muslims

Notion of Supremacy in Hinduism Vs God & Ambassadors of Gods in other religions 

Difference between Sainthood and RSS Mutt Hood - Is Individual Liberation a valid goal for Mutt Hood

Adi Sankarar s Pure Brahman as an answer to Buddhist concept of Sainthood still retaining lovkeega  Ritualistic Status of Kudumbasthan aka Kudumba Brahman 

Is Kudumba Brahman a supplemental to Pure Brahman 

Metaphysical nature of Goals in Both RSS and Sankara Approaches - Debatable

Supremacy Vs Untouchability hand in hand movements

Supremacy handed out culturally by Brahmins to Others , Non Brahmins use  Supremacy as a Political Tool against Brahmins, Dalit use this Supremacy concept politically against Non Dalits 

Role of Individual Goals in RSS We Hindu Canopy 

Role of Family in extending Supremacy and Untouchability

Is RSS Mutt distinctly cut from functioning Society

How Gandhi fought against Untouchability in his Ashrams , 

Gandhi s We Hindu vs RSS A We Hindu 

RSS example of community without caste creed is like factory workers working in a factory, less influence on Practical real challenges in handling Untouchability in real life whose unit is a functioning Family

Is RSS a counter part to Vatican, a mega mutt

How Hinduism absorbs  all other sect Sikhism Saivete Vaishnnavaite Buddhist Jainism by the thread of Brahmanical Supremacy 

Islam, Christianity or Any other Individual government doesn't have interaction points like above with Hinduism, They operate on Different plane 

----------


RSS and Government

Historical King - Brahmin - Sainthood Axis before and After Sankarar

After Sankarar both Brahmins and Sainthood became mixed 

RSS as an independent Organisation away from Societal crutches , A Pure Dream ,RSS as a Rajarishi Role to Government , Dispute resolver, A Non Responsible Controlling Force of the Government, staying Away from vote politics to maintain its puritanical self away from uncomfortable questions of democratic set up 

Role of Intermediary for attaining people s goals both in religious and non religious spheres, God , Priesthood and Government  in between people , Jewish question by Marx 

Absence of Intermediary in Hindu , Priesthood part of people set up and Sainthood beyond the concept of God resulting in complete absence of Intermediary in current setup of Hinduism , Brahmanical or Simple Supremacy being played out mutually between societies which makes it unique,

Fight between Intermediaries Religion and Government resulted in New concept of Democracy and Secularism

How to understand secularism in Indian context where the clash between Intermediaries has not happened and only Supremacy as a notional tool exists. If secularism is acceptance of diversity then Hindu Religion is more diverse and secular than any other resulting in advantageous position for RSS narrative , a rebuttal to Shashi Tharoor

Metaphysical goal, Body is Land and People, Dress is Government and Soul is Culture - RSS being in Sainthood rejects human bodies as impure hence establishing its Supremacy

Democratic Government neutralises this Supremacy which sustains itself through other means which need to be dealt to win over RSS 

Metaphysical RSS goals has to  delinked to historical Hindu practices and Mutt Activities and Cultural, Philosophical enquiry into Mutt needed to fight against the notion of Supremacy which sustains itself in many forms by reinventing itself 

----------------

Role of Foreigners Jesuits  in defining Brahmin as a focal point of Hindu Religion, Oriental studies equated Christian Religiosity  aka Christian Father ship with complex Brahmin X Priest hood X Saint Hood set up existing in India. This led to Brahmin centricity which is still embedded in Our thought process in explaining History and Indian Religion 

Examination of a Particular caste is essential in caste annihilation , instead we have general Caste Abolition goals which are not exactly helping the cause

Hindu, Non Brahmin, Dalit  are new coinages or political identities foisted as New Reality over separate individual caste identities which are there ever since, Supremacy as a notion is present in all caste identities, Supremacy and Untouchability go hand in hand , Caste can only be annihilated only if we question the intrinsic Untouchability supremacy notion present within a sect,  Each sect cleverly subverts Untouchability as an aberration of the other instead it has to own the aberration as its own, This will help the New coinages Hindu, Non Brahmin, Dalit to enter cultural sphere in addition to being successful in Political Sphere 

கொனஷ்டை படைப்புகள்

கவிஞர் ராணி திலக் தொகுத்து எழுத்து பிரசுரம் வெளியீடாக வந்திருக்கும் மணிக்கொடி காலத்து எழுத்தாளரான கொனஷ்டை அவர்களின் கதை கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு "கொனஷ்டை படைப்புகள் ".  அதிக பிரசங்கி , சந்நியாசி, ஈசுவர லீலை, தெய்வச்செயல் ஆகிய கதைகளும், 'ஊருக்குள்ள யாத்திரை' மற்றும் 'எங்கள் ஊர்' கட்டுரைகளும் பிடித்ததாகவும் நன்கு அமைந்து வந்ததாகவும் படுகிறது. 


முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்டுள்ள இக்கதைகள் "இவற்றை மதிப்பிடுவதும் எடை போடுவதும் அவசியமற்றது, அவை அந்த காலத்தின் நவீன எழுத்துக்கள்" என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் கூறியதாக முன்னுரையில் கவிஞர் ராணி திலக் குறிப்பிடுகிறார், இதை அப்படியே ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும் பெரியவர்கள் கூறுவதில் விஷயம் இருக்கும் என்றே புரிந்துக்கொள்கிறேன்

எனக்கு பிடித்த மேற்சொன்ன குறிப்பிட்ட கதைகளும் கட்டுரைகளும் இன்றளவும் புதுமை குன்றாது அமைந்திருக்கின்றன. இந்த சில கதைகளின் வடிவமும் உள்ளடக்கத்தின் பாய்ச்சலும் நவீன கதை கட்டுரைகளுக்கு சளைத்தது அல்ல, ஏனைய கதைகள் மெலிதான ஹாஸ்யத்தின் துணை கொண்டு புராணம் , துப்பறிவு, காதல், அச்சு இதழ , சினிமா நட்சத்திர மோகம் ஆகிய தளங்களில் நிற்க முயல்பவை. சில கதைகள் வடிவ அல்லது வாசகர் மனதுடனான ஒரு சீட்டு விளையாட்டு எனக் கொள்ளலாம். இம்மதிப்பீடுகள் ஒரு வாசிப்பு கணத்திற்காகவே, கதைகளில்  அமைந்த தயவு தாட்சண்யம் இல்லாது அனைத்தையும் கிண்டல் செய்யும் இடங்களை ஹாஸ்யங்களை நவீன வாசகன் ரசிக்கவே வாய்ப்பிருக்கிறது. 

இந்நூல் வெளி வந்த விதம் குறித்து ராணி திலக் குறிப்பிடும் விதம்  சுவாரஸ்யம், மூத்தோர் வாக்கும் , தேடலும் , கடவுளின் ஆசியும், எதேச்சையும் கலந்து நம் கைகளில் புத்தகமாக வந்தமைந்திருக்கிறது "கொனஷ்டை படைப்புகள்".  முதல் புத்தகம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாசிப்போம்.