Saturday, April 23, 2022

மாஸ்டர் ஒரு சாதா டீ ! - வா.மு. கோமு

மாஸ்டர் ஒரு சாதா டீ ! - வா.மு.கோமு



நான்கைந்து பக்கங்கள் கொண்ட முப்பது கதைகளின் தொகுப்பு, வாசகசாலை வெளியிட்டுள்ளது. கதைகள் முப்பதையும் சாராம்ச படுத்திப் பார்க்கையில், நல்விழுமியங்களுக்கும் வாழ்க்கை அவ்விழுமியங்களை தழைக்க, விடுக்கும் சவால்களுக்கும் இடையேயான ஒரு போட்டியாக அமைந்துள்ளதை உணர முடிகிறது. பெரும்பாலும் நல்விழுமியம் வெற்றிப் பெற்று விடுகிறது, அல்லது இந்தக் கதைகள் அப்படி முடிகின்றன, சில கதைகளில் விழுமியம் சற்று பிழையான பழைய ஒன்றாக தோன்றுவதால் தூக்கி வீசப்படும்படி  யாகி விடுகிறது. இக்கட்டான சூழ்நிலையின் உடனடி முடிவுகள் அதிர்ச்சியாகவும் சிரிக்கும்படியாகவும் நியாயமானதாகவும் அமைந்திருக்கின்றன. சிரிப்பது நியாயமா என இலக்கிய வாசகன் கேட்கக் கூடும்,வேறு வழி இல்லை,அப்பட்டமாக எழுதப்படும் வாழ்க்கைக் குறிப்புகள் சிரிப்பை வர வைத்தால் யார் என்ன செய்ய முடியும், சிரிப்பை தாண்டி சம்பந்தபட்டவர்களின் துயரம், அடி, அலைச்சல் நம் கவனத்தில் இருப்பதாகவே கதைகள்  அமைந்துள்ளன, வெறும் சிரிப்பு மூட்ட மட்டும் இக்கதைகள் எழுதப்படவில்லை - கதைக்களனும் கதைமாந்தரும் பொருளாதாரத்தில் கிடை மட்டத்தில்  உள்ளவர்கள், விளையாட்டாக இக்கதைகள் தொடும் இடங்கள் கனமானானவை, கதை மாந்தரின் ஆசை, காதல், லட்சியம், சுதந்திரம், கிறுக்குத்தனம், அவசரம், தியாகம், பக்குவம், சாமர்த்தியம், பயம்,  கதைகளாகி இருக்கின்றன, ஆசிரியரே பின்னட்டையில் குறிப்பிடுவது போல எந்த யுக்திகளையும் பயன்படுத்தாத நேரடிக் கதைகள் இவை. 

No comments: