நம் ஆணவம் நொறுங்க
நம் தொடர்ச்சி அறிய
நம் எல்லைகள் புரிய
பூரண ஸ்திதியின் செழுமை உணர
நம் ஆன்மீகம் உயிர்ப்புடன் இருக்க
நம் விழிப்பு குறித்த போதம் தொடர
நம் இருப்பின் சாரம் விளங்க
வாசிக்க வேண்டிய புத்தகம்.
நம் ஆணவம் நொறுங்க
நம் தொடர்ச்சி அறிய
நம் எல்லைகள் புரிய
பூரண ஸ்திதியின் செழுமை உணர
நம் ஆன்மீகம் உயிர்ப்புடன் இருக்க
நம் விழிப்பு குறித்த போதம் தொடர
நம் இருப்பின் சாரம் விளங்க
வாசிக்க வேண்டிய புத்தகம்.
சிவப்பிரகாஷ் அவர்கள் எழுதிய "குரு ", 'பத்து வாயில்கள்' முன்பே வாசித்தது. "அன்றாட யோகி " வாசித்ததும் தோன்றியது..
குரு - பத்து வாயில்கள், திட்டவட்டமான மிகவும் செறிவான உள்ளடக்கம் கொண்ட, ஒரு ஆன்மீக கையேடு போன்ற புத்தகம்.
அன்றாட யோகி - சிவப்பிரகாஷ் அவர்களுடைய தனிப்பட்ட ஆன்மீக அனுபவங்களின் நேரடியான அப்பட்டமான பதிவு. ஆன்மீக சாதனா குறித்தும், அசாதாரண அனுபவங்கள் குறித்தும், குரு சொல்லும் வழியில் செல்வது குறித்தும், குருவுடனான உறவு குறித்த முக்கியத்துவம் குறித்தும், குரு மற்றும் மகான்களின் அற்புத லீலைகள் குறித்தும் கடவுளுடன் உரையாடும் தெய்வ மனிதர்கள் குறித்தும் அமைந்துள்ள புத்தகம்.
குரு, பத்து வாயில்கள் - அனைவருக்குமான தியரி,
அன்றாட யோகி - சிவப்பிரகாஷ் அவர்களின் பிராக்டிகல்.
சிவஞானம், நாலாவது சார் இரு நெடுங்கதைகள் உள்ள புத்தகம்.
சிவஞானம்
பிறப்பு எதை முடிவு செய்யும், வளர்ப்பு எதை முடிவு செய்யும் என்பதை யார் அறிவார்?
நம் தவிப்பு திரிசங்கு,இடைக்கழி.
இரு வெளிச்ச புள்ளிகளுடன் வரும், நாம் செல்ல வேண்டியது என நினைத்து ஏறிய, எதிர் புறம் செல்லும் பேருந்து.
நாலாவது சார்
சம்பந்தம் அற்றது என்று தோன்றும் பல்வேறு நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று சம்பந்தபடுத்தி கொள்வது போல் அமைந்த கதை. சாது மிரண்டால், காசி விஸ்வேஸ்வர் சிறிய கிராமத்திற்கே வந்து விடுவார் என்றும் புரிந்து கொள்ளலாம், நுண்மையமான பல அடுக்குகள் கொண்ட கதை, வாசிப்பவர் அவருக்கு தோன்றும் வகையில் நிகழ்வுகளின் ஆரம் கோர்க்க கதை பல தளங்களில் பொருள்படும்.