Wednesday, November 17, 2021

1945இல் இப்படியெல்லாம் இருந்தது


அசோகமித்திரன், கச்சித மன்னன் , ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று சும்மா ஒரு கேள்வியை போட்டு பதிலை வேறொரு இடத்தில் கூறுவதில் மன்னன், பெரியவர் உலகங்களில் நுழைய முயலும் குழந்தைகள், சலித்து கொண்டே இருப்பவர்கள், மௌனமாக பாரங்கள் அனைத்தையும் ஒரு சொல் கூட கூறாது ஏற்றுக்கொண்டவர்கள், பொது நியாயம் என்ற ஒன்று தொடர்ந்து உள்ளது என்பதை உணர்த்தும் வகையிலான எழுத்து , அத்தனை சலிப்பும் அதன் காரணிகளும் விலகப்போவதில்லை தொடர்ந்து இருக்கப்போகிறது என்பதை உணர்த்தும் எழுத்து, எதேச்சையின் கரம் குறித்தும் நிஜத்திற்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி குறித்து நுட்பமான பார்வைகள் மக்கள் மிகவும் போராடி தான் வாழ்கிறார்கள் என்பதையும் அதே நேரத்தில் மரபு சார்ந்த விஷயங்களை உரிய மதிப்பு கொடுப்பவர், மொத்த பழியை மரபின் மீது போடாது அதே நேரத்தில் மரபின் நெகிழ்வை மரபு சடாரென விலகும் இடங்களை அறிந்த கலை மனம் உடையவர் 

No comments: